Sunday, December 11, 2005

திருமாவின் பிம்பம்

திருமாவளவனின் சமீபத்திய செயல்பாடுகள் அவருக்கு அதிக எதிர்ப்பை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. திருமாவைப் பற்றி பேசினால் செருப்பால் அடிப்பேன் என்று உணர்ச்சி வசனம் பேசியவர்கள் எல்லாம் இன்று சட்டி சட்டதடா என்ற வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திருமாவை எழுச்சித் தலைவன் என்று கூறியவர்கள் எல்லாம் இன்று எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. திருமாவைப் பற்றிய மிகப் பெரிய பிம்பம் தகர்ந்து போயிருக்கிறது.

இதனால் எனக்கொன்றும் சந்தோஷம் இல்லை. ஆனால் திருமாவை ஒரு எழுச்சித் தலைவனாகவோ, திருமாவை குறித்து எந்தவித பிம்பமும் உருவாக்காமல் அவரது அரசியல் பாதையை நான் கவனித்து வந்திருக்கிறேன். தமிழகத்தின் சராசரி அரசியல் தலைவர்களுக்கும் திருமாவிற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்றாலும் அவர் சராசரி அரசியல் தலைவராக வந்து தான் தமிழகத்தில் அரசியல் நடத்த முடியும். அதை செய்ய வேண்டிய நிலைமைக்கு அவர் வந்து விட்டார். டாக்டர் ஐயாவும் இதைத் தான் செய்தார். திருமாவும் அந்த நிலைக்கு இப்பொழுது வந்து விட்டார்.

அது தான் நம்முடைய அரசியலின் அவலம். இதனால் திருமா மேல் வைத்திருந்த பிம்பங்களை உடைத்து தூர எறிந்து விட வேண்டிய அவசியம் இல்லை. அவரது கட்சியின் தொண்டனாக இருந்து பார்த்து அவர் எடுத்திருக்கும் அரசியல் முயற்சிகளை புரிந்து கொள்ள முயற்சிப்பது அவசியம்.

1989ல் பாமக ஆரம்பிக்கப்பட்ட பொழுது அது குறித்து ஒரு மிகப் பெரிய ஆர்வம் வடமாவட்ட வன்னிய கிராமங்கள் எங்கும் இருந்தது. வன்னியர் ஓட்டு அன்னியருக்கில்லை என்ற கோஷம் உச்சகட்ட நிலையை எட்டியிருந்தது. முதல் தேர்தலே பாரளுமன்ற தேர்தல். ஒரு இடத்தில் கூட பாமக வெற்றி பெறவில்லை. ஆனால் தன்னுடைய பலத்தை பிற கட்சிகளுக்கு காண்பித்தது. மொத்த ஓட்டுகளில் 5% ஓட்டுகளை தனித்து போட்டியிட்டு வென்றது. தருமபுரியில் சுமார் 2.15லட்சம் ஓட்டுகள் பெற்று திமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளி காங்கிரஸ்-அதிமுக கூட்டணிக்கு அடுத்த இடத்தைப் பெற்றது. சிதம்பரம் தொகுதியில் சுமார் 1.75லட்சம் ஓட்டுகள், சுமார் 5பாரளுமன்ற தொகுதியில் சுமார் 1லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பாமக பெற்றது.

இந்த தேர்தலில் அதிமுக-காங்கிரஸ் வெற்றியை பெற்றது

பாரளுமன்ற தேர்தல் காரணமாய் வெற்றி பெற முடியவில்லை. சட்டமன்ற தேர்தலில் சுலபமாக சில தொகுதிகளை கைப்பற்றலாம் என்ற எண்ணத்தில் 1991 தேர்தலில் களமிறங்கிய எங்களுக்கு அப்பொழுது வீசிய ராஜீவ் காந்தி மரண அனுதாப அலையில் பாமக 1தொகுதியை மட்டுமே பெற்றது. ஆனால் அதே ஓட்டுவங்கியை தக்க வைத்துக் கொண்டது.

கட்சியின் இரண்டு தோல்விகள் தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியது. இவருக்கு வேற வேலையே இல்லை. இவரு மட்டும் கொள்கையை வைச்சிக்கிட்டு என்ன பண்ண போறார் என்பன போன்ற பேச்சுக்கள் அப்பொழுது பிரபலம். இது தான் சமயம் என்று கட்சிக்குள் புதிதாக வந்த பண்ருட்டியார் போன்ற தலைவர்கள் கட்சியை பிளவுபடுத்த முயற்சி செய்தனர்.
1996 தேர்தலில் ஜெயலலிதா எதிர்ப்பு அலை வீசிய சமயம், திமுகவுடன் கூட்டணிக்கு டாக்டர் ஐயா முயன்று கொண்டிருந்தார். சீட்டு தருகிறேன் என்று கூறிக் கொண்டே இருந்த கருணாநிதி கடைசி நேரத்தில் "மனதில் இடம் இருக்கிறது, கூட்டணியில் இடம் இல்லை" என்று நக்கலடித்தார். அந்த கருணாநிதி தான் பின்பு 8 பாரளுமன்ற தொகுதிகளை எங்களுக்கு கொடுத்தார் என்பதை நினைக்கும் பொழுது தமிழக அரசியலின் உண்மை புரியும்.

டாக்டர் ஐயா தனியாகத் தான் நிற்பார், தனக்கு எந்தவித நஷ்டமும் அதனால் இல்லை என்று கருணாநிதி நினைத்து வன்னியர்களுக்கு 1996ல் மிகப் பெரிய துரோகத்தை செய்தார். இதனை என்றைக்கும் வன்னியர்கள் மறக்க மாட்டார்கள். அந்த தேர்தலில் 15வருடங்கள் ஆளும்கட்சியாக இருந்த அதிமுக 4தொகுதிகளைப் பெற்றது. பாமகவும் 4தொகுதிகளை பெற்றது.

கட்சிக்குள் இப்பொழுது கடும்சலசலப்பு. தொண்டர்களிடையே விரக்தி. தொடர் தோல்வி. முக்கிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு கொண்டிருக்க இவர் மட்டும் என்ன பெரிய கொள்கைவாதியா இருக்கிறாரு என்று வெளிப்படையான கேள்விகள். டாக்டர் ஐயாவிற்கு எதிராக வன்னிய சிங்கங்கள் போன்ற இயக்கங்கள் எல்லாம் வளர தொடங்கின. கட்சிக்குள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டந்தோறும் அமைக்கப்பட எல்லா கூட்டங்களிலும் கூட்டணி வைத்தே ஆக வேண்டும். கருணாநிதிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கோஷங்கள்.

அடுத்த வந்த பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தார். எல்லா பத்திரிக்கைகளும் திமுக-மூப்பனார் கூட்டணி தான் வெற்றி பெறும் என்று எழுதிக் கொண்டு இருக்க அதிமுக-பாமக-மதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. வடமாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொகுதிகளை இந்தக் கூட்டணி தான் வென்றது. அப்பொழுது தான் பத்திரிக்கைகள் பாமகவின் பலம் மற்றொரு கட்சியுடன் சேரும் பொழுது பெறுகின்ற உண்மையான பலத்தை எழுதின.

அதன் பிறகு டாக்டர் ஐயா எடுத்த நிலைப்பாடுகள் பிரமிப்பை ஏற்படுத்தின. இவரா இப்படி என்று யோசித்தேன். சில காலம் இவர் குறித்த என்னுடைய பிம்பம் தகர்ந்து போனது. ஆனாலும் கீழ் மட்டத்தில் இருந்து பல நேரடி நிகழ்வுகள் பற்றிய புரிதல் எனக்கு இருந்ததால் இது குறித்து நான் கவலைப்படவில்லை. அந்த அரசியல் நிர்பந்தம் எனக்கு புரிந்தது.

அவ்வாறே திருமாவளவன் முதன் முறையாக அரசியலில் நுழைந்த பொழுது அவர் குறித்த பெரிய ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டது. எனக்கு அவரால் இதே நிலையில் அரசியலில் நீடிக்க முடியாது என்று தெரியும். சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட்ட பொழுது நடந்த நிகழ்வுகள் எனக்கு தெரியும். விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்த பொழுது தான் அந்த தேர்தல் நடந்தது. களப்பணிக்காக சென்ற என் ஊர் நண்பர்களுடன் நானும் அங்கு சென்றேன். அங்கு நான் கண்டது ஒரு மிகப் பெரிய சமுதாய பிளவு. அங்கு கட்சிகளுக்கிடைய போட்டி நடந்தது போல தெரியவில்லை. திருமாவளவனை தோற்க்கடித்தே தீர வேண்டும் என்ற வெறியில் திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளையும் சேர்ந்த பெருவாரியான வன்னியர்கள் பாமகவிற்கே வாக்களித்தனர். அது போல கடந்த தேர்தலில் நடந்த கடுமையான போட்டியில் கூட மாற்றுக் கட்சிகளை சேர்ந்த வன்னியர்கள் பாமகவிற்கு தான் ஓட்டளித்தனர். தலித் ஓட்டுகள் பலமாக திருமாவளவன் பின்பு அணி சேர்ந்தது. திருமாவளவன் தனித்து நின்று போட்டியிட்டு இரண்டாம் இடம் பெற்றார். ஆனால் அவர் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் கூட அதே ஓட்டுகளை தான் பெற்றிருக்க முடியும்.

மிகக் கடுமையான போட்டிக்கு பிறகு விடுதலைச் சிறுத்தைகளின் தொண்டர்கள் என்ன நிலைக்கு சென்றிருப்பார்கள் என்பது எனக்கு புரியும். ஏனெனில் ஆண்டிமடம் தொகுதியில் நாங்கள் கடுமையாக உழைத்தப் பிறகும் கூட முதல் தேர்தலில் சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தோம். அப்பொழுது எங்களுக்கு இருந்த மனப்பான்மை தான் திருமாவளவனின் தொண்டர்களுக்கும் இருந்திருக்கும். அடுத்த தேர்தலில் கடந்த தேர்தல் போல தொண்டர்கள் வேலை செய்ய மாட்டார்கள். விரக்தி அடைந்து விடுவார்கள். கட்சிக்கு பிரச்சனை வரும்.

தொண்டர்கள் கூட்டத்தை கட்டிக்காக்க வேண்டிய கட்டாயம் எல்லா அரசியல் தலைவர்களுக்கும் உண்டு. திருமாவளவனும் அதைத் தான் சேர்ந்தார். வன்னியர்களும், தலித்துக்களும் ஓன்று சேர்ந்தால் அது 100%வெற்றிக் கூட்டணி தான் என்பது ஓட்டுவங்கிக் கணக்கைப் பார்த்தாலே தெரியும். திருமா-டாக்டர் ஐயா இணைந்து எந்தக் கூட்டணியில் போட்டியிடுகிறார்களோ அந்தக் கூட்டணி தான் வடமாவட்டங்களில் வெற்றி பெறும். சாதாரண கூட்டல் கணக்கு தெரிந்த எல்லோருக்கும் இது தெரியும். திருமா அதைத் தான் செய்தார்.

இந்தக் கூட்டணியில் திமுகவில் சேர்ந்தால் இது வடமாவட்டங்களில் ஏற்கனவே அடித்தளம் இல்லாமல் இருக்கும் அதிமுகவிற்கு சரிவை ஏற்படுத்தும். அதே சமயத்தில் இந்தக் கூட்டணி அதிமுகவுடன் சேர்ந்தால் கருணாநிதியின் இறுதிக்கால முதல்வர் கனவு கானல் நீராகி விடும்,

இவர்களை வளைத்துப் பிடிப்பது தான் இப்பொழுது இரு பெரும் திராவிட கட்சிகளை வாட்டி வதைத்துக் கொண்டிருக்க போகிறது.

மற்ற்படி கலாச்சார காவலர்கள் மண்ணைக்கவ்வ போகிறார்கள் என்பது எல்லாம் நல்ல நகைச்சுவை. இவர்கள் தொடந்து ஒரே அணியில் இருந்தால், படுத்துக் கொண்டே ஜெயிக்கலாம்.

இது தான் திருமா கொள்கைகளை தூற எரிந்ததால் கிடைத்த நன்மை. இங்கு தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவருக்கும் வெற்றி வேண்டும். அதற்காக திருமா கொள்கைகளை துறந்ததில் எந்த தவறும் இல்லை. கொள்கைகளை கட்டிக் கொண்டு நல்ல பெயர் எடுத்து, வீட்டிற்கு சென்று இராமாயணம் பார்த்து கொண்டிருப்பதை விட அவர் முன்னிலைப்படுத்தும் மக்களை அதிகாரப்பீடத்தில் உட்கார வைக்க அதன் மூலம் நன்மைகளை செய்ய ஓரளவுக்காவது கொள்கைகளை துறப்பதில் தவறெதுவும் இல்லை,

இங்கு யார் தான் கொள்கையுடன் இருக்கிறார்கள். யாருமே கொள்கையுடன் இல்லாத பொழுது இவர்கள் மட்டும் கொள்கையுடன் மட்டுமே நடக்க வேண்டும் என்று பத்திரிக்கைகள் எழுதிக் கொண்டு இருக்கும். ஏ.சி. அறையில் இருப்பவர்களுக்கு களத்தில் இருக்கும் தொண்டர்கள் மனநிலை எங்கே தெரியப் போகிறது.

இந்த தலைவர்கள் தங்களுடைய மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு, டாக்டர் ஐயா வருவதற்கு முன் இருந்த வன்னியர்களின் நிலையையும், தற்போதைய நிலையையும் ஒப்பிட்டல் உள்ள நிலவரம் தெரியும். இதற்கு டாக்டர் ஐயா மட்டுமே காரணம் என்றும் அனைவருக்கும் தெரியும்.

Sunday, November 06, 2005

சந்திரிகாவும், ரத்த வெறியாட்டமும்

இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்களின் அரசியல் வாழ்க்கையின் இறுதிக்காலம் நெருங்கிக் கொண்டிப்பது இலங்கையில் இருப்பவர்களுக்கு கவலை அளித்ததாக தெரியவில்லை. ஆனால் நம்முடைய இந்து பத்திரிக்கைக்கு அது ஒரு கவலைக்குரிய விடயமாக தெரிகிறது. ஏனெனில் இந்துவின் நடுப்பக்க கட்டுரைகளில் அதிகமாக பாசமூட்டி, தடவிக்கொடுக்கப்பட்ட ஒரே தலைவர் சந்திரிகா அவர்கள் தான். உலகின் வேறு எந்த தலைவருக்கும், ஏன் இந்திய தலைவர்களுக்கு கூட கொடுக்காத மரியாதையை இந்து சந்திரிகாவிற்கு வழங்க தவறியதில்லை.

சந்திரிகா மறுபடியும் முக்கியத்துவம் பெற என்ன வழிகள் இருக்கிறது என்பது குறித்து இந்துவின் நிருபமா அவர்கள் இன்றைய நடுப்பக்கத்தில் ஆராய்ச்சி செய்திருந்தார். படிக்க சுவையாக இருந்தது.

ஜெ.வி.பி போன்ற இனவாத சிங்கள வெறி குழுக்களை Radical அமைப்புகள் என்று மிருதுவாக வர்ணிக்கும் இந்து, புலிகள் என்றால் Chauvinist, bigot, racist போன்ற பதங்களை கையாளும்.

இதைத் தான் நடுநிலை நாளேடு என்று தோழர் ரவி ஸ்ரீனிவாஸ் போன்ற அறிவுஞீவிகள் போற்றுகிறார்கள்

தான் ஜனாதிபதியாக இருந்த காலக்கட்ட நினைவுகளை கடந்த வாரம் வெளியிட்ட சந்திரிகா, தன்னுடைய ஜனாதிபதி காலத்தில் அதிகமான போர்களை நடந்த வில்லை என்று கூறியிருக்கிறார் - I have not stained my hands with mud or blood

இது எவ்வளவு பெரிய பொய். இலங்கையில் ரத்த வெறியாட்டம் நடந்த முக்கியமான காலக்கட்டத்தில் சந்திரிகா தானே ஆட்சி செய்தார். இந்த ரத்த வெறியாட்டத்திற்கு சந்திரிகா தானே முக்கியமான காரணகர்த்தா. யாழ்ப்பாண தாக்குதல் யார் தலைமையில் நடந்தது ? பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகளாக இடமாறிய காலத்தில் யார் ஆட்சி செய்தது ?

பிரஞ்ச் புரட்சியின் பொழுது "பிரட் கிடைக்கவில்லையா கேக் சாப்பிடுங்கள்" என்றானாம். தமிழ் பூமியில் ரத்த வெறியாட்டம் ஆடிய சந்திரிகா, என் ஆட்சியில் ரத்தக்கறை படியவில்லை என்று சொல்வதும் அது போல தான் உள்ளது.

நான் ஈழப் பிரச்சனையில் பாதிக்கப்பட்டவன் இல்லை. அவர்களின் உண்மையான சோகம் புரியாது. ஆனால் ஈழ நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து வருபவன் என்ற முறையில் சந்திரிகாவின் பேச்சு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாக நினைக்கிறேன். என் கண்டனத்தைக் கூறவே இந்தப் பதிவு

Tuesday, November 01, 2005

நம் தேச குழந்தைகள்

விடுதலைப் புலிகள் சிறுவர், சிறுமிகளை படைகளில் சேர்ப்பதாக அவ்வப்பொழுது நம்முடைய இந்துவும், தினமலரும் முதலைக் கண்ணீர் வடிப்பதுண்டு.

சிறுவர்களை படைகளில் சேர்ப்பதை வன்மையாக கண்டிக்கிற அதே வேளையில், இந்தியாவில் இருக்கும் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய ஒரு புள்ளி விபரம்

உலகிலேயே மிக அதிகமான குழந்தை தொழிலாளர்கள் இருக்கும் நாடு நமது அண்ணை பாரத பூமி தான்.

அரசு வெட்கமில்லாமல் கொடுத்துள்ள புள்ளி விபர கணக்குப்படி இந்தியாவெங்கும் 2கோடி குழந்தை தொழிலாளர்கள் இருக்கின்றனர். ஆனால் உண்மை நிலவரம் இதனை விட அதிகம் இருக்கும்.

பல ஆண்டுகளாக பல அமைப்புகள் தொண்டை வற்ற கூக்குரலிட்டு பார்த்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்துவின் நடுப்பக்கத்தில் பூலோகத்தின் அண்ட சராசரங்களில் இருக்கும் அறிவுஞீவிகளை அழைத்து புலிகள் சிறுவர்களை படையில் சேர்ப்பதாக எழுதிக் கிழிக்கும் இந்து தன் கேண்டீனிலும், தன் அலுவலகத்திற்கு எதிரே இருக்க்கும் டீ கடைகளிலும் வேலை செய்யும் சிறுவர்களைப் பற்றி என்றாவது எழுதியதுண்டா ?

தன்னை ஒரு வல்லரசாக நினைத்து கொண்டு நாட்டாமை செய்ய நினைக்கும் நம் புண்ணிய தேசம், இரணுவத்திற்கு ஒரு வருடத்திற்கு கொட்டித் தீர்க்கும் பணத்தில் ஒரு கடுகு அளவு பணத்தை தான் கல்வி, ஏழ்மை ஓழிப்பு போன்றவற்றுக்கு செலவழிக்கிறது.

குழந்தைத் தொழிலாளர்கள் பெரும்பாலும் தலித் மற்றும் ஓடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களாகத் தான் இருக்கின்றனர். அவர்களுடைய குடும்ப ஏழ்மை, படிப்பறிவின்மை போன்றவை தான் இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணம்.

நம் அண்டை தேச பிரச்சனைகளில் மூக்கை நுழைக்கும் முன்பு நம் லட்சணத்தையும் கொஞ்சம் கவனிப்பதே சிறந்ததாக இருக்கும்.

நம் தேசத்தில் உள்ள பல குழந்தைகளுக்கு அவர்களின் மழலைப் பருவத்தை மகிழ்ச்சியாக்கி கொடுப்போம். பல NGO நிறுவனங்களின் சேவைக்கு உங்களால் முடிந்ததை கொடுங்கள்

தீபாவாளி பட்டாசு சந்தோஷத்தை விட அது அதிக மகிழ்ச்சியை கொடுக்கும், அந்த மகிழ்ச்சிக்கு எனது உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள்

சிவகாசி பிஞ்சுகள்

தீபாவளி பட்டாசு சத்தங்களை கேட்கும் பொழுதெல்லாம் எங்கோ தூரத்தில், சிவகாசியில் ஒரு மழலையின் அபயக் குரலாகத் தான் எனக்கு தோன்றும். என்னுடைய குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவாது தீபாவளியின் பொழுது பட்டாசுகள் கொளுத்தலாம் என்ற என் எண்ணத்தை கூட சிவகாசி பிஞ்சுகளின் சோகக் கதைகளை கேட்ட பிறகு அடியோடு மாற்றிக் கொண்டேன்.

இந்தப் பதிவு ஏதோ வலைப்பதிவுகளில் சில பின்னுட்டங்களை பெறுவதற்காகவோ அல்லது அதிக ஓட்டுகளைப் பெற்று தமிழ்மணத்தின் சம்மாசனத்தை அலங்கரிக்க வேண்டும் என்பதற்காகவோ எழுதவில்லை என்பதை நான் உண்மையான உள்ளத்துடன் இங்கு பறைசாற்றி விட நினைக்கிறேன்.

ஒவ்வொரு தீபாவளியின் பொழுதும் என் உள்ளத்தில் எழும் உணர்வுகளுக்கு என்னுடைய இந்த வலைப்பதிவு இந்த வருடம் ஒரு வடிகாலாக அமைந்து விட்டது.

ஒவ்வொரு தீபாவளியின் பொழுதும் எல்லா ஊடகங்களிலும் அலசப்படும் இந்த விடயம், பிறகு ஜெயலட்சுமி கதையிலும், கராத்தே மேயர் கதையிலும் மறந்து போய் விடும். அடுத்த தீபாவளிக்கு தான் அனைவரும் இதனை மறுபடியும் நினைத்துப் பார்ப்போம்.

இந்த இடைவேளையில் சிவாகாசியில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கை, மழலைப் பருவ விளையாட்டுகள் எல்லாம் பறிபோய் விடும். காலையில் படிப்பு பின் மாலை முழுவதும் விளையாட்டு என்று பாரதி நகரத்தில் இருக்கும் வசதியான வீட்டுப் பிள்ளைகளுக்கு தான் பாடினான் போலும். சிவகாசியிலும், பிற ஏழ்மை கிராமத்திலும் இருக்கும் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் வேலை தான்.

சிவகாசியில் சிறிதும் பெரிதுமாக சுமார் 500 பட்டாசு தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த 500 தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் மட்டும் சுமார் 20,000 முதல் 40,000 வரை இருக்ககூடும் என்று NGO நிறுவனங்களின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அரசு தரும் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 10,000.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் 90 விழுக்காடு சிவகாசியில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த 90 விழுக்காட்டில் பெரும்பகுதி ஒரே நாளில் - தீபாவளியன்று, கொளுத்தப்பட்டு கரியாகி விடுகிறது.

இந்த ஒரு நாள் கூத்துக்காக சிவகாசி வருடம் முழுக்க உழைக்கிறது. பல மழலைகள் தங்கள் மழலைப் பருவத்தை இழந்து தவிக்கின்றனர். பலக் குழந்தைகள் பட்டாசு தயாரிக்கும் பொழுது நேரும் விபத்துக்களாலும், பல வித நோய்களாலும் மரணமடைகின்றனர்.

குழந்தை தொழிலாளர்களில் 90% பெண் குழந்தைகள் தான். அதுவும் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் தான் அதிகம். குழந்தை தொழிலாளர்களை அதிக அளவில் புகுத்த காரணம், இவர்களுக்கு குறைவான சம்பளம் கொடுக்கலாம். ஆனால் நிறைய வேலை வாங்கலாம். ஒரு நாள் முழுக்க ஒரு குழந்தை பட்டாசு செய்தால் அதிகபட்ச சம்பளாமாக 30-50 ரூபாய் கிடைக்கும். 50 என்பதே கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட தொகை தான்.

பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சென்று தான் வேலைப்பார்க்க வேண்டும் என்பது கிடையாது. வீட்டிலேயே இருந்து பட்டாசு செய்யலாம். அதன் மூலம் தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை என்பதாக வெளிஉலகுக்கு பட்டாசு முதலைகள் காண்பிப்பார்கள்.

பட்டாசு செய்யும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் கூட இருக்காது. வீட்டின் அடுப்பறை நெருப்பு பட்டாசு மேல் பட்டு பல நேரங்களில் பல மழலைகள் இறந்து போகின்றனர். இங்கு நடக்கும் பல விபத்துக்கள் மூடிமறைக்கப்படுகிறன. ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் சில விபத்துக்களாவது சிவகாசியில் நடக்கும். ஆனால் வெளியூலகுக்கு தெரியாமல் மூடி மறைக்கப்படும்.

1989ம் ஆண்டு மினம்பட்டி என்ற கிராமத்தில் நடந்த ஒரு வெடிவிபத்தில் 30பேர் இறந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியா டூடே பத்திரிக்கை பின்பு நடந்திய விசாரணைகளில் சுமார் 300 பேர் இறந்ததாகவும், அதில் 200 பேர் குழந்தைகள் என்றும் தெரியவந்தது. அரசு அதிகாரிகள் உதவியுடன், பட்டாசு முதலைகள் இவ்வாறான பல செய்திகளை இருட்டடிப்பு செய்து விடுகின்றனர்.

பட்டாசு சுற்றும் பொழுது மருந்துப் பெருட்களுடன் வாழ்வதால் குழந்தைகள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். பெண் குழந்தைகளின் கற்பப்பை வளர்ச்சி குறைந்து போவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒவ்வொரு நாளும் இந்த குழந்தைகளின் வாழ்நாள் கேள்விக்குறியுடன் தான் தொடங்குகிறது.

இப்படி பல குழந்தைகளின் பரிதாப வாழ்க்கையின் வெளிப்பாடு தான் நம்முடைய தீபாவளி மத்தாப்புகளும், புஸ்வானங்களும், காதைப் பிளக்கும் அணுகுண்டுகளும்.

ஒவ்வொரு மத்தாப்பின் ஒளியிலும் தெரிவது அழகான வண்ணங்களாக இருந்தாலும் அதற்கு பின் இருப்பது என்னவோ சிகப்பு நிறம் தான்... ஆம் அது சிவகாசி பிஞ்சுகளின் ரத்தம்..

Monday, October 31, 2005

தீபாவாளி - சீ என்று விடுவீரே

‘ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி” என்று சைவத் தமிழ் பெரியார் மறைமலை அடிகள் தாம் எழுதிய “தமிழர் மதம்” என்ற நூலில் எழுதியுள்ளார். மேலும் அவர்-

“ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன், இராவணன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவராயினர்’ (வேளாளர் நாகரிகம் - பக்கம் 60)

தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று, தீபாவளிப் பண்டிகை புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் கொலைக்காக தமிழர் மகிழ்ச்சி அடைதல் நன்று அன்று” என்று தமிழ்ப் பெரும் புலவர், பேராசிரியர் சைவப் பெரியார் கா.சுப்பிரமணிய(ன்) பிள்ளை தாமெழுதிய ‘தமிழர் சமயம்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

‘தீபாவளி என்பது வடநாட்டு மார்வாரிகளும், குஜராத்திகளும் கொண்டாடும் புதுக்கணக்கு புத்தாண்டுப் பிறப்பு விழா. தீபாவளிக்கும் தமிழர்க்கும், தீபாவளிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை’ எனப்பேராசிரியர் சைவப்பெரியார் அ.கி. பரந்தாமனார் தாம் எழுதிய ”மதுரை நாயக்கமன்னர் கால வரலாறு” என்னும் நூலில் மிகத்தெளிவாக விளக்கியிருக்கிறார்.

-----------
தனது எதிரியைக் கொல்வதற்கு குறுக்கு வழியில் சூழ்ச்சி செய்கின்ற ஒருவரை கடவுள் என்று அழைக்க முடியுமா?

ஆனால் புராணக் கதைகள் அப்படித்தான் ‘பரம்பொருளை’ சித்தரித்திருக்கிறார்கள். எந்தப் புராணத்தை எடுத்துப் பார்த்தாலும் இந்த அசுரர்கள் தேவர்களைக் கொடுமை செய்ததாகவும்;, தேவர்களை மீட்க கடவுள் அவதாரம்செய்ததாகவும் சொல்கின்றன.

உண்மையில் இவையெல்லாம் அன்றைய ஆரிய திராவிட இனங்களுக்கு இடையிலான போரையே குறிக்கும்.

சுரர் என்றால் குடிப்பவர் என்று பொருள். அசுரர் என்றால் குடியாதவர் என்று பொருள். ஆரியர் சோமபானம் குடித்ததாக இருக்கு வேதம் சொல்கிறது. சோமச் செடியை தெய்வமாகமே கும்பிட்டார்கள். வேள்வி செய்து அதில் குதிரை, மாடு, ஆடு, பன்றி, முயல், உடும்பு இவற்றை வேக வைத்து அதனை ஆரியர்கள் ‘அவிர்ப்பாகம்’ என்று சொல்லி உண்டு மகிழ்ந்தார்கள்.

ஆனால் சோமபானம், சுரபானம் குடித்த ஆரியர் உயர்ந்தவர்களாகச் சித்தரிக்கப் பட்டார்கள். குதிரை, மாடு, ஆடு, முயல், உடும்பு இவற்றைக் கொன்று சாப்பிட்டவர்கள் தேவர்கள் என்று அழைக்கப் பட்டார்கள். அவற்றை அன்பு, அருள், காருண்யம், ஒழுக்கம் காரணமாக வெறுத்து ஒதுக்கியவர்கள் அசுரர்கள் என்று இழித்துரைக்கப் பட்டார்கள்.

மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் பரசுராமன் அவதாரம் என்பது முழுக்க முழுக்க அசுரர்களை கொன்றொழித்த கதைதான். பூலோகத்தில் அசுரர்கள் செய்துவரும் கொடுமைகளினால் பூமாதேவி பாரம் தாங்க முடியாமல் தனது கணவன் விஷ்ணுவிடம் முறையிட்டாள். உடனே ‘பூமியில் அவதாரம் செய்து பூமிபாரத்தைத் தீர்த்து வைப்பேன்’ என்று கூறி தக்னி முனிவருக்கும் அவரது பத்தினி ரேணுகைக்கும் பரசுராமனாகப் பிறக்கிறார் விட்ணு. தந்தை கட்டளைப்படி பரசுராமன் தனது தாயையும் உடன் பிறந்த சகோதரனையும் கொன்று பெரிய ‘வீரன்” என்று பெயர் எடுக்கிறான். காமதேனு என்னும் பசுவை கார்த்தவீரியார்ச்சுனன் என்னும் அரசன் கவர்ந்து செல்கிறான். அதைச் சாக்கிட்டு அந்த அரசனையும் பூலோகத்தில் இருந்த சத்திரியர் களையும் (அசுரர்களை) ஒரு காலத்திலும் தலை தூக்காதபடி கோடரியால் வெட்டிக் கொன்று பூமி பாரத்தைத் தீர்த்தான்.

தாயைக் கொன்றவன், சகோதரனைக் கொன்றவன், அசுரர்களைக் கொன்றவன் எப்படி கடவுள் அவதாரமாக இருக்க முடியும்?
இந்த அவதாரத்திடம் இருந்து பக்தர்கள் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? யாரோ ஒரு அரசன் தவறு செய்தான் என்பதற்காக எல்லா அரசர்களையும் பூண்டோடு அழிப்பது எந்தவகை தர்மம்?

-------------------
மானம் உணரும் நாள்!
நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன் என்றவனை அறைகின்றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின்றாரே?
இப்பெயரெல்லாம் யாரைக் குறிப்பது?

இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னுகின்றனர் என்பது பொய்யா?
இவைகளை நாம் எண்ண வேண்டும்.
எண்ணாதெதையும் நண்ணுவதென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொளவேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும்பாகாது!
‘உனக்கெது தெரியும், உள்ள நாளெல்லாம்
நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?
என்றுகேட்பவனை, ‘ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய் என்று
கேட்கும் நாள், மடமை கிழிக்கும் நாள், அறிவை
ஊட்டும் நாள் மானம் உணருநாள் இந்நாள்.
தீவாவளியும் மானத்துக்குத்
தீபாவாளி ஆயின் சீ என்று விடுவீரே!

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

தீபாவளி ???

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம்

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

  • ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்
  • தேவர்களின் முறையீட்டின் மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்
  • விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது
  • ஆசைக்கு இணங்கிப் பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது
  • அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது
  • அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்
  • தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்
  • விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை விஷ்ணு வின் மனைவி நரகாசூரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்றாள்
  • இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்
  • இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!

இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும் படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா?


இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் நிலநூல்கூடத் தெரியவில்லை என்றுதானே கருத வேண்டியிருக்கிறது? பூமி தட்டையா? உருண்டையா?

தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலைமீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது?

கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்?

விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா?

மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?

பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?

இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம் இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத்ஜோதிஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது.

இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, கங்காஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் 'ஆமாம்” என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள் எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போய்விட்டோம். அறிவியல் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் மோசம் போகலாமா?

தந்தை பெரியார் தீபாவளி என்ற பண்டிகை பற்றி கூறியதன் சிறு தொகுப்பு



நன்றி


Sunday, October 30, 2005

குண்டுவெடிப்புகள் - தீர்வு என்ன ?

தில்லி குண்டுவெடிப்புக்கு பிறகு வழக்கம் போல் அரசியல்வாதிகள் முதல் ஊடகங்கள், வலைப்பதிவாளர்கள் வரை அனைவரும் தீவிரவாதிகளை முறியடிப்போம், தீவிரவாதிகளை கொல்வோம் என்று முழுக்கமிட்டுக் கொண்டிருக்கிறோம். இது போல தான் கடந்த இருபது ஆண்டுகளாக நாம் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறோம். பிரச்சனையும் தீவிரமாகி கொண்டே தான் இருக்கிறது.

எந்தப் பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாக முடியாது. அது தீவிரவாதிகளின் வன்முறைகளாகட்டும் அல்லது அரசு இயந்திரங்கள் செய்யும் வன்முறையாகட்டும் இரண்டுமே வன்முறை தான். ஆனால் அரசு இயந்திரங்கள் அதனை செய்தால் நாட்டை காக்கும் பொருட்டு செய்யப்படும் சேவைகளாக சித்தரிக்கப்படுகின்றன.

அடக்குமுறைகள் அதிகரிக்கும் பொழுது அடங்க மறுக்காமல் போராடும் நிலை அனைத்து சமுதாயங்களிலும் அவ்வப்பொழுது தோன்றி கொண்டே தான் இருக்கிறது. அடங்க மறுக்கும் போக்கு இன்னும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கப் போகிறது. அன்றைய பிரஞ்ச் புரட்சி தொடங்கி இன்று ஈழத்தில் நடக்கும் சுதந்திர போராட்டம் வரை அடங்கமறுக்காமல் போராடும் குணம் ஒரு போதும் குறையப்போவதில்லை.

ஒரு இனம் அடங்கமறுக்காமல் போராட தலைப்படும் பொழுது இந்த போராட்டத்தை அழித்து ஒழிக்க ஆதிக்க சக்திகள் தங்களுடைய ஆயுதங்கள், தளவாடங்கள் மூலம் முயலுகின்றன. தங்களுடைய ஆயுதங்களால் அந்தப் போராட்டத்தை அழிக்க முடியாத பொழுது அந்தப் போரட்டம் பற்றிய அவதூறுகளையும், பொய்ச் செய்திகளையும். இட்டுக்கட்டிய கதைகளையும் பரப்ப நினைக்கின்றன.

ஒருவன் எப்படி தீவிவாதியாகிறான் ? இது பற்றி நாம் ஆராய்வதே இல்லை. அவனுக்கு மனைவியோ, பிள்ளைகளோ, பெற்றோர்களோ இல்லையா ? அவன் பிறக்கும் பொழுதே துப்பாக்கிகளுடனும், குண்டுகளுடனும் தான் பிறக்கின்றானா ?

ஒவ்வொரு தீவிரவாதியும் அரசாங்கத்தால் உருவாக்கப்படுகிறான். பஞ்சாப்பிலும் சரி, அசாம், காஷ்மீரிலும் சரி தீவிரவாதிகள் அரசால் உருவாக்கப்பட்டவர்கள். எதற்கெடுத்தாலும் பாக்கிஸ்தான் மீது பழி போட்டு தப்பிக்க கூடாது.

நம் வீட்டில் நிலைமை சுமூகமாக இருந்தால் பாக்கிஸ்தான் இங்கு வாலாட்ட முடியுமா ?

காஷ்மீரிலும், அசாமிலும் நடப்பது தமிழகத்திலோ, கேரளாவிலோ, கர்நாடகத்திலோ ஏன் நடப்பதில்லை.

சென்னையும், பெங்களூர் இளைஞர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்த கல்வி, வேலைவாய்ப்பு வசதி ஏன் ஸ்ரீநகரிலும், கொளகாத்தியிலும் ஏற்படுத்தப்படவில்லை. அந்த இளைஞர்களை ஏன் சந்தேக கண்ணோடு பார்க்கப்பட வேண்டும்.

அங்குள்ள பெண்கள் என்ன இராணுவத்திற்கு தீனி போடும் போகப் பொருட்களா ?

இராணுவத்தின் சந்தேகமும், பாலியில் அத்துமீறலும் இன்னும் பல தீவிரவாதிகளை தான் உருவாக்கி கொண்டிருக்கும். நல்ல கல்விச் சாலைகளையும், வேலைவாய்ப்புகளையும் அந்த இளைஞர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தால் ஆயுதங்களும், குண்டுவெடிப்புகளும் காணாமல் போய் விடும்.

துப்பாக்கி எடுக்கும் இராணுவம், சிறிது அன்பை தனது சொந்த பிரஜைகள் மீது செலுத்தினால் தீவிரவாதிகளுக்கு உதவும் மக்கள், நமக்கு உதவி செய்வார்கள்.

துப்பாக்கி தூக்கும் இளைஞர்களை அழைத்துப் பேசி அவன் பிரச்சனைகளை சரி செய்தால், பாக்கிஸ்தானுக்கு எப்படி இங்கு தீவிரவாதம் வளர்க்க ஆள் கிடைக்கும்.

அவன் கேட்பது சுய உரிமை என்றால் கொடுக்கலாமே.. இந்தியாவிற்குள் சுய உரிமை கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது. 1947க்கு முன்பு வரை இந்தியாவே பல தேசங்களாக சிதறி தானே இருந்தது. இந்தியா என்ற நாடே பிரிட்டிஷ்காரன் ஏற்படுத்தி கொடுத்து தான்.

ஒவ்வொரு தேசிய இனத்தின் சுதந்திரமும், தன்னுரிமையும் மதிக்கப்பட வேண்டும்.

முதலில் அரசாங்கம் மனித நேயத்தை வளர்க்க வேண்டும்.

இத்தகைய முயற்சிகளை எடுக்காமல் தீவிரவாதத்தை நசுக்குவேன், அழிப்பேன் என்றால்.

I am sorry. It's never going to end


Saturday, October 29, 2005

நியூயார்க், மேட்ரிட், லண்டன், தில்லி

திரு.பத்ரி லண்டன் குண்டுவெடிப்பு பற்றிய பதிவில் இவ்வாறு கூறி இருந்தார்

இது நிற்காது.
எல்லா பயங்கரவாதங்களுக்கும் ஊற்றுக்கண் அரசுகள் தன் நாட்டினர் மீதும் பிற நாட்டினர் மீதும் நிகழ்த்தும் வன்முறைகள் என்பது என் கருத்து

தொழில்நுட்பம் பரவப்பரவ, பாதிக்கப்பட்டவர்கள் - நாடுகளோ, தனி மனிதர்களோ - தாங்களும் சக்திமிக்க நாடுகள் மீது தாக்குதலைத் தொடுக்க முடியும் என்று காண்பித்து வருகின்றனர்

இன்று லண்டனில் நூறு சாவுகள். இவர்கள் உண்மையிலேயே அப்பாவிகளா? பிளேர் போன்ற அரசியல்வாதிகளைத் தடுக்காத, நியாயமற்ற ஈராக் போரைத் தடுக்காத குற்றம் பிரிட்டனில் ஓட்டுப்போடும் வயதில் உள்ள அத்தனை பேர்களுக்கும் உண்டு. இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். இந்தியாவில் ஒவ்வொரு முறையும் ஒரு தீவிரவாதி உருவாக்கப்படும்போது அதற்கு நானும் இதைப்படிக்கும் நீங்களும் காரணம்

----------------------------

இது எவ்வளவு அபத்தமான கருத்து என்பது நமக்கு இப்பொழுது தான் புரிகிறது. எவன் வீட்டிலோ எழவு விழுந்தால் நமக்கு என்ன, இறந்தவர்கள் அப்பாவிகள் அல்ல என்று எழுதுவது அப்பொழுது முற்போக்கு எழுத்தாக தெரிந்தது. இப்பொழுது அபத்தமாக தெரிகிறது. நம் நாட்டில் எழுவு விழுந்தால் தான் உயிரின் அருமை புரிகிறது.

முஸ்லீம்கள் மீது இந்தியா தொடுத்த தாக்குதலுக்கு எதிர்தாக்குதல் தான் மும்பை, தில்லி போன்ற இடங்களில் நடத்தப்படும் குண்டுவெடிப்புகள். ஆனாலும் எந்த குண்டுவெடிப்பும் அதுவும் பொதுமக்கள் நடமாடும் பகுதியில் வைக்கும் குண்டுகள் பிரச்சனைக்கும் தீர்வாகாது. அரசாங்கம் செய்யும் எல்லா தவறுக்கும் அதன் குடிமக்கள் பெறுப்பாக முடியாது.

தில்லியில் நடந்த குண்டுவெடிப்பு என்றாலும் சரி, லண்டனில் நடக்கும் குண்டுவெடிப்பு என்றாலும் சரி அது வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது. பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று நினைக்கும் பொழுது பிற மக்களை அடிமைப்படுத்த ஆதிக்கத்திற்குள்ளாக்க நினனக்கும் பொழுது தான் போராட்டங்களும், தீவிரவாதங்களும், வன்முறைகளும் வெடிக்கின்றன.

ஒரு இனத்தின் சுதந்திரமும், தன்னுரிமையும் மதிக்கப்பட்டால் குண்டுவெடிப்புகளுக்கு இடமிருக்காது.

தில்லியில் நடந்த குண்டுவெடிப்புகளை மிக வன்மையாக கண்டிப்போம்

அடக்குமுறை

அரசாங்கத்தின் அடக்குமுறைகள் என்றைக்குமே அடித்தட்டு மக்களிடம் தான் நடக்கிறது. அது மேல்தட்டு மக்களிடம் நடந்தால் மனித உரிமை மீறல்களாக கோர்ட் வாசல்களுக்கு கொண்டு செல்லப்படும். ஆனால் வாழ்க்கை போராட்டத்தினை எதிர்கொள்ளும் மக்களின் பிரச்சனைகள் குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. எந்த வெகுஜன பத்திரிக்கையும் அது குறித்து தொடர்ந்து எழுதுவதும் இல்லை.

தமிழகத்தில் 1947க்கு பின் நடந்த அரசாங்கத்தின் அடக்குமுறைகளை பட்டியலிட்டால் அதிகம் பாதிப்புக்குள்ளானது வடமாவட்ட மக்கள் தான். இந்த அடக்குமுறைகளின் உச்சக்கட்டம் வீரப்பன் தேடுதலில் வீரப்பன் இருந்த காட்டுப்பகுதியில் வசித்த மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட கொடுமையான அடக்குமுறை.

Another memory, from a young man whose entire family was taken in, when he was 14 and his brother four: “They started beating us with all across the body and with pounding sticks all across the body. Even though my mother explained about my fathers sick with TB they didn’t stop their beating my father and they severely tortured me with electricity. They nailed my foot and tied my hands in front and kept thorn in front of me and pulled my hand and let myself fall down on thorns and they planned to shoot me as I know Kannada I understood their conversations. These tortures continued consecutively for seven days.” After this the family was separated, the father and fourteen-year-old boy booked under TADA, the sister raped in another STF camp in front of her husband, after which he left her.

A woman’s memories of the arrest of her husband by STF personnel in 1993, after Veerappan had killed 22 policemen, runs thus: “The police also did not hesitate to give bail [the family had pledged their land for Rs 10,000 to release the man after 15 days of custody] as they felt that my husband would die in custody and also could not get any information after severely torturing him thus to be in the safer side the police gave him the bail. Then we brought back my husband to home. He suffered a lot of health problem his back was severely impacted with the torture. His liver was also spoiled and he vomited blood regularly. We had taken him to both private and government hospitals and he was in government for two-three weeks, but we did not have enough money to proceed further for the treatment and brought him home. However, this process lasted for about six months, and my husband survived for about six months and then he died.”

வீரப்பன் கொல்லப்பட்டு ஒரு வருடம் நிறைவு பெற்ற பிறகு வீரப்பனையும் மறந்து விட்டோம். அவன் பொருட்டு சித்திரவதை அனுபவித்த மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதயும் அரசு மறந்து விட்டது. கோடி கோடியாய் கொட்டி அதிரடிப் படையை குளிப்பாட்டியாகி விட்டது.

இன்று தமிழக எல்லையை தனதாக சொந்தம் கொண்டாடி வரும் கர்நாடகா ஒரு வருடத்திற்கு முன்பாக வீரப்பன் இருக்கும் மொத்த பகுதியையும் தமிழகத்திற்கு தாரை வார்க்க தயங்கி இருக்காது. தமிழக எல்லைச் சாமி மண்ணுக்குள் சென்ற பிறகு கர்நாடகா மாவீரர்களுக்கு இன்று தான் சூடுசுரணையெல்லாம் தோன்றியிருக்கிறது போலும்


Sunday, October 16, 2005

தோழர் தமிழரசன்

தமிழ் தேசியம் தழைத்தோங்கிய பகுதியைச் சேர்ந்தவன் என்ற முறையில் தமிழ் தேசியம் பற்றிய சில நிகழ்வுகளை இங்கு பதிவு செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன். இந்த நிகழ்வுகள் கடந்த காலங்களில் ஊடகங்களில் சரியாக வெளிக்கொணரப்படவில்லை என்பது மட்டும் அல்லாமல் இதனை திரித்து பொய்க்கதை எழுதி மறக்கடித்தப் பெருமையும் வெகுஜன ஊடகங்களுக்கு உண்டு.

1947 விடுதலைக்குப் பிறகு இந்தியாவின் பல மாநிலங்களில் ஆதிக்க சாதி பண்ணைக்காரர்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடிய காலக்கட்டத்தில் இந்தியாவெங்கும் இடதுசாரி தீவிரவாத இயக்கங்கள் தோன்ற ஆரம்பித்தன. இந்த இயக்கங்களின் செயல்பாடு தீவிரமாகி 1960களின் பிற்பகுதியில் மேற்குவங்காளத்தில் மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் அமைப்பான மக்கள் யுத்தக் குழு - People's War Group - PWG தோன்றியது. இந்த அமைப்பு மேற்கு வங்காளம், ஆந்திரா மற்றும் தமிழகத்திலும் பரவியது. குறிப்பாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் இந்த அமைப்பு வேகமாக வளர்ந்தது.

கடலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், பென்னாடம், தருமபுரி போன்ற பின் தங்கிய கிராமங்களில் தான் இந்த இயக்கம் வளர துவங்கியது. இதற்கு இந்தப் பகுதியில் நிலவிய சமூக, பொருளாதார சூழலும் முக்கிய காரணம். வடமாவட்டங்களில் பெரும்பாலான நிலங்கள் வானம் பார்த்த பூமி தான். இந்தப் பகுதியின் முக்கிய பொருளாதாரம் முந்திரி. முந்திரி வருடம் முழுக்க மகசூல் கொடுக்க கூடிய பயிர் அல்ல. வருடத்திற்கு சில மாதங்கள் மட்டுமே முந்திரி கிடைக்கும். பிறகு சீண்டுவார் இல்லை. இந்த முந்திரி காடுகளும் சிறு விவாசாயிகள் சொந்தமாக வைத்துக் கொள்ளக்கூடியவை அல்ல. பெரும் பண்ணைக்காரார்கள் வசம் தான் நிலங்கள் இருந்தன.

இப்பகுதியின் பெரும்பான்மை மக்களான வன்னிய, தலித் மக்கள் இந்தப் பண்ணைக்காரர்களின் நிலங்களில் கூலி வேலை செய்பவர்களாக இருந்து வந்தனர். பிற மாநிலங்களில் பண்ணைக்காரர்கள் - அடித்தட்டு ஒடுக்கப்பட்ட மக்களிடையேயான போராட்டம் வெடித்த பொழுது இப்பகுதியிலும் இந்தப் போராட்டம் வேரூன்ற தொடங்கியது. நக்சலைட் இயக்கங்களும் தமிழ் மண்ணில் அறிமுகமாகின.

நக்சலைட் இயக்கமாக ஆரம்பித்த இந்தப் போராட்டம் பின் தமிழ் தேசியமாக, ஆயுதப் போராட்டம் மூலம் தமிழ் தேசியத்தை அடையும் இயக்கமாக உருவெடுத்தது. தமிழகத்தின் முதல் குண்டுவெடிப்பும் இப்பகுதியில் தான் நடந்தேறியது. அதனை அறிமுகப்படுத்தியர் பென்னாடத்தைச் சேர்ந்த புலவர் கலியபெருமாள். பள்ளி ஆசிரியராக இருந்த புலவர் கலியபெருமாள் "மக்கள் யுத்தக் குழு" இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர். மேற்குவங்க நக்சலைட் தலைவர் சாரு மஜும்தாருடனும் இவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.

புலவர் கலியபெருமாள் மூலமாக நக்சலைட் இயக்கம் வடமாவட்டங்களில் பரவ ஆரம்பித்தது. 1970ம் ஆண்டு புலவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்ட பொழுது அந்த குண்டுகள் வெடித்ததால், தீவிரவாத இயக்கம் பற்றிய செய்திகள் வெளிவரத்தொடங்கின. அவர் மீது கொலைக்குற்றம் போன்ற பொய்வழக்குகள் சுமத்தப்பட்டு அரசு அவரை சிறையில் அடைத்தது.

நக்சலைட் இயக்கத்தின் திருப்பு முனையாக இத் தருணத்தில் தோழர் தமிழரசன் உருவாகினார். 1980களில் இந்த இயக்கம் மிக வேகமாக வளர முக்கிய காரணம் தோழர் தமிழரசன் தான். People war Group இயக்கத்தின் பொலிட்பீரோ உறுப்பினராகவும் அவர் உயர்ந்தார். சாதியில்லா சமுதாயம் அமைப்பது, பண்னை நிலங்களை ஏழை மக்களுக்கு கொடுப்பது போன்றவை இவரின் முக்கிய கொள்கைகளாக இருந்தன. அதே சமயத்தில் தமிழ் தேசியம், தனித் தமிழ்நாடு போன்ற கோரிக்கைகளில் நம்பிக்கை உடையவராக தமிழரசன் விளங்கினார்.

1985ம் ஆண்டு தமிழ் ஈழத்திற்கு ஆதராக தமிழகத்தில் உணர்வு அலைகள் கரைபுரண்ட பொழுது, தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் போன்றோர் தங்களை தமிழ்தேசிய உணர்வுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டனர். இதனால் மக்கள் யுத்தக் குழுவில் இருந்து தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் இருவரும் நீக்கப்பட்டனர். இதன் பிறகு தமிழ்நாடு மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சியை இருவரும் துவங்கினர். இக் கட்சியின் ஆயுதப் பிரிவாக "தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA)" என்ற அமைப்பை தோழர் தமிழரசன் தோற்றுவித்தார்.

பொறியியல் பயின்ற தோழர் தமிழரசன் குண்டுகள் தயாரிப்பதிலும் வல்லவராக இருந்தார். 1985ம் ஆண்டு துவங்கி 2000வரை கணக்கெடுத்தால் தமிழத்தின் பல இடங்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளை இந்த இயக்கம் நடத்தியது. மைய அரசின் தளங்களை தான் இந்த அமைப்பு குறிவைத்து தாக்கியது. தனித்தமிழ்நாட்டை உருவாக்கி அங்கு சாதிபேதமில்லா சமதர்ம சமுதாயத்தை அமைப்பது தான் தன்னுடைய லட்சியம் என்று தமிழரசன் முழங்குவார். பண்ணைக்காரர்களிடம் இருந்து கைப்பற்றிய பணத்தையும், பொருளையும் ஏழைகளுக்கு அளிப்பார். மக்களை தமிழரசன் மிகவும் நேசித்தார். மக்களுக்காக வாழ்வது தான் அவரது லட்சியமாக இருந்தது.

1987ம் ஆண்டு, செப்டம்பர் 1ம் நாள் பொன்பரப்பி கிராமத்தில், தன் இயக்கத்திற்கு பொருள் சேர்ப்பதற்காக தமிழரசன் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டார். பொன்பரப்பியில் இருந்த ஸ்டேட் பாங்க் வங்கியை கொள்ளை அடித்து விட்டு வெளியேறும் பொழுது அவரை அடையாளம் தெரியாமல், அவர் "தோழர் தமிழரசன்" தான் என்று தெரியாமல் ஊர் மக்கள் தாக்கினர். அப்பொழுது அவரிடம் குண்டுகளுடன் துப்பாக்கி இருந்தது. அந்த துப்பாக்கியை பொதுமக்கள் மீது சுட்டிருந்தால், மக்கள் ஓட்டம்பிடித்திருப்பர். குறைந்தபட்சம் அந்த துப்பாக்கியை பொதுமக்கள் மீது சுடப்போவதாக நீட்டியிருந்தால் கூட மக்கள் நெருங்கியிருக்க மாட்டார்கள். ஆனால் தன் மக்களை மிகவும் நேசித்த தோழர் அவர்களை சுடப்போவதாக கூட சொல்ல வில்லை. எந்த மக்களுக்காக போராடினாரோ, அதே மக்களின் கையில் அடிபட்டு இறந்தார். இதை விட ஒரு சோகமான விடயம் பொன்பரப்பி தமிழரசனின் சொந்த கிராமம். தன்னை வெளிப்படுத்தினால் எங்கே தன்னை ஒரு கொள்ளையனாக தன் ஊர் மக்கள் நினைத்து விடுவார்களோ என்று எண்ணி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலே தோழர் மறைந்து போனார்.

கொல்லப்பட்டது தமிழரசன் தான் என்று பிறகு கேள்விபட்டவுடன் பொன்பரப்பிலும், பிற கிராமங்களிலும் நிலவிய சோகம் இன்றும் என் நினைவில் நிற்கிறது. இப்பகுதி மக்கள் தமிழரசனை நேசித்தனர். அவரது முகம் கூட தெரியாமல் அவரது சேவைகள் மட்டுமே பலர் நினைவில் இருந்தது. இன்றும் நிற்கிறது.

தோழர் தமிழரசனின் ஆயுதப் போராட்டம் இன்றைய காலக்கட்டத்தில் அர்த்தமற்றவையாக தெரியலாம். ஆனால் 1980களில் இப் பகுதியில் நிலவிய வறுமை, அறியாமை போன்றவையுடன் பொருத்தி பார்த்தால் அவருடைய போராட்டத்தின் பொருள் விளங்கும்.

தமிழகத்தின் அத்தனை ஊடகங்களும் இந்த நிகழ்ச்சி குறித்து பொய்க்கதைகளை தான் அவிழ்த்து விட்டனவே தவிர ஒரு பத்திரிக்கை கூட உண்மை நிலையை எழுதவில்லை.

தமிழக வரலாற்றில் மக்களை நேசித்த மாமனிதர்கள் பட்டியலில் தமிழரசனின் பெயர் முக்கியமானது. என்னைப் பொருத்தவரை நான் வாழ்ந்த காலக்கட்டத்தில் கண்ட முக்கியமான தியாகம் இது (இதேக் காலக்கட்டத்தில் என்னை மிகவும் பாதித்த மற்றொரு நிகழ்வு திலீபனின் மரணம்)

(செப்டம்பர் 1ம் தேதி அவரது நினைவு நாள் அன்று இந்தப் பதிவை எழுத நினைத்து மிக தாமதமாக வெளிவருகிறது)

Saturday, October 15, 2005

காமெடி மலர் - 1

தேர்தல் என்றாலே எனக்கு ஒரே கும்மாளம் தான். மற்ற நேரங்களில் தினமலரை "டாய்லெட்" டிஷ்யுவாக மட்டுமே பயன்படுத்தும் நான், தேர்தல் வந்தால் "டாய்லெட்டில்" படித்து சிரித்து விட்டு பின் "டாய்லெட்" டிஷ்யுவாக பயன்படுத்துவேன். அவ்வாறு படித்து, சிரித்த சில வரிகளை வழங்குவது தான் "காமெடி மலர்" பகுதியின் முக்கிய நோக்கம்.

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற நல்லெண்ணம் காரணமாக இந்தப் பகுதிகளை வழங்குவதில் மிக்க மகிஷ்ச்சி அடைகிறோம்

ஸ்மெலிவரும் இடங்களில் எல்லாம் நம்ம தொலைக்காட்சி காமெடி ஷோவில் சிலர் பிண்ணனியில் சிரிப்பார்களே, அது போல கற்பனை செய்து கொண்டே படித்தால், இன்னும் சுவாரசியமாக இருக்கும்

----------------

""கேப்டன் அறிவிச்சதும் தான் அறிவாலயமே உஷாராச்சாம்ங்க......''

""தமிழ்நாட்டு அரசியல்ல தனி ரூட்டுல போய்கிட்டு இருக்காரு கேப்டன்... அவர பாலோ பண்ண வேண்டிய கட்டாயத்துக்கு அறிவாலயம் வந்துருச்சாமா வே...'' என்று சந்தேகத்தோடு கேட்டார் அண்ணாச்சி.

""ஆமாங்க... பூகம்ப நிவாரண நிதிக்கு முதல் கட்சியா நிதியுதவி

அறிவிச்சது கேப்டன் கட்சி தானாம்... ஐந்து லட்ச ரூபாய் தரப் போறதா விஜயகாந்த் அறிவிச்ச செய்தி தெரிஞ்சி தான் அறிவாலயத்துல அவசரமா "மினி மீட்டிங்'
போட்டு முடிவெடுத்து நைட்டோட நைட்டா 20 லட்ச ரூபாய் கொடுக்கப் போறதா அறிவிச்சாங்களாம்... அதை தொடர்ந்து அடுத்த நாளு வைகோவும் நிதியுதவி அறிவிப்புக்கு ஆளானாராம்ங்க... சினிமாவுல இருக்கும் போதும் இந்த மாதிரி விஷயங்கள்ல முதல் ஆளா இருப்பாராம் கேப்டன்... அரசியலுக்கு வந்த பிறகும் அவரு ஸ்டைல் மாறலீங்களாம்...'' என்று சொல்லி முடித்தார் அந்தோணிசாமி.

ஞானப்பழங்கோ...

இந்தப் படங்களுக்கு விளக்கம் தேவையில்லை





தேர்தல் ஜல்சா - 1

சென்னை அக் 15 - தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை சரியாக கணிப்பதில் எப்பொழுதுமே முன்னிலையில் இருப்பது தினமலர் பத்திரிக்கை தான். தினமலரின் கணிப்பு எப்பொழுதுமே மிகச் சரியாக இருக்கும் என்பதை நாம் கடந்த தேர்தலில் பார்த்திருக்கிறோம்.

கடந்த தேர்தலில் பாமகவின் ஓட்டு வங்கி, தீரன், பு.தா. அருள்மொழி போன்ற மாபெரும் தலைவர்களால் ரஜினிக்கு ஆதரவாக மாறியதை சரியாக கணித்த தினமலர் மறுபடியும் தன் கணிப்பை ஆரம்பித்திருப்பதை தமிழக மக்கள் உன்னிப்பாக கவனிக்க தொடங்கி இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் தமிழகத்தின் "கிறுக்கு ஸ்டார்" பின் தமிழக இளைஞர்கள் அணிவகுத்து பாமகவை 6 இடங்களிலும் தோற்கடிக்கத்ததை சரியாக கணித்த தினமலர், இம் முறை அடுத்த எம்.ஜி.ஆராக விஜயகாந்த் உருவாகப் போவதாக கணித்துள்ளது

பாமக, திமுக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தமிழகத்தில் இருக்கும் பிறக் கட்சிகள், சாதி சங்கங்கள் என அனைத்திலும் இருக்கும் இளைஞர்கள், முதியவர்கள், தாய்க்குலங்கள், மழலைகள் என அனைத்து பிரிவினரும் கடந்த தேர்தலில் "கிறுக்கு ஸ்டார்" பின் அணிவகுத்ததைப் போல இம்முறை விஜயகாந்தின் கட்சியில் தொடர்ந்து சேர்ந்து கொண்டே இருப்பதாக ஆருடம் கூறி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை தினமலர் ஏற்படுத்தி உள்ளது.

ரஜினி வாய்ஸ் கொடுத்ததால் ராமதாசின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்றும், பாமக காலியாகி விடும் என்றும் லட்சக்கணக்கான தமிழ் வலைப்பதிவு சமூகத்தில் கடந்த தேர்தலின் பொழுது மிகச் சரியாக முழுக்கமிட்ட வலைப்பதிவு உலகின் "டம்மி ஸ்டார்" ரஜினி ராக்கி அவர்கள், இம் முறை விஜயகாந்த் வருகையால் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கூடாரம் காலியாகி விடும் என்று கணித்துள்ளார். அவரது இந்தக் கணிப்பு வலைப்பதிவு உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வலைப்பதிவு உலகின் ராஜரிஷி கத்ரி அவர்களும் பாமக மண்ணைக் கவ்வ வேண்டும் என்று வாய்ஸ் கொடுத்திருப்பதால், வலைப்பதிவு உலகில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.

இதற்கிடையே ஒரு முக்கிய திருப்பமாக வலைப்பதிவு உலகின் "...குறி" ஸ்பெஷலிஸ்ட பாட்சாவசந்த் அவர்கள், திருமாவளவனுக்கு எதிராக கோஷ்டி தாவியுள்ளார். இந்த நிகழ்ச்சி வலைப்பதிவு சமூகத்தை பிளவுபடுத்தும் என்றும், எதிர் கோஷ்டிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என்றும் ஆட்டோவுக்கும், ஆசிடுக்கும் பயந்து கொண்டு "மாஸ்க்" அணிந்தும் பயம் தெளியாமல், சத்தியமங்கலம் காடுகளில் பதுங்கியிருக்கும் வாய்மூடி தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த கருத்துகளை மிகக் கடுமையாக மறுத்துள்ள வலைப்பதிவு உலகின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் மழலி அவர்கள் பண்ருட்டியில் இருந்து சில புள்ளி விபரங்களை அள்ளித் தெளித்துள்ளார். இது வலைப்பதிவில் உள்ள எதிர் கோஷ்டிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு என்ன பதில் தேடலாம் என்பது குறித்து அவர்கள் "பரங்கிமலைக்கு" சென்று தவம் இருந்து ஆரயப் போவதாக கடைசி செய்திகள் கூறுகின்றன.

தமிழ்மணத்தில் இருந்து "வீரவன்னியன் -
வெற்றி எமதே" பகுதிக்காக
மாம்பழத்து வண்டு

Thursday, October 13, 2005

பார்ப்பான் என்ற சொல்லை அழிப்போம்

மகாகவி பாரதியார் "பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே, வெள்ளைப் பரங்கியை துரையென்ற காலமும் போச்சே"

என்று ஆனந்தமாக சுதந்திரப் பள்ளு பாடினார். தந்தை பெரியார் காலத்தில் தொடங்கி இன்றளவும் பார்ப்பான், பார்ப்பனீயம் போன்ற

சொற்கள் வழக்கில் இருந்து வருகிறது. இது சாதியை குறிக்கும் சொல்லாக இல்லாமல், ஒரு மேல் தட்டு இனத்தின் ஆதிக்க எண்ணத்தை

குறிக்கும் சொல்லாக, கீழ்தட்டு மக்களை மதம், சாதி போன்ற பல பிரச்சனையின் காரணமாக ஒடுக்கி வைக்கும் ஒரு போக்கின்

அடையாளமாக நினைக்கப்படுகிறது. அத்தகையோரை எதிர்க்கும் எண்ணத்தின் அடையாளமாக தான் பார்ப்பனீய எதிர்ப்பு என்பது எழுந்தது.

சாதிகள் ஓழிய வேண்டும் என்று பாடிய முண்டாசு கவிஞன் ஏன் பார்ப்பான் ஓழிய வேண்டும் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

ஆனந்தப் பள்ளு தவிர வேறு சில இடங்களிலும் பாரதி இந்த வார்த்தையை பிரயோகித்து இருக்கிறான்.

நான், பாரதியை இங்கு எந்த சாதியுடன் இணைக்க வில்லை என்பதை ஆழமாக, பல முறை வலியுறுத்தி சொல்லி விட நினைக்கிறேன்.

பாரதி சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட தமிழ்க் கவிஞன். அவனை ஆழமாக போற்றுகிறவர்களின் நானும் ஒருவன்.

தான் எந்த இனத்தில் இருந்து வருகிறானோ, அதே இனத்தை ஏன் பாரதி கோபமாக இழித்துரைக்க வேண்டும். சாதிகள் இல்லை என்று பாடிய பாரதி ஏன் பார்ப்பானை மட்டும் இகழ்ந்துரைக்க வேண்டும்.

அந்தளவுக்கு அந்த சமுதாயம் மேல் அவன் கடுங்கோபம் கொண்டான். அதற்கு காரணம் மொத்த சாதி அல்ல. ஆதிக்க பார்ப்பன மன்ப்பான்மை மற்றும் அந்த ஆதிக்க மனதால் பிற சாதிகளை அடக்கி ஓடுக்க வேண்டும் என்று நினைக்கும் அந்த எண்ணத்தை தான் பாரதி, பெரியார் தொடங்கி டாக்டர் ஐயா வரை பின்பற்றினார்கள்

என்னுடைய பதிவுகளில் கூட பார்ப்பான் என்று நான் கூறுவது சாதீயம் பேசுவதாகவும், ஒரு இனத்தை திட்டுவதாகவும் எனக்கு வந்த "லட்சக்கணக்கான" மின்னஞல்களில் பல பிராமண நண்பர்கள் ( டோண்டு மாமா இந்த வார நட்சத்திரமாக இருப்பதால் அவரை

குஷிப்படுத்த மற்றொரு முறை "பிராமண நண்பன்" இந்த வார்த்தையை பிரயோகிக்கிறேன் ) குறைப்பட்டுக்கொண்டார்கள். அவர்களின்

குறை தீர்ப்பதை ஒரு தார்மீக கடமையாக கொண்டு, இருந்த நாட்டை விட்டு தாய் மண்ணுக்கு வந்துள்ள இந்த நேரத்திலும் மினி பஸ்

எல்லாம் பிடித்து, சைபர் கபேவில் இந்த பதிவை சுரதா கொண்டு துன்பப்பட்டு அடித்து என் மனசாட்சியை இங்கு பறைசாற்றி விடுவது

என்று முடிவு செய்துள்ளேன். அப்படி செய்யா விட்டால் இந்த பதிவை வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதையும் என்

சார்ப்பாக நான் வலியுறுத்த நினைக்கிறேன் (சரி...பெரிய பீட்டரு தான்..யாரோ ஒருவருடைய சாயல் வரனும்னு இவ்வளவு கஷ்டப்பட்டு

நீட்டி முழக்க வேண்டி இருக்கு)

பாரதி, பெரியார் என்று பெரிய மனிதர்களால் தொடங்கப் பட்ட பிராமண எதிர்ப்பு இன்று சுருதி குறைந்து விட்டது. இன்றைக்கு பிராமண

எதிர்ப்பு தேவையா என்பதும் ஒரு கேள்வி ?

பிராமண எதிர்ப்பு, பிராமணர் அல்லாத பிற சமூகத்தை கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார போன்ற நிலைகளில் உயர்த்த எழுந்த

கோஷம். அந்த கோஷம் பெரிய அளவில் வெற்றி பெற்று விட்டது. இன்றைக்கு எல்லா நிலைகளிலும் பிராமணர்

அல்லாத சமுதாயம் பிராமணர்களை மிஞ்சி கொண்டு தான் இருக்கிறது. அவர்கள் அளவுக்கு முன்னேற வேண்டும் என்ற நிலை மாறி,

அவர்களுடன் போட்டியிட வேண்டும் என்ற நிலையும் மாறி, இன்று ஒரு பெரிய சமன்பாடு நிலவுகிறது. இத்தகைய சூழலில் பிராமண

எதிர்ப்பு தேவை தானா ?

ஏன் வலைப்பதிவுகளில் பிரமணர், பிரமணர் அல்லாதோர் பிரச்சனை நீடிக்க வேண்டும் ?

எனவே பார்ப்பான் என்ற சொல்லை அழித்து விட வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்து விட்டேன். இதனை வலைப்பதிவுகளில் அறிவித்து, என்னுடைய பதிவின் பெயரையும் மாற்றி வேறு ஒரு புதிய தளத்திற்கு செல்லலாம் என்று முடிவு செய்து விட்டேன்.

இந்த நினைவுகள் நெஞ்சில் நிழலாட, அம்மா ஸ்ரீரங்கம் கோயிலுக்கு போயிட்டு வாடா, பல வருஷம் கழிச்சி ஊருக்கு வந்திருக்க என்று

சொல்ல நானும் கோயிலுக்கு சென்று வழிபட்டு, பார்ப்பான் என்ற சொல்லை நான் நீக்கும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்மானத்தை கடவுள் சந்நிதியில் எடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.

இந்த தீர்மானத்துடன் கோயிலுக்கு சென்றால்...அங்கு ஒரு பெரிய பலகை, கருவறைக்குள் நுழைய அனுமதி இல்லை ? நான் நுழைய அனுமதி இல்லை என்றால் வேறு யார் நுழையலாம் ? பார்ப்பன எதிர்ப்புக்கு இன்னமும் அவசியம் இருக்கிறது என்பது அப்பொழுது தான் எனக்கு உரைத்தது ?

ஸ்ரீரங்கம் ரங்கநாதனிடம் கோபித்துக் கொண்டு வேகமாக வெளிவருகிறேன், மற்றொரு பலகை - இங்கு தமிழிலும் அர்ச்சனை

செய்யப்படும் ? தமிழ்நாட்டில் தமிழிலும் என்று ஒரு அவமதிப்பா என்ற கோபமும் என்னை வெறிகொள்ள வைத்தது.

பார்ப்பானை கருவறையில் இருந்து நீக்கும் வரை பார்ப்பான் என்ற வார்த்தையும் தொடர தான் வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்

Monday, October 10, 2005

தமிழ் சினிமாவின் விடிவெள்ளி - தங்கர்பச்சான்

தமிழகத்தில் எத்தனையோ சினிமாக்காரர்கள் தோன்றியிருக்கிறார்கள், ஸ்டைல் என்ற பெயரில் ஊரை கெடுத்து குட்டிச் சுவராக்கியிருக்கிறார்கள், லிப் கிஸ் கொடுத்து இளைஞர்களை கவர்ச்சி புயலால் நாசமாக்கியிருக்கிறார்கள், "அவள் அம்மா என் காதலி, என் அப்பா அவள் காதலன்" போன்ற அற்புதமான தத்துவ படங்களை கொடுத்திருக்கிறார்கள், நாளை நாம் தான் தமிழக முதல்வர் என்ற கனவில் கையை சுற்றி சுற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இயக்குனர் இமயங்களின் நாறிப் போன கதைகளுக்கு மத்தியில் "வன்னிய பூமியில்" இருந்து தோன்றிய தங்கர்பச்சானின் படங்கள் தான் சனங்களின் யதார்த்த வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் பலக் காலக்கட்டங்களில் பலர் உருவாகியிருக்கிறார்கள். ஆனால் கிராமத்தில் இருந்து வரும் கலைஞர்களால் தான் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்த முடிந்திருக்கிறது. சினிமாவின் தரம் என்பது வெறும் கிராபிக்கல் அம்சங்களாக, டெக்னிக்கல் சமாச்சாரங்களாக இருப்பதில்லை. கதையம்சம் தான் படத்தின் தரமாக இருக்க முடியும்.

தமிழ் சினிமாவின் ஸ்டீரியோடைப் படங்களுக்கு மத்தியில் கிராமத்தின் ராஜா - பாரதி ராஜா, தமிழ் சினிமாவின் பாதையை மாற்றி அமைத்தார். சமஞ்சது எப்படி என்ற ரீதியில் பாடல்கள் எழுதிய தாடி மற்றும் குடுமிகளுக்கு மத்தியில் அற்புதமான வைர வரிகளை எழுதிய வைரமுத்து, வன்னிய பூமியின் அறிவுமதி அனைவரும் கிராமத்தான்கள் தான். என்னுடைய தமிழ் ஆசிரியர் கிராமத்தான்களால் தான் சினிமாவில் ஜொலிக்க முடியும் என்றார். அது உண்மை தான் என்பதை இவர்களைப் போன்றவர்கள் தான் நிருமித்துக் கொண்டிருக்கிறார்கள்

தமிழ் சினிமாவில் பலர் தோன்றியிருந்தாலும், யதார்த்தம், நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பு போன்றவற்றுக்கு இங்கு பஞ்சம் அதிகம். அதனை களைந்தவர் தங்கர்பச்சான் தான் என்று உறுதியாக சொல்லலாம். தன்னுடைய அழகி மூலம் நிஜ வாழ்க்கையின் பல யதார்த்தங்களை திரையில் கொண்டு வந்தார். இந்த படத்தின் மற்றொரு சிறப்பம்சம் இது வரை திரையில் தோன்றாத வன்னிய பூமியை கொண்டு வந்தது. பலாப்பழத்தின் வாசனையை தமிழ் சினிமாவில் காணக் கூடிய முதல் வாய்ப்பு அப்பொழுது தான் கிடைத்தது.

அவருடைய தற்போதைய "சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி" என்ற படத்தை பார்க்கும் பொழுது நான் என் வாழ்க்கையில் கண்ட பல நிகழ்ச்சிகள் நெஞ்சில் உருண்டோடியது.

என்னுடைய அத்தை ஒருவர் இருக்கிறார். அப்பாவின் தங்கை. ஜெயங்கொண்டத்தில் அரசு வேலையில் இருக்கும் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள். குடிப் பழக்கம் உடையவர். தினமும் ஒயின் ஷாப்பிலும், சாராயக் கடையிலும் தான் வாசம் செய்வார். வீட்டிற்கு வரும் பொழுது தள்ளாடிக் கொண்டே தான் வருவார். கொஞ்சம் கூட பொறுப்பு இருக்காது. அரசு வேலைக்கு ஒழுங்காக செல்ல மாட்டார். கிடைக்கிற எல்லா லோனும் எடுத்து விடுவார். லோன் போக வரும் சம்பளம், சம்பள தேதியில் பிராந்திக் கடையில் கரைந்து போய் விடும். பிறகு வீட்டில் அடி தடி தான். அத்தை கஷ்டப்பட்டு சில வேலைகளுக்கு சென்று சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றுவார். அரசு வேலையில் இருந்தாலும், வருகிற சம்பளத்தை வைத்துக் கொண்டு சுகமாக வாழலாமே என்று பலர் புத்தி மதி சொல்வார்கள். ஒன்றும் காதில் ஏறாது. சம்பள நாள் வந்தால், நேராக அத்தை அவர் ஆபிசுக்கு சென்று விடுவார். அப்பொழுதெல்லாம் வங்கிகளில் பணம் நேரடியாக செல்லாமல் கவரில் சம்பளம் வரும். அவரிடம் இருந்து சம்பள கவர் பிடுங்க ஒரு பெரிய யுத்தமே நடக்கும். பெரிய கச்சேரியே அலுவலக வாசலில் நடக்கும். இந்த கூத்துக்கு பிறகு வேலைக்கு செல்வதையும் மாமா குறைக்க ஆரம்பித்து விட்டார். எதற்கு வம்பு அரசு வேலையாயிற்றே, வேலை போய் விடுமே, என்றாவது ஒரு நாள் திருந்துவார் என்ற எண்ணத்தில் அப்படியே விட்டு விட்டார்கள். அத்தை பல கஷ்டங்களை அனுபவித்தார். இப்படி தொடர்ந்த அவர் வாழ்வில் என் அத்தைப் பெண்ணின் மஞ்சள் நீராட்டு விழா ஒரு திருப்புமுனையாக அமைந்து இவரா இப்படி என்று வியந்து போனோம் ? வாழ்க்கையில் ஏற்படும் ஒரு கணம் சிந்தனை, பல மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது. பலர் கூறிய புத்திமதி அவரை மாற்றவில்லை. ஆனால் சில கணம் தன் மகளை பெரிய மனுஷியாக பார்த்த பொழுது அவருக்குள் ஒரு தீப்பொறி எழுந்து அவரது வாழ்க்கையை மாற்றி விட்டது.

வாழ்க்கை ஒரு படிப்பினை. வாழ்க்கையில் நடக்கும் பல மாற்றங்களை திரைப்படத்தில் கொண்டு வருவது முடியாத காரியம். அந்த முடியாத காரியத்தை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை தங்கர்பச்சான் ஏற்படுத்தி இருக்கிறார். "சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி" படத்தை பார்த்த பொழுது எனக்கு என் மாமாவின் முகம் தான் ஞாபகத்திற்கு வந்தது. தங்கர்பச்சான் முகத்திற்கும் அவர் முகத்திற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. கதையில் நடக்கும் பல, நிஜ வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. என் வாழ்க்கையில் நான் அனுபவிக்க வில்லை என்றாலும் கண் கூடாக பார்த்து இருக்கிறேன்.

அவருடைய சொல்ல மறந்த கதையிலும் சரி, அழகியிலும் சரி வாழ்க்கையின் யதார்த்தம் பிரதிபலிக்கிறது. சொல்ல மறந்த கதையில் சேரன் அனுபவிக்கும் மன உளைச்சலை அவ்வளவு சரியாக இது வரை தமிழ் சினிமாவில் யாரும் பிரதிபலித்தது இல்லை என்றே நினைக்கிறேன். அழகி பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

இந்த திரைப்படங்களை போலவே அவரின் ஒரு சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது. அது ஒரு பெரிய மரத்தைப் பற்றிய கதை. ஒரு மரத்தை சுற்றி நிகழும் நினைவுகள், பொருட் செலவுக்காக அந்த மரம் வெட்டப்படும் பொழுது ஏற்படும் உளைச்சல். அதனை சுற்றி பின்னப்பட்ட உணர்வு அலை. எனக்கும் அது போன்ற நினைவுகள் உண்டு.

உண்மையான சனங்களின் கலைஞனாக தங்கர்பச்சானை தான் நினைக்க முடிகிறது.

திண்ணையில் விமர்சனம் எழுதியிருக்கும் கோவிந்த் கூறி இருப்பது போல தமிழ் சினிமாவிற்கு தங்கத் தாமரை பெற்று தரும் தகுதி தங்கர்பச்சானுக்கு மட்டுமே உண்டு.

Thursday, October 06, 2005

டாக்டர் ஐயா

பொதுவாக தலித், வன்னியர் என்ற சொல்லப்படும் மக்களை சாதியை விலக்கிவிட்டு பார்த்தால் இருவரின் வாழ்க்கை தரத்திற்கும் பெரிய வேறுபாடுகள் எதுவும் கிடையாது. அடித்தட்டு உழைப்பாளிகளாக இருப்பவர்கள் இம் மக்கள் தான். ஆனால் வன்னியர்களுக்கு தாம் தலித்துகளை விட மேலானவர்கள் என்ற எண்ணம் உண்டு. எங்கள் கிராமத்தில் முக்கியமான இரு சாதிகள் முதலியார் மற்றும் வன்னியர். வன்னியர்கள் தலித்துகளை எப்படி கீழாக பார்க்கிறார்களோ அதைப் போலத் தான் முதலியார்கள் எங்களைப் பார்ப்பார்கள்.

சமுதாயத்தின் கீழ்தட்டில் இருந்த இரு சமுதாயங்கள் இரு வேறு மனோபாவங்களால் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். கீழ் மட்டத்தில் இருந்த இரண்டு சமுதாயங்களின் விழிப்புணர்வுக்கு காரணகர்த்தாக்கள் டாக்டர் ராமதாஸ் மற்றும் திருமாவளவன்.

வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே பல கலவரங்கள் நடந்திருக்கின்றன. தலித்துகள் மீதான வன்னியர்களின் தாக்குதலையும் நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். ஆனால் வன்னியர்களின் இந்த மனோபாவத்தை மாற்ற டாக்டர் ராமதாஸ் பாடுபட்டார் என்பது தான் எந்த மீடியாக்களும் சொல்லாத உண்மை.

டாக்டர் ராமதாசின் அரசியல் வரலாற்றை இரண்டு பிரிவாக பிரிக்கலாம். கொள்கையுடன் இருந்த காலம். கொள்கையை காற்றில் பறக்க விட்ட காலம். அவர் கொள்கையுடன் இருந்த காலத்தில் யாருமே அவரை கண்டுகொள்ள வில்லை. கொள்கையை காற்றில் பறக்க விட்டப் பிறகு தான் கலைஞர், ஜெயலலிதா என அனைவருக்கும் அவர் தேவைப்படும் பொருளாகிவிட்டார். மீடியாக்களும் அவரை கண்டு கொண்டு கிழிக்க தொடங்கின.

குடிதாங்கி என்று ஒரு ஊர். ஒரு தலித் இறந்து விட்டார். தலித்தின் உடல் வன்னியர்கள் இருக்கும் கிராமத்தின் வழியாகத் தான் எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால் ஒரு தலித் சடலம் வன்னியர்கள் இருக்கும் பகுதியில் செல்வதை வன்னிய மக்கள் அனுமதிக்கவில்லை. பிரச்சனை பெரியதாகி கலவரம் வரும் நிலை. டாக்டர் ராமதாசுக்கு இந்த செய்தி தெரியவந்தது. உடனடியாக இந்த கிராமத்திற்கு வந்தார். வன்னிய மக்களிடம் பேசிப் பார்த்தார். ஒன்றும் நடக்க வில்லை. வன்னிய மக்களின் எதிர்ப்பை மீறி அந்த தலித்தின் சடலத்தை வன்னிய கிராமத்தின் வழியாகவே கொண்டு சென்று இறுதிச்சடங்கள் செய்யவைத்தார் டாக்டர் ராமதஸ். வன்னியர்களின் கடும் எதிர்ப்பையும் சம்பாதித்தார். இந்த நிகழ்ச்சியை பார்த்து நெகிழ்ந்துப் போன திருமாவளவன் டாக்டர் ராமதாசுக்கு "குடிதாங்கிக்கொண்டான்" என்று பெயர் சூட்டினார்.

அரசியல் நிகழ்வுகள் இருவரையும் பிரித்து விட்டது. இப்பொழுது சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் இருக்கும் இரு சமுதாயங்கள் ஒன்று சேர்ந்திருப்பது பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

ராமதாசின் தற்போதைய அரசியல் கொள்கை பிடிப்புடன் இருப்பதாக நான் வாதாடிக்கொண்டிருக்க மாட்டேன். அதில் எந்தவித கொள்கையும் இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் அவர் கொள்கை பிடிப்புடன் இருந்த பொழுது இந்த அரசியல் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்றே கலைஞர் நினைத்தார். திமுகவின் பாரம்பரிய ஓட்டு வங்கிகளான வன்னியர்கள் எங்கே பாமக வுடன் சென்று விடுவார்களோ என்ற அவரின் அச்சம் அவரை பாமக வை அழிக்க தூண்டியது.

ஒரு காலத்தில் பாமக வுக்கு 2 சட்டமன்ற தொகுதிகளை மட்டுமே தருவேன் என்று கூறிய கலைஞர் இன்று பல பாரளுமன்றத் தொகுதிகளையும், ராஜ்சபா இடத்தையும் கொடுத்திருக்கிறார். இதற்கு டாக்டர் ராமதாஸ் கொடுத்த விலை "கொள்கைகள்". கொள்கைகளுடன் இருந்திருந்தால் இன்று ராமதாஸ் காணாமல் போயிருப்பார்.

எழுத்தாளர் பிரபஞ்சன் ராமதசைப் பற்றி பல கட்டுரைகளை அவர் கொள்கைப் பிடிப்புடன் இருந்த பொழுது எழுதியிருக்கிறார். அது எல்லாம் அச்சுப் பிரதிகள். கிடைத்தால் வெளியிடுகிறேன். தமிழகத்தில் கொள்கை பிடிப்புடன் இருக்கும் ஒரே அரசியல் தலைவர் டாக்டர் ராமதாஸ் தான் என்று எழுதியிருப்பார். ஆனால் அந்தக் கட்டுரையை இப்பொழுது படித்தால் நல்ல நகைச்சுவையாக தோன்றும்.

திருமாவளவனுக்கும் ராமதாசுக்கு நிறைய ஒற்றுமைகள் உண்டு. இருவரும் கீழ்தட்டில் இருக்கும் தன் சமுக மக்களுக்காக போராடினார்கள். தேர்தல் அரசியலை வெறுத்தார்கள். தேர்தல் மறுப்பு இயக்கங்களையும் நடத்தினார்கள். ஆனால்
அதனால் ஒரு பலனும் கிடைக்க வில்லை.

1989 தேர்தலை புறக்கணிப்போம் என்றார் ராமதாஸ். பல பூத்துகளில் ஒட்டு பதிவே நடக்க வில்லை. அதனால் என்ன பலன். ஒன்றுமேயில்லை. அதையே தான் திருமாவளவன்
செய்தார்.

அரசியல் கட்சி தொடங்கி தேர்தல் மூலமாக சாதிக்கலாம் என்று நினைத்தார்கள். தனித்து நின்றார்கள். ஒன்றும் சாதிக்க வில்லை.

தேர்தலில் நிற்கும் பொழுது கட்சி தொடர்ந்து தோல்வியை தழுவும் பொழுது கட்சித் தொண்டர்கள் சிதறிப் போவார்கள்.

அது தான் நடந்தது. 1996 தேர்தலில் 4 தொகுதிகளை மட்டுமே பா.ம.க தனித்து நின்று வென்றது.(ஆளும் கட்சியாக இருந்த அதிமுக வும் 4 இடங்களில் மட்டுமே வென்றது)
கட்சி சிதறிப் போகும் அபாயம் ஏற்பட்டது. அங்கு தான் கொள்கைகளை துறந்து ராமதாஸ்
ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தார். இதைப் போல தான் அன்று வைகோவும் ஜெயலலிதாவிடம்
கூட்டணி சேர்ந்தார். அந்த தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டிருந்தால்
பா.ம.க. காணாமல் போயிருக்கும்.

அதைத் தான் இன்று திருமாவளவனும் செய்திருக்கிறார். சிதம்பரம் தொகுதியில்
கடுமையான போட்டிக்குப் பிறகும் வெற்றி கிடைக்கவில்லை என்னும் பொழுது தொண்டர்கள்
விரக்தி நிலைக்கு சென்று விடுவார்கள். கட்சி காணாமல் போய் விடும்.

இன்றைய இந்திய அரசியலின் யதார்த்த நிலை கூட்டணி தான்.
இந்த போட்டியில் தொடர்ந்து இருக்க கூட்டணி வேண்டும்.

(முந்தைய ஒரு பதிவின் மீள்பதிவு)

குஷ்பு - கலாச்சாரம் - நைட் கிளப்

திரு.பத்ரி தனது பதிவில் இந்து நிருமா சுப்ரமணியத்தின் கருத்தை தனக்கு துணைக்கு அழைத்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

பாமாகவும், திருமாவளவனும் எந்தக் கருத்தினை கூறினாலும் மொத்த பத்திரிக்கை உலகின் மடிசாரும், குடிமிகளும் கிளம்பி விடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது.

குஷ்பு ஒரு கருத்தினை கூறுவது அவரது தனி மனித உரிமை என்றால் டாகடர் இராமதாசும், திருமாவளவனும் தங்கள் எதிர்ப்பினை தெரிவிப்பதும் தனி மனித உரிமை தான். குஷ்பு என்ன வேண்டுமானாலும் கூறலாம், அதை யாரும் கண்டு கொள்ள கூடாது என்று "தனி மனித உரிமை காவலர்களாக" பத்ரியும், நிருபமாவும் தங்களை நினைத்துக் கொள்வதை எந்த வகையில் சேர்ப்பது ?

டாக்டர் இராமதாஸ், நடிகர் ரஜினி காந்த்தை விமர்சித்ததை தவறு என்று வாதிட்ட பத்திரிக்கைகள், அன்றைக்கு இராமதாசின் தனி மனித உரிமையைப் பற்றி யோசிக்காமல் இருந்ததன் மர்மம் புரியாதா நமக்கு ? அன்றைக்கு நிருபமாவும், பத்ரியும் எங்கே ஒளிந்திருந்தார்கள் என்று கேட்க நான் விரும்பவில்லை

நாட்டில் யார் வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் வழக்கு தொடுக்கலாம். அது இந்திய அரசியல் சாசனம் இந்திய குடிமக்களுக்கு கொடுத்திருக்கும் ஜனநாயக தனிமனித உரிமை. அது தனி மனித உரிமை காவலர்களுக்கு புரியவில்லையா ? புரிந்திருந்தும் பாமாக எதிர்ப்புணர்வு மட்டும் தான் அவர்களது அறிவுஞீவி மூளைக்கு விளங்குகிறது போலிருக்கிறது.

நிருபமா தன்னுடைய கட்டுரையில் சினிமா பாடல்களில் வரும் ஆபாச வரிகளை ஏன் கண்டு கொள்ள வில்லை என்று கேட்கிறார்
The double standards of this brigade take the breath away. Those spearheading the protests against a statement by the actress Khushboo that a man should not expect virginity in his bride, have never protested against the lewd and suggestive lyrics of Tamil film songs.

தமிழ் பெருங்குடிகள் இதனை பற்றி கொஞ்சம் கவனிக்க வேண்டும். நம் தமிழ் மக்களின் ஞாபக மறதியை கருத்தில் கொண்டு போகிற போக்கில் மாமி அவிழ்த்து விட்டு செல்லும் புளுகு மூட்டை இது. டாக்டர் இராமதாசும், திருமாவளவனும் திரைப்படங்களிலும், பாடல் வரிகளிலும் வரும் ஆபாசங்கள் குறித்து போராட்டம் நடத்திய பொழுது எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் திரைப்படங்களில் காண்பிக்கலாம் என்றும், அது குறித்து இராமதாஸ் போராட்டம் நடத்த கூடாது என்றும் கூறிய அதே பத்திரிக்கைகள் இன்று அதனை எதிர்க்கலாமே என்று கூறுகிறார்கள்.

அப்புறம் அந்த lewd and suggestive lyrics of Tamil film songsஐ எதிர்த்தால் கவிஞர்கள் உரிமை, தனி மனித எழுத்துரிமை, கற்பனையுரிமை என்று கூறத் தொடங்குவார்கள்.

அப்புறம் இருக்கவே இருக்கு கடைசி அஸ்திரம் - நாட்டில் இது தானா முக்கிய பிரச்சனை ?

ஆம், எங்களூர் கருத்தம்மாவுக்கும், வீரலட்சுமிகளுக்கு டாக்டர் இராமதாசும், திருமாவளவனும் செய்த சேவைகளை கண்டுகொண்டு இவர்கள் பாராட்டு தெரிவித்து விட்டார்கள் ? அல்லது எங்களூர் பிரச்சனைகளை இந்துவின் நடுப்பக்கத்தில் நிருபமா மாமி எழுதி விட்டார் ?

/*

கலாசார போலீஸ்காரர்கள் வரும் தேர்தலில் மண்ணைக் கவ்வினால் எனக்கு சந்தோஷமே.

*/

ஐயா... உங்கள் எண்ணம் பலிக்கட்டும், எனது வாழ்த்துக்கள். உங்களைப் போன்றவர்களின் இது போன்ற எண்ணம் தான் எங்களை தொடர்ச்சியாக வெற்றி பெற வைத்து கொண்டிருக்கிறது
----------------------------

கலாச்சாரம் என்பது மாறக்கூடியது தான். குடுமி வைத்த மாமாவும், மடிசார் அணிந்த மாமியும், இன்று கிராப் கட்டிங்குடன் ஜீன்ஸ் பேண்ட் அணிவது போல, கோவணம் அணிந்த படையாச்சி இன்று பேண்ட் போடுவது போல. ஆனால் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் குடும்பம் முக்கியமானது. மேற்கத்திய நாகரிகத்திலும் கூட தன்னுடைய ஆண் நண்பியோ, பெண் நண்பியோ தனக்கே உரிமையாய் இருக்க வேண்டும் என்பது தான் பெரும்பாலானோரின் எண்ணம். யாருடனும் படுத்து விட்டு பிறகு தன்னுடன் வந்து படுக்க வேண்டும் என்று கூறுவதில்லை. இந்தியாவில் அப்படி கூறுவது புரட்சிகரமான கருத்தாக கருதும் போக்கு மும்பையில் தொடங்கி, பெங்களூரில் கிளை விரித்து இன்று சென்னைக்கு எட்டிப் பார்க்கிறது.

இதற்கு முன்பு இந்துவில் ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது.

பெங்களூர் பப்புகளில் ஒரு ஆண் மது அருந்தி கொண்டே ஒரு பெண்ணை நண்பியாக அடையமுடிகிறது. ஆனால் சென்னையில் மது அருந்த டாஸ்மாக் தான் செல்ல முடிகிறது என்ற ரீதியில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. சென்னையில் கொஞ்சமாவது இரவு கொண்டாட்டங்களை அனுமதிக்க வேண்டும் என்பது தான் இந்த கட்டுரையின் வாதம்.

பன்னாட்டு நிறுவனங்கள் சென்னைக்கு வருவதால் சென்னையிலும் நைட் கிளப்புகள் தொடங்கலாம் என்பது சரியான வாதம் தானா ? சென்னையின் கடற்கரையோர ரிசார்ட்களும், மகாபலிபுரம் ரிசார்ட்களும் ஏனைய பிற உல்லாசாங்களுக்கும் நவீனமயமான அங்கீகாரம் வழங்குவது தான் இந்த கட்டுரையின் நோக்கமாக தெரிகிறது. ஒரு முண்ணனி பத்திரிக்கை, கலாச்சார பத்திரிக்கை, இன்னமும் பஞ்சகட்சங்களும், குடுமிகளும் உலவும் ஒரு அலுவலகத்தில் இருந்து இந்த மாதிரியான கட்டுரை வருவது நிச்சயம் ஒரு மிகப் பெரிய கலாச்சார மாற்றம் தான்.

சமீபத்தில் இங்கிருக்கும் தொலைக்காட்சியில் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கடைதிறப்பதால் இந்தியாவில் மாறி வரும் கலாச்சார மாற்றம் குறித்தும் அது இந்தியாவின் குடும்ப வாழ்க்கை முறைக்கு எதிர்காலத்தில் விடுக்கும் சவால் குறித்தும் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.

இன்னமும் பாருக்கு செல்லும் என் வயதுடையோர் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தெரியாமல் தான் போய் விட்டு வருகிறோம். "Bye dady, I am going to Pub" என்றால் செருப்பால் அடி விழும் அல்லது தன் மகன் இப்படி மாறி விட்டானே என்று வேதனைப்படும் பெற்றோர்கள் தான் இங்கு அதிகம்.

அதைத் தான் டாக்டர் இராமதாசும், திருமாவளவனும் பிரதிபலிப்பதாக நான் நினைக்கிறேன்.

Freedom - To what extent ? இது எல்லா நடுத்தர வர்க்க குடும்பத்திலும் இருக்கும் சாதாரண பழக்கம். வீட்டிற்கு சீக்கிரம் செல்வதில் தொடங்கி, அப்பாவிற்கு பயந்து/மரியாதை கொடுத்து ஒழுக்கமாக நடப்பது வரை அது தான் நமது கலாச்சாரம்.

இதனை கலாச்சார காவலர்களாக பார்ப்பது, இராமதாசும், திருமாவளவன் சொல்வதால் ஏற்படுகிற எதிர்வினை தானே தவிர உண்மையான எதிர்வினையாக இருக்க முடியாது.

என்னைப் பொறுத்தவரை குஷ்பு கூறியதை அதிகம் பொருட்படுத்த தேவையில்லை.

Sunday, June 05, 2005

மறைக்கப்பட்ட போராட்டமும், மறைந்துபோன உயிர்களும் - 2

கடந்த பதிவில் வன்னியர்களின் சாலை மறியல் போராட்டத்தின் ஆரம்பகட்ட சூழ்நிலையை விளக்கினேன். அதிலிருந்து இன்னும் கொஞ்சம் பின்நோக்கி நகர்ந்து வன்னிய மக்களின் வாழ்க்கை முறையை விளக்கும் பொழுது வன்னியர்கள் ஏன் போராட்டத்தில் குதித்தார்கள் என்பது தெளிவாகும்.

( நண்பர் குழலியின் கருத்தான ஊடகங்களால் மறைக்கப்பட்ட போராட்டம் என்ற கருத்தை நானும் நம்புவதால் தலைப்பை "மறைக்கப்பட்ட போராட்டம்" என்று மாற்றியுள்ளேன் )

வடமாவட்டங்களில் மிகப் பெரும்பான்மையான சமூகம் வன்னிய சமூகம் தான். தமிழகத்தின் மக்கள் தொகையில் சுமார் 20% வன்னியர்கள் தான். இதே அளவுக்கு தான் தலித் மக்களும் உள்ளார்கள். தலித் மக்கள் தமிழகமெங்கும் பரவி இருக்கிறார்கள். ஆனால் வன்னியர்கள் வடமாவட்டங்களில் மட்டும் தான். ஒரே இடத்தில் பரவலாக இருந்தாலும் பிற மேல் சாதிகளால் ஒடுக்கப்பட்டவர்கள். இதற்கு பிற சாதிகளை மட்டும் குற்றம்சாட்ட முடியாது. ஏனெனில் காலங்காலமாக வன்னிய மக்களின் வாழ்க்கை முறை தான் எங்களை ஒடுக்கப்பட்டவர்கள் என்ற நிலைக்கு கொண்டு சென்றது என்று சொல்லலாம்.

என்னுடைய அப்பா சராசரி வன்னியர்களில் இருந்து கொஞ்சம் மாறுபட்டவர். சாராயம் குடிக்கும் பழக்கம் கிடையாது. எந்த பிரச்சனைக்கும் செல்ல மாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். எங்கள் கிராமத்தில் அவர் மேல் அனைவருக்கும் இந்த குணநலன்களால் நல்ல மதிப்பு உண்டு. ஆனால் சராசரி வன்னியர்கள் அப்படி கிடையாது.

என் அப்பாவை கிண்டலாக என் கிராமத்தில் சொல்வார்கள் "இவரெல்லாம் படையாச்சியே கிடையாது. பன்னிக் கறி சாப்பிடாதவனும், சாராயம் குடிக்காதவனும் படையாச்சியா என்ன ?"

வன்னியர்கள் எங்கள் கிராமத்தில் இருக்கும் முதலியார்களின் நிலங்களுக்கு கூலி வேலை செய்வார்கள். கூலியை பெற்று கொண்டு நேராக சாராயக் கடைக்கு செல்வார்கள். குடிப்பார்கள். பின் கலாட்டா, தகராறு எல்லாம் உண்டு. வன்னியர்கள் முரட்டுதனமானவர்கள். குடி, கும்மாளம், இது தான் வாழ்க்கை என்று நினைத்திருந்தனர். காலங்காலமாக இப்படியான ஒரு வாழ்க்கை முறையில் தான் அவர்கள் காலத்தை கடத்தினர். அக் காலத்தில் படைவீரார்கள் என்ற வகையில் அவர்கள் வாழ்ந்த அதே வாழ்க்கையை சுதந்திர இந்தியாவிலும் தொடர்ந்து கொண்டிருந்தனர். படிப்பறிவும் கிடையாது. அவர்களுடைய வாழ்க்கை தரம் எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். வன்னிய கிராமங்களைப் பற்றி அறிந்தவர்களுக்கு இந்த நிலை தெரியலாம். சராசரி வன்னியர்கள் தினக்கூலிகள், காசுக்கு திண்டாடுபவர்கள்.

இவர்கள் தான் இப்படி என்றால் முந்திரி தோப்பு மற்றும் நிலங்களுடன் இருக்கும் வன்னியர்களின் வாழ்க்கை தரத்திலும் பெரிய வேறுபாடு இருக்காது. இவர்களிடம் பணம் இருக்கும். ஆனால் அந்த பணத்தை கொண்டு தங்கள் வாழ்க்கையை எப்படி சிறப்பாக அமைத்துக் கொள்வது என்று தெரியாது. பணம் இல்லாதவர்களின் குடிசைக்குள் படுத்துக் கொண்டு தான் நுழைய வேண்டும். பணம் உள்ளவர்களின் அடையாளம் ஓட்டு வீடு. அந்த ஓட்டு வீட்டின் நுழைவாசலில் மாடுகளின் தொழுவம் இருக்கும். நுழையும் பொழுதே சாணத்தின் நறுமணமும், மாடுகளின் மூத்திர வாசமும் நம்மை வரவேற்கும். ஒரு புறம் வைக்கோள், இன்னொரு புறம் தொம்மை. மற்றொரு புறம் முந்திரி கொட்டைகளை வெயிலில் காய வைத்து கொண்டிருப்பார்கள். நாட்டு கோழிகள் வீட்டில் திரிந்து ஆங்காங்கே தங்கள் கழிவுகளை இறக்குமதி செய்து வீட்டின் நுறுமணத்திற்கு மேலும் மணம் சேர்க்கும்.

வன்னியர்கள் கும்மாளப் பிரியர்கள். கூத்து கலைஞர்களில் பெரும்பாலானோர் வன்னியர்கள் தான். திருவிழாக்களில் கட்டாயம் தெருக்கூத்து இருக்கும். ஒரு தினுசாக வேடமிட்டு கொண்டு என்ன பேசுகிறார்கள் என்று புரியாமல் வேகமாக பேசிக் கொண்டு மேடையில் குதித்து குதித்து ஆடுவார்கள். என் தாத்தாவுக்கு தெருக்கூத்து பைத்தியம். எந்த தெருக்கூத்தையும் விடாமல் பார்ப்பார். ஆனால் தெருக்கூத்து பார்ப்பதற்கு முன்பாக அவருக்கு சாராயம் வேண்டும். சாராயம் குடித்து விட்டு தள்ளாடிக் கொண்டே தெருக்கூத்து பார்க்க வேண்டும். "இப்ப என்ன ஆடுறானுங்க, அந்தக் காலத்துல ஆடுவானுங்க பாரு" என்று ஆரம்பிப்பார். தெருக் கூத்து வன்னிய மக்களின் (தலித் மக்களுக்கும் கூட) இரவுக் நேரக் கொண்டாட்டம். தெருக்கூத்து கலைஞர்களுக்கு இது முக்கிய தொழில் இல்லை. வேறு வேலை செய்வார்கள். திருவிழா காலங்களில் இரவு நேரங்களில் அவர்களின் கொண்டாட்டமாக இந்த தொழில் இருக்கும். இந்தக் கலை கொஞ்சம் கொஞ்சமாக நசிந்து கொண்டிருக்கிறது. (தெருக்கூத்து பற்றிய நாவல் ஒன்றை ஒருவர் எழுதியிருந்தார். பெயர் நினைவில்லை. இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற நாவல் என்று நினைக்கிறேன்)

தலித் மக்கள், வன்னியர்களை விட மிக அதிகமான அடக்குமுறைக்கு உள்ளானார்கள் என்பதை ஒப்புக் கொள்ளும் அதே நேரத்தில் வன்னியர்களின் வாழ்க்கை முறைக்கும் தலித்களின் வாழ்க்கை முறைக்கும் பெரிய வேறுபாடு கிடையாது.

வன்னிய, தலித் மக்களின் வாழ்க்கை காலங்காலாமாக அதே நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் அறியாமை. இவர்கள் கிணற்று தவளைகள். தங்களுடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காதவர்கள். முதலியார்களிடம் வேலை செய்கிறோமே, நாம் ஏன் முதலியார்கள் அளவுக்கு முன்னேறக் கூடாது, அந்த முன்னேற்றத்தை அடைய என்ன வழி என்றெல்லாம் சிந்திக்க தெரியாதவர்கள். குடி, கும்மாளம் என்று மழுங்கிப் போன அவர்களின் மூளை அதற்கு மேல் சிந்திப்பதில்லை.

இவ்வாறு காலங்காலமாக இருந்த ஒரு சமூகம் திடீரென்று சிந்திக்க தொடங்கும் பொழுது என்ன நடக்கும் ? திடீர் என ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் முக்கியத்துவம் அடையும் பொழுது, "இவனுங்களுக்கு என்ன இவ்வளவு முக்கியத்துவம்" என்ற எண்ணம் பிறருக்கு பிறக்கிறது. பிரச்சனை வெடிக்கும். இது வரை தங்களிடம் வேலை பார்ப்பவர்களுக்கு இன்று என்ன திடீர் முக்கியத்துவம் என்று பிறர் நினைப்பார்கள். அது தான் எங்களுக்கு 80களின் பிற்பகுதியில் நடந்தது. எங்கள் போராட்டங்கள் திரிக்கப்பட்டன. மறைக்கப்பட்டன. அவதூறு பேசப்பட்டன. தலித்களுக்கு திருமாவளவனின் வரவிற்கு பிறகு இந்த அநியாயங்கள் நடந்து கொண்டிருக்கிறன. காழ்ப்புணர்ச்சியை ஊடகங்களும் பிறரும் கொட்டிக் கொண்டிருக்கிறனர்.


வன்னியர்களை சிந்திக்க வைத்து ஒடுக்கப்பட்ட அம் மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கில் பாடுபட்டவர் டாக்டர் ராமதாஸ். தொண்டையை கணைத்து கொண்டு தமிழ் வெண்பாவுடன் பேச ராமதாசுக்கு தெரியாது. அவருக்கு பேச்சாற்றல் எல்லாம் கிடையாது. உண்மையை பேசுவார். "நீங்க உருப்புடனுன்னா முதல்ல சாராயம் குடிக்கிறத நிறுத்தனும்" என்று சாதாரண தமிழில் சொல்வார். அவர் பேச்சிற்கு முதலில் வன்னியர்களிடம் இருந்து எதிர்ப்பு தான் கிளம்பியது. வன்னியர்களிடம் இருந்தே டாக்டர் ராமதாசுக்கு பல நேரங்களில் எதிர்ப்பு ஏற்பட்டது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?

முதல் எதிர்ப்பு சாரயத்திற்கு ? வன்னிய மகளிர் அணியைக் கொண்டு கிராமங்கள் தோறும் சென்று அவரின் முன்னிலையில் சாராயக் கடைகளை அடித்து நொறுக்கினார்கள். பல கிராமங்களில் சாராயக் கடைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கெல்லாம் வன்னிய ஆண்களின் ஆதரவு ராமதாசுக்கு இருக்கவில்லை. இதனை எந்த ஊடகங்களும் எழுத வில்லை. கவனிக்கவில்லை.

ஆனால் அன்புமணி கோட்டும் சூட்டும் அணிவது தான் இவர்களுக்கு தெரிகிறது. மெத்த படித்த மேதாவி வலைப்பதிவு எழுத்தாளர் ஒருவர் இதனை எழுதினார். எனக்கு இவற்றை படிக்கும் பொழுதெல்லாம் ஆத்திரம் ஏற்படுவதில்லை. நம் சமூகத்தில் பாட்டாளி வர்க்கம் தலையெடுக்கும் பொழுது பிற மக்களின் மன உளைச்சலாகத் தான் இதனை கருதுகிறேன்.

ஒரு திருமண விழா ராமதாஸ் தலைமையில் நடந்து கொண்டிருக்கிறது. எந்த விழாவிலுமே எல்லா வேலைகளையும் பெண்கள் தான் செய்வார்கள். ஆனால் பந்திக்கு முந்துவது ஆண்கள் தான். எல்லா ஆண்களும் கொட்டிக்கொண்டது போக மீதம் உள்ளவற்றை பெண்கள் பந்தி என்று வைத்து அதில் சாப்பிடுவார்கள். ராமதாஸ் எல்லா வன்னிய திருமணங்களிலும் இனி பெண்களுக்குத் தான் முதல் பந்தி பின்பு தான் ஆண்களுக்கு என்று கூறினார். ஆனால் அவர் பேசி முடித்தது தான் தாமதம். அனைத்து ஆண்களும் அடித்து பிடித்து கொண்டு பந்திக்கு முந்தினர்.

இவ்வாறு பல விடயங்களில் திருந்தாத முரட்டு கூட்டமாக இருந்த வன்னிய இனம் தான் இன்றைக்கு சமூக பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்திருக்கிறது. நாகரிகம் பெற்ற சமூகமாக வன்னிய கிராமங்கள் மாற்றம் அடைந்து கொண்டிருக்கின்றன.

இந்த மாற்றத்திற்கு காரணம் டாக்டர் ராமதாஸ். ஒரு முரட்டு கூட்டத்தை திருத்தி அவர்களை தன் நிலை உணரச் செய்து போராட்ட குணம் மிக்க கூட்டமாக மாற்றினார். அவர்கள் வாழ்க்கை தரமும் பெரும் மாற்றம் கண்டது.
இன்றைக்கு வன்னிய சமூகத்தில் இருந்து பல மருத்துவர்களும், பொறியாளர்களும் உருவாகியிருக்கிறார்கள். உருவாகி கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் டாக்டர் ஐயாவின் அர்ப்பணிப்பு. போராட்ட குணம். ஒடுக்கப்பட்ட தன் இன மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற அவரது அயராத உழைப்பு. அதனால் தான் அவர் வன்னியர்களின் தலைவராக, இனமானக்காவலராக இருந்து கொண்டிருக்கிறார். வன்னியர்கள் அவர் பின் அணிவகுத்து நிற்கின்றனர்.


இந்த மாற்றங்களுக்கு விதை விதைத்தது 1987ல் நடந்த 7 நாள் தொடர் சாலை மறியல் போராட்டம். அந்த போராட்டத்தின் வெற்றி. அந்த வெற்றிக்கு காரணமான மாபெரும் தலைவன்.

Monday, May 23, 2005

மறக்கப்பட்ட போராட்டமும், மறைந்துபோன உயிர்களும் - 1

சென்னையில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக செல்பவர்கள், கும்பகோணம் சாலையில் செல்பவர்கள் சாலை ஓரங்களில் கறுப்பு கிராணைட் கற்களால் கட்டப்பட்ட சில தூண்களை பார்த்திருக்க கூடும். கறுப்பு நிறத்தில் இருக்கும் அந்த தூண் எதை குறிக்கிறது என்று சிலர் யோசித்திருக்கலாம். பலர் ஏதோ ஒன்று என்று நினைத்து கொண்டு சென்று இருக்கலாம். அந்த தூண் மீது ஒரு அக்னி கலசம் இருக்கும். ஒரு காலத்தில் உரிமை குரல் கொடுத்து எரிந்த கலசங்கள் அவை. இன்று வெறும் சின்னங்களாய் அன்றைய போராட்டத்தின் சாட்சியாய் நின்று கொண்டிருக்கின்றன.

அந்த தூண்கள் வன்னியர்களின் தியாகச் சின்னங்கள்.

வட மாவட்டங்களில் 9 இடங்களில் இந்த தூண்களை பார்க்கலாம். ஏன் இந்த தூண்கள் நிறுவப்பட்டன தெரியுமா ? அந்த இடத்தில் தான் 9 உயிர்கள் மாண்டன. தியாகிகளின் உயிர் பிரிந்த அதே இடத்தில் தூண்களை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் வன்னிய சமுதாயம் அந்த தியாகிகளின் தியாகத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

ஒரு காலத்தில் லட்சிய உணர்வுடன் இருந்த வன்னிய உணர்வு இன்று எங்கேனும் இருக்கிறதா என்றும் தேடிக்கொண்டிருக்கிறது.

இவர்கள் ஏன் தியாகிகள் ஆனார்கள் ? காந்தி பிறந்த அகிம்சை மண்ணில் அதே மண்ணின் காவல்துறையாலேயே மண்ணின் மைந்தர்களான இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தன்னுடைய குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தியவர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர்.

பெரியார் வழி வந்ததாக கூறிக்கொள்ளும் திராவிடக்கட்சிகளின் ஒரு கட்சி அன்றைக்கு ஆளுங்கட்சி. முதல்வர் அமெரிக்க மருத்துவமனையில் இருக்க அவரது அடிவருடிகள் ஆட்சி செலுத்தி காவல்துறையினை எம் மக்களின் மேல் ஏவினர். தமிழினத்தலைவராக தன்னை கூறிக்கொள்ளும் மற்றொரு திராவிட தலைவர் தமிழனின் ஒரு பிரிவு மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துள்ள அடக்குமுறையை கண்டுகொள்ளாமல் சென்னை அண்ணாசாலையில் அண்ணா அறிவாலய திறப்பு விழா நடத்திக் கொண்டிருந்தார்.

தமிழகத்தில் நடந்த பல போராட்டங்களில் எல்லோராலும் கொச்சைப்படுத்தப்பட்ட ஒரு போராட்டம். ஆனால் வன்னியர்களின் தியாகத்தின் எழுச்சியாக நடந்த போராட்டம். 9 உயிர்களை பறிகொடுத்து, பலவிதமான அடக்குமுறைகளுக்கும் இன்னல்களுக்கும் இடையே வெற்றிகரமாக நடந்த போராட்டம். வன்னிய சக்தியை உலகுக்கு அடையாளம் காட்டிய போராட்டம் - அது தான் 1987ல் நடந்த 7 நாள் தொடர் சாலை மறியல் போராட்டம்.

நான் அப்பொழுது பள்ளியில் 11வது படித்து கொண்டிருந்தேன். போராட்டத்திற்கு முதல் நாள் எங்கள் கிராமத்திற்கு காவல்துறையினர் வந்து முன்னேச்சரிக்கை நடவடிக்கை என்று சிலரை கைது செய்தனர். என்னுடைய அப்பா எங்கள் கிராமத்தின் வன்னியர் சங்க கிளை தலைவர். காவல்துரையினர் அவரை கைது செய்ய வருவார்கள் என்பது முன்கூட்டியே தெரியும் என்பதால் ஜெயங்கொண்டத்தில் இருந்த என் மாமா வீட்டிற்கு சென்று விட்டார். மாலையில் எங்கள் வீட்டிற்கு வந்த போலிசார் என் அப்பாவை பற்றி விசாரித்தனர். அவர் வெளியூர் போயிருக்கிறார் என்று சென்னோம். சென்று விட்டார்கள். முதல் நாள் போலிசார் சிலரை கைது செய்தாலும் ஓரளவு கண்ணியமாகவே நடந்து கொண்டனர். ஒரு போராட்டம் அதன் பொருட்டு சிலரை கைது செய்வது என்பது போலத் தான் அவர்களின் நடவடிக்கை இருந்தது. வன்னியர் சங்கம் பற்றி யாரும் அப்பொழுது பெரிதாக அறிந்திருக்கவில்லை.

முதல் நாளே போராட்டத்தின் தீவிரம் தெரியத்தொடங்கியது. பல இடங்களில் மறியல். சென்னை மற்றும் பிற இடங்களுக்கு செல்லும் வழித்தடங்களில் அரசு பேருந்துகள் எதுவும் செல்லவில்லை. தனியார் பேருந்துகள் விலக்கி கொள்ளப்பட்டன. என்னுடைய அப்பா ஜெயங்கொண்டத்தில் கைது செய்யப்பட்டு விட்டார். வீட்டில் மதியம் 2:10மணிக்கு திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் இருந்து ஒளிபரப்பாகும் மாநில செய்திகளை கேட்போம். தேசிய நெடுஞ்சாலைகள் ஸ்தம்பித்த செய்திகளை தெரிந்து கொள்வோம். முதல் நாளே சில இடங்களில் தடியடி மற்றும் போலிசாரின் துப்பாக்கி சூடு நடந்தது. முதல் நாள் போராட்டத்தில் 4 பேர் போலிசாரின் தூப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார்கள் என்று நினைக்கிறேன். 4 உயிர்களை கொடுத்து முதல் நாள் போராட்டம் வெற்றி பெற்றது.

எங்கள் கிராமத்தை சேர்ந்த முக்கியமானவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு விட்டார்கள். வீட்டில் என்னுடைய அம்மா, பாட்டி மற்றும் என் கிராமத்தினர் எல்லோரும் பீதியில் இருந்தனர்.

அதன் பிற்கு தான் போலிசாரின் அடக்குமுறை தொடங்கியது. போராட்டத்தை நசுக்க வேண்டும் என்று முடிவு செய்தனர் அல்லது அவர்களுக்கு அவ்வாறு நெருக்கடி - மேலிடத்தில் இருந்து உத்தரவு. அதே நேரத்தில் உயிர்கள் பலியாதனால் யாரும் போராட்டத்திற்கு வர மாட்டார்கள் என்றும் நினைத்தனர்.

மாறாக போராட்டம் தீவிரம் அடைந்தது. சில குழுக்கள் தலைமறைவாக பல கிராமங்களுக்கும் சென்று போராட்டத்தை தீவிரப்படுத்தினர். மறுநாளும் பல இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. சாலைகளில் பேருந்துகளை காவல்துறையினரின அணிவகுப்புடன் நடத்தினர். இதனை தடுத்தே தீர வேண்டும் என்று பல கிராமங்களில் முடிவெடுத்தனர். அதற்கு ஒரே வழி சாலையோரம் இருக்கும் மரங்களை வெட்டுவது. சாலைகளை சேதப்படுத்துவது.

எங்களுடன் இருந்ததெல்லாம் 20 வயதை ஒட்டியவர்கள் தான். நானும் அந்த அணியில் ஒட்டிக்கொண்டேன். நாங்கள் விதை விதைத்து வளர்த்த மரங்களை வீட்டிற்கு அழுகு பொருட்களை வேலைப்பாட்டுடன் செய்வதற்காக வெட்டாமல், எங்கள் தலையெழுத்தை மாற்றுவதற்காக வெட்டினோம். பல வருடங்கள் வளர்ந்த பலமான மரங்கள். பலர் சேர்ந்து வெட்டுவதெல்லாம் சாத்தியம் இல்லாத ஒன்று என்பது வெட்ட ஆரம்பித்த பிறகு தான் தெரிந்தது. என்ன செய்வது என்று யோசித்து சாலையோரங்களில் இருக்கும் பெரிய புளியமரங்களின் பொந்துகளில் மண்ணெண்ய் உற்றி நெருப்பு வைத்து கயிறு கட்டி சாலையில் சாய்த்தோம். பல வருடங்களாக அசையாமல் நின்று கொண்டிருந்த மரம் எங்கள் வாழ்கையின் தலையெழுத்தை மாற்றுவதற்காக மண்ணில் வீழ்ந்தது.

இரண்டாவது நாளும் போராட்டம் தீவிரமாகியது. போலிசார் இதனை எதிர்பாக்கவில்லை. எங்களை கலகக்காரர்கள் என்று அறிவித்து கண்டதும் சட உத்தரவிட்டனர். கிராமங்களுக்கு போலிசார் சென்று வீட்டில் இருப்பவர்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்த சம்பவங்களை வேள்விபட்ட என்னுடைய அம்மா என்னையும், என் தங்கைகளையும் ஜெயங்கொண்டத்தில் இருந்த என் மாமா வீட்டிற்கு அழைத்து கொண்டு சென்று விட்டார். பல கிராமங்கள் போலிசாரால் சூறையாடப்பட்டன.

இரண்டாவது நாள் கண்டதும் சுட உத்தரவிட்ட அரசின் நடவடிக்கையால் மேலும் சில உயிர்களை நாங்கள் பலிகொடுத்தோம்.

(போராட்டத்தில் பலியான வன்னிய தியாகிகளுக்கு டாக்டர் ராமதாஸ் என்ன செய்தார் என்று யாராவது கேட்ககூடும் ? இந்த போராட்டத்தின் முதல் வருட நினைவு வீரவணக்க கூட்டத்தில் தியாகிகளின் குடும்பங்கள் அனைத்தையும் டாக்டர் ஐயா தத்து எடுத்துக் கொண்டார்)

Sunday, April 10, 2005

சாதிக் கட்சிகளை விலக்குங்கள்

சாதிக் கட்சிகளை பற்றிய ஒரு சமூகவியல் ஆய்வு

இன்று தமிழ்நாட்டில் சாதிச் சங்கங்களும், சாதிக் கட்சிகளும் பெருகிக் கொண்டே இருக்கின்றன. அரசியலில் போக்கிடம் இல்லாமல் வீட்டிற்கு போக வேண்டிய முன்னாள் அரசியல்வாதிகளுக்கு சாதி ஒரு ஆயுதமாக மாறி இன்று ஒவ்வொரு அரசியல்வாதியும் அரசியலில் வேர்வை சிந்தி, உழைத்து சம்பாதித்த பணத்தை கொண்டு ஊர் ஊருக்கு கூட்டம் போட்டு சாதியின் பெயரால் கட்சி ஆரம்பித்து கொண்டிருக்கிறார்கள். மெத்த படித்த மேதாவிகள் எல்லாம் சாதிக் கட்சிகள் பெருகுகிறது என்று கூறிக் கொண்டே இந்துவிலும், தினமலரிலும் தங்கள் வாரிசுகளுக்கு எந்த கோத்திரத்தில் வரன் தேடலாம் என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த தேர்தலில் ஆரம்பிக்கப்பட்ட புதிய நீதிக் கட்சி, மக்கள் தமிழ் தேசம் போன்றவையெல்லாம் காணாமல் போன அரசியல்வாதிகள் மறுபிறப்பு எடுக்க மேற்கொள்ளப்பட்ட புது அவதாரம். இந்த அவதாரமும் கலைந்து போய் இந்தக் கட்சிகளுக்கு அந்த சாதி மக்களின் மத்தியில் கூட எந்த செல்வாக்கு இல்லை என்று நிருபிக்கப்பட்டது.

இந்தச் சாதி சங்கங்கள் மற்றும் கட்சிகளுக்கெல்லாம் காரணம் டாக்டர் ராமதாஸ் ஆரம்பித்த வன்னியர் சங்கமும், பிறகு வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியாக வளர்ந்து பெற்ற வெற்றிகளும் தான் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் போன்றோர் பெற்ற வெற்றியை ஏன் பிற சாதி சங்கங்களால் பெற முடியவில்லை. அவர்கள் யாருக்காக சாதி சங்கங்கள் தொடங்கினார்களோ அந்த சாதி மக்களே ஏன் இவர்களை கண்டு கொள்ள வில்லை. நம் சமூகச் சூழலை கொஞ்சம் ஆராய்ந்தால் அதற்கு காரணம் தெரியும்.

இந்த சாதிக் கட்சிகளை ஆராய வேண்டுமானால் வன்னியர் சங்கம் பெற்ற வெற்றியை முதலில் ஆராய வேண்டும். அன்றைய வன்னிய மக்களின் சமூக சூழலை பற்றி விளக்குகிறேன். இது நடுநிலை தவறாத நேர்மையான விளக்கம் என்பதை இப் பகுதிகளில் இருப்பவர்கள் அறிவார்கள்.

வன்னியர் சங்கம் 1980 களின் துவக்கத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது. வன்னியர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் பலப் பெயர்களில் பலவாறாக சிதறிக் கிடந்தனர். திண்டிவனம், விழுப்புரம், செஞ்சி, திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் கவுண்டர் என்றும், பண்ருட்டி, விருத்தாசலம், கடலூர், சிதம்பரம் போன்ற பகுதிகளில் படையாச்சி என்றும், சேலம், தருமபுரி போன்ற பகுதிகளில் கவுண்டர், படையாச்சி என்ற இரண்டு பெயர்களிலும் அழைக்கப்பட்டு வந்தனர். வன்னிய மக்கள் பெருமளவில் இருப்பது வடமாவட்டங்களில் தான். இவர்களை ஒன்று சேர்த்து வன்னியர்களுக்கான ஒரு அமைப்பாக வன்னியர் சங்கம் உருவாக்கப்பட்டது.

படையாட்சி = படை + ஆட்சி

இது தான் படையாட்சி என்ற பெயர் உருவாக காரணம். காலம் காலமாக இவர்கள் போர் வீரர்களாக இருந்ததாக சொல்லப்படுகிறது. தமிழ் மன்னர்கள் வரலாற்றில் கூட வன்னிப் படைகள் என்ற ஒரு பிரிவு இருந்தது. இவ்வாறு போர் வீரர்களாக இருந்து பின் அந்தப் படைகள் எல்லாம் கலைந்து போய் வாழ்கை போரட்டத்திற்காக கூலித் தொழிலாளர்களாக மாறினர். காலம் காலமாக இந்தப் பகுதியில் இவர்கள் இருந்தாலும் வன்னியர்களில் பெரும் பகுதி மக்களுக்கு சொந்தமாக ஒரு காணி நிலம் கூட கிடையாது. வட மாவட்டங்களில் ஆதிக்க சாதிகள் அல்லது மேல் சாதிகள் என்று சொல்ல வேண்டுமானால் அது நாயுடுக்கள், ரெட்டியார்கள், முதலியார்கள் போன்றோர்களே. விளை நிலங்கள் பெரும்பாலும் இவர்கள் கைகளில். இவர்களிடம் கூலி வேலை செய்வது வன்னியர்கள். இது தான் இங்கிருந்த நிலை.

தமிழ் நாட்டு மக்கள் தொகையில் சுமார் 20% மக்கள் வன்னியர்கள் தான். ஆனால் இந்தப் பெரும்பான்மையான மக்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கூலித் தொழிலாளிகளாக இருந்த நிலையில் தான் இவர்களின் முன்னேற்றத்திற்காக வன்னியர் சங்கம் பிறந்தது.

இந்தச் சமுதாயத்தில் பிறந்து இம் மக்கள் பட்ட இன்னல்களை கண்டு இந்த இன்னல்களுக்கு ஒரு விடிவு தேட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அரசு மருத்துவராக இருந்த டாக்டர் ராமதாஸ் வன்னியர் சங்கம் என்ற அமைப்பை நிறுவினார். ஒவ்வொரு வன்னிய கிராமத்திற்கும் சென்று அந்த கிராமத்தின் உண்மை நிலையை கண்டு அம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டுமானால் இந்த சாதி மக்களின் எண்ணிக்கைக்கேற்ப விகிதாச்சார முறையில் இடஒதுக்கீடு பெற வேண்டும் என்று முடிவு செய்தார். அதனால் உதித்தது தான் இடஒதுக்கீட்டு போராட்டம். வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் மாநிலத்தில் 20%, மத்தியில் 2% கேட்டு துவங்கிய இடஒதுக்கீட்டு போராட்டம்.

முதலில் உண்ணாவிரதம், ரயில் மறியல், ஒரு நாள் சாலை மறியல் என்று தொடங்கி பின் 7 நாள் தொடர் சாலை மறியல் போராட்டம் 1987ல் நடந்தது.

1987ல் நடந்த 7 நாள் தொடர் சாலை மறியல் போராட்டம் தான் வன்னியர் சங்கத்தை உலகுக்கு அடையாளம் காட்டியது. தமிழகத்தின் வட மாவட்டங்கள் ஸ்தம்பித்தன. சென்னைக்கு ஏழு நாட்களும் எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. கிராமங்கள் தோறும் போலீஸாரின் அடக்குமுறை. ஆண்கள் எல்லாம் சிறையில் இருக்க கிராமத்தில் எஞ்சியிருந்த பெண்களிடம் போலீஸார் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவங்கள் நிறைய உண்டு. என்னை போன்றவர்கள் எங்கள் பகுதியில் இருந்த ஏராளமான முந்திரி தோப்புகளில் ஒளிந்து கொள்வோம். இந்தப் போராட்டத்தில் 9 பேரை போலீஸாரின் துப்பாக்கி சூட்டில் வன்னிய சமுதாயம் பறிகொடுத்தது. பலர் காயமடைந்தனர். இந்தப் போராட்டத்தை எப்படியும் வெற்றியடைந்த வைத்து விட வேண்டும் என்ற வைராக்கியத்தில் பல மரங்களை நாங்கள் வெட்டினோம் என்பதும் உண்மை. வெட்டப்பட்ட மரங்களில் என்னுடைய பங்கும் உண்டு. இதனை நான் பெருமையாகக் சொல்ல வில்லை. ஆனால் எங்கள் போராட்டம் வெற்றியடைய வேண்டும் என்ற வேட்கைக்கு முன்பாக மரங்கள் எங்களுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. 9 பேரை போலீஸாரின் துப்பாகிச் சூட்டிற்கு பலி கொடுத்த எங்கள் சமுதாயத்தின் தியாகம் பற்றி ஊடங்கங்கள் இதுவரை ஒன்றுமே எழுதவில்லை. ஆனால் அவர்கள் எழுதியதெல்லாம் நாங்கள் வெட்டிய மரங்களைத் தான். நாங்கள் செய்த தவறுக்கு நிவாரணம் தேடத் தான் இன்று பசுமை தாயகம் சார்பாக லட்சக்கணக்கான மரக்கன்றுகளை வளர்க்கிறோம்.
(இந்தப் போராட்டத்தை பற்றிய எனது சாட்சியமாக நான் கண்டவற்றை மிக விரிவாக மற்றொரு பதிவில் பதிவு செய்கிறேன்)

இவ்வாறு போராடி பெற்றது தான் மிகப் பிற்படுத்த சமுதாயத்திற்கான (Most Backward Classes - MBC) 20% இடஒதுக்கீடு. வன்னிய மக்களுக்கு மட்டும் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டால் பிரச்சனை உருவாகும் என்ற காரணத்தால் பின்தங்கி இருந்த பலச் சாதிகளை ஒன்றிணைத்து MBC பிரிவு உருவாக்கப்பட்டது. ஆனால் எண்ணிக்கையை கொண்டு பார்த்தால் இதில் இருக்கும் முக்கிய பிரிவு வன்னியர்கள் தான். இன்று வன்னிய சமுதயாத்தில் இருந்து பல பெறியாளர்கள், மருத்துவர்கள் உருவாகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இந்த இடஒதுக்கீடு தான். நான் இன்று ஜெர்மனியில் இருந்து எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால் அது ராமதாஸ் என்ற மனிதர் வன்னிய மக்களின் மத்தியில் உருவாக்கிய விழிப்புணர்ச்சியும் அதன் காரணமாக நடந்த போராட்டங்களும் அதற்கு விலையாக கொடுத்த உயிர்களும் தான்.

இது தான் வன்னியர் சங்கத்தின் வெற்றி. டாக்டர் ராமதாஸ் என்ற தனி மனிதன் சாதித்த வெற்றி. தன் சமுதாயத்திற்காக ராமதாஸ் என்ன செய்தார் என்று கேள்வி கேட்பர்வர்களுக்கு எங்களுடைய சிறிய பதில் இது (இன்னும் பல இருக்கின்றன).

இவ்வாறு வன்னியர் சங்கம் உருவாக ஒரு காரணம் இருந்தது. பிந்தங்கியிருந்த ஒடுக்கப்பட்ட வன்னிய மக்களை முன்னேற்ற அன்றைக்கு ஒரு அமைப்பு தேவைப்பட்டது. ஒரு தலைவர் தேவைப்பட்டார். ராமசாமி படையாச்சியார், பண்ருட்டியார் போன்ற பல வன்னிய தலைவர்கள் இருந்தாலும் சுயநலம் இல்லாத போராட்ட குணம் மிக்க ஒரு தலைவர் அன்றைக்கு தேவைப்பட்டார். அந்த போராட்ட குணம் மிக்க தலைவராக தோன்றியவர் தான் டாக்டர் ராமதாஸ். அவரை வன்னியர்கள் கெட்டியாக பிடித்துக் கொண்டனர். அவர் வன்னியர்களின் ஒரே தலைவராக உருவாகினார்.

எந்த தலைவரும் திடீர் என்று உருவாகுவதில்லை. அன்றைக்கு இருக்கும் சமூக சூழல், மக்களின் பிரச்சனை போன்றவற்றுக்கு அவர்கள் மேற்கொள்ளும் அணுகுமுறை இவற்றால் தான் உருவாகுகிறார்கள்.

தந்தை பெரியார் உருவானதும் அப்படித் தான். அவர் உருவாக்கிய அமைப்பை அடித்தளமாக கொண்டு தான் அண்ணாவும், கலைஞரும் இன்று காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எம்.ஜி. ஆர் அவர்கள் இந்த சித்தாந்தத்தில் இருந்து விலகி சினிமா கவர்ச்சியை கொண்டு அரசியலுக்குள் நுழைந்தார். இதனை திட்டமிட்டு செய்தார். திடீரென்று செய்ய வில்லை. இந்த சித்தாந்தமும் அவர் ஒருவருக்கு தான் சரியாக வந்தது. அதற்கு சாட்சி கடந்த தேர்தலில் ரஜினிகாந்த் கண்ட தோல்வி.

அது போலவே தலித் போராட்டம் என்பது திருமாவளவன் புதியதாக கண்டெடுத்த ஒன்று இல்லை. ஆனால் தலித்துகளுக்காக பல தலைவர்கள் தோன்றி எவருவே மக்களின் அபிமானத்தை பெறாத நிலையில் ஒரு போராட்ட குணம் மிக்க தலைவராக நேர்மையான தலைவராக தலித்துகளுக்கு கிடைத்தவர் தான் திருமாவளவன்.

ஆக மக்கள் முட்டாள்கள் அல்ல. தங்களுக்கு ஒரு தலைவன் தேவைப்படும் பொழுது தான் தங்களுக்கான தலைவரை அங்கீகரிக்கிறார்கள்.
அதனால் தான் தேவையில்லாத சமயத்தில் தோன்றிய சாதிக் கட்சிகளை மக்கள் நிராகரித்தார்கள்.

முதலியார்களுக்காக ஒரு தனிக் கட்சியை (புதிய நீதிக் கட்சி) ஏ.சி. சண்முகம் நிறுவனம் செய்ய வேண்டிய அவசியம் என்ன ?

முதலியார்கள் பிற்படுத்த பட்டியலில் இருந்தாலும் உண்மையில் பிற்படுத்தப்பட்டவர்கள் அல்லவே. அவர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் மிகவும் முன்னேறிய சமுதாயம் தானே. ஏ.சி.சண்முகத்திற்கு அரசியலில் அங்கிகாரம் பெற வேண்டிய அவசியம் இருந்ததால் சாதிக் கட்சியை தொடங்கினார். ஆனால் முதலியார் சமூகத்துக்கு அவரது கட்சியை ஆதரிக்க வேண்டிய பின்பற்ற வேண்டிய எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்பதால் அதனை நிராகரித்தார்கள்.

அதிக எண்ணிக்கையில் இருக்கின்ற தேவர் சமுகத்திற்கும் ஒரு தலைவரும் இல்லையே ஏன் ? தங்களுக்கென ஒரு தலைவரை தெரிவு செய்ய வேண்டிய அவசியம் அம் மக்களுக்கு இல்லை.

இது போல தான் பல சாதி சங்கங்களும் அதற்கான தேவை இல்லாமல் அந்தச் சாதி மக்களாலேயே நிராகரிக்கப்பட்டன.

டாக்டர் ராமதாஸ் பெற்ற வெற்றியை கண்டு வன்னிய மக்களுக்காக போட்டியாக அமைப்புகளை தொடங்க முயன்ற பல தலைவர்கள் தோல்வியையே கண்டனர். அவர்கள் அதற்கு கண்டெடுத்த ஆயுதம் வன்னியர்களின் போராட்டம் காரணமாக பெற்ற 20% இடஒதுக்கீடு பிற சமுதாயத்திற்கு போய் சேருகிறது. வன்னியர்களுக்கான தனி ஒதுக்கீடு வேண்டும் என்பது தான். ஆனால் இதற்கு வன்னியர்கள் மத்தியிலேயே ஆதரவு இருக்க வில்லை. இன்று பல வன்னிய கிராமங்களில் படித்த இளைஞர்கள் உருவாகி விட்டார்கள். சமுதாயம் முன்னேற தொடங்கியிருக்கிறது. இந்த வாதம் எடுபடவில்லை.

இனி தொடங்கப்படும் எந்தச் சாதிக் கட்சியும் வெற்றி பெற முடியாது. சாதியை மட்டுமே முன்னிறுத்தி அங்கீகாரம் பெற முடியாது. நான் இந்தச் சாதிக் கட்சிகளை விலக்குங்கள் என்ற பதிவு எழுதுவதற்கும் அவசியம் இப்பொழுது இல்லை. ஏனெனில் மக்கள் தாமாகவே அக் கட்சிகளை நிராகரித்து விடுவார்கள்.

இன்று புதியதாக அரசியல் கட்சியை யார் தொடங்கினாலும் அவர்களும் தோல்வியே அடைவார்கள். ஏனெனில் அதற்கான அவசியம் இன்று இல்லை.

Monday, April 04, 2005

நான் RSS எதிர்ப்பாளன் - 4

காந்தியார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பொழுது மறுபடியும் ஒரு மன்னிப்பு கடிதத்தை சர்வார்கார் எழுதினார்.

அவருக்கும் மன்னிப்பு கடிதத்திற்கு அப்படி ஒரு நெருங்கிய தொடர்பு. கூசாமல் தன் கொள்கை, போராட்டங்கள், இயக்கம் போன்றவற்றை ஒதுக்கி வைத்து விட்டு தான் மட்டும் தப்பித்தால் போதும் என்று ஒரு மன்னிப்பு கடிதம் கொடுத்து விடுவார்.

இவ்வாறு 1911, 1913, 1925, 1948, 1950 என பல தடவை மன்னிப்பு கடிதங்களை கொடுத்துள்ளார்.

1948, பிப்ரவரி 22ம் தேதியிட்ட மன்னிப்பு கடிதத்தை சுதந்திர இந்தியாவின் பாம்பே காவல்துறை கமிஷனருக்கு தன்னை காந்தியார் கொலை வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக கொடுக்கிறார்

"Consequently, in order to disarm all suspicion and to back up the above heart representation, I wish to express my willingness to give an undertaking to the government that I shall refrain from taking part in any communal or political public activity for any period the government may require in case I am released on that condition."

இந்த மனு நிராகரிக்கப்பட்டு விட்டது

இதன் பிறகு ஜூலை 13, 1950ம் ஆண்டு மற்றொரு மன்னிப்பு கடிதம். சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டுமானால் எந்தவிதமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்று நீதிபதி கேட்க, அவ்வாறே இருப்பதாக சர்வார்கார் உத்திரவாதம் கொடுக்க அவரும் விடுவிக்கப்பட்டார்.

போதும்டா சாமி..இது போல ஒரு கேவலத்தை இது வரைக்கும் பார்த்ததில்லை.

இறுதியாக இந்த பதிவுகளை முடிக்கும் முன்பு அத்வானியின் ஒரு நகைச்சுவையை பாருங்கள். சர்வார்கார் பகத்சிங்கிற்கு ஒப்பான தியாகியாம்.

பகத்சிங்கின் கால் தூசிக்கு கூட சர்வார்கார் ஈடாக மாட்டார்.

பகத் சிங்கின் தியாகம் அளவிட முடியாதது. பகத் சிங் தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் இப்படி கூறுகிறார்

"என்னுடைய உயிரை நான் துச்சமென மதிக்கிறேன். கொள்கைக்கு முன்பு என் உயிர் ஒரு பொருட்டல்ல. என்ன விலை கொடுத்தாலும் நான் எடுத்த நிலையில் இருந்து பின்வாங்க மாட்டேன்"

தன்னுடைய மரணத்திற்கு முன்பாக பகத்சிங் இப்படி கூறினார்.

"எங்களை உங்களுடைய தீர்ப்பில் போர்க் கைதியாகத் தான் கூறியிருக்கிறீர்கள். போர்க் கைதிக்கு தரும் தண்டனை தூக்கிலிடுவதில்லை. துப்பாக்கியால் சுடுவதே. எங்களை துப்பாக்கியால் சுடுங்கள். அவ்வாறு சாவதையே நான் விரும்புகிறேன்".

பகத் சிங்கின் தியாகம் எங்கே ? தனக்கு உயிர் பிச்சை கேட்டு பிரிட்டிஷாரிடம் பின்பு இந்திய அரசிடமும் மண்டியிட்ட சர்வார்கார் எங்கே ?

எனக்கு இவ்வாறு ஒப்புமை படுத்தி எழுதுவதற்கே கேவலமாக இருக்கிறது. அளவிட முடியாத தியாகத்தை மித மிஞ்சிய கேவலத்தையும் எங்ஙனம் ஒப்பிடுவது

காலம் அப்படி மாற்றி விட்டது. சரித்திரத்தை மாற்ற நினைக்கிறார்கள்.

பகத்சிங்கின் வழி வந்த வீரத்தையும் தேசப்பற்றையும் மெச்சுகிற நான், தேசவிரோதியான சர்வார்கரை எப்படி ஆதரிக்க முடியும் ? அவர் சித்தாந்தத்தை பின் பற்றுகிற RSS இயக்கத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

எனவே தான் நான் RSS எதிர்ப்பாளனாக இருக்கிறேன்

- நிறைவுற்றது -

Sunday, April 03, 2005

நான் RSS எதிர்ப்பாளன் - 3

காந்தியார் கொலை வழக்கில் அப்ரூவராக மாறிய இந்து மகா சபையைச் சேர்ந்த பாத்வே என்பார் பின்வருமாறு சாட்சியம் அளித்தார்.

1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி நாதுராம் விநாயக் கோட்சே, நாரயணன் ஆப்தேவுடன் பாத்வேவும் சர்வார்கரை சந்திக்க சென்றுள்ளார். அங்கு சர்வார்கார் கோட்சே மற்றும் நாரயணன் ஆப்தேவிடம்
"காந்தியின் சகாப்தம் முடிந்து விட்டது. வெற்றியுடன் திரும்பி வா" என்று கூறி சர்வார்கார் வழியனுப்பி வைத்தாராம்.

சர்வார்கார் ஏன் காந்தியடிகளை கொலை செய்ய முடிவு செய்தார் என்பதை பார்க்கும் பொழுது இன்றைய பாரதீய ஜனதாவின் அத்வானிகளும் நரேந்திர மோடிகளும் எதைத் தேடி அலைகிறார்களோ அதற்கு தான் சர்வார்கரும் அலைந்தார் என்பது தெரிகிறது. அது தான் பதவி, அரசியல் வெறி.

இன்றைய பாரதிய ஜனதா இந்துத்வா மதவெறியை தூண்டி விட்டு ஆட்சியை பிடிக்க துடிப்பது போல அன்றைக்கு இந்து மகா சபை அரசியல் அதிகாரம் பெற காந்தியாரை கொலை செய்வது தான் ஒரே வழி என்று சர்வார்கார் முடிவு செய்தார். இந்துக்களின் பெரும்பகுதியினர் காந்தி பின் அணிவகுப்பதை சர்வார்கார் விரும்பவில்லை. தான் மிகவும் நம்பியிருந்த பிரிட்டிஷாரும் தன்னை புறக்கணித்து விட்டு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கி விட்டு சென்று விட்டதால் காந்தியை கொன்றால் தான் தனக்கு அரசியல் எதிர்காலம் இருக்கும் என்று முடிவு செய்தார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த அம்பு தான் கோட்சே.

கோட்சே சர்வார்கார் இடையேயான தொடர்பு குறித்த பல விபரங்கள், அப்ரூவர் கொடுத்த சாட்சியங்கள் இருந்தாலும் அதனை வலுவாக நிருபிக்க முடியவில்லை. இது எல்லா பெருந்தலைகளின் வழக்குகளில் இந்தியாவில் நடைபெறுவது வழக்கம் தானே.

இந்தக் கொலை குறித்த விபரங்கள் சர்வார்காரின் மரணத்திற்கு (1966) பிறகு தான் அதிகம் வெளியாகியது. உச்சநீதிமன்ற நீதிபதி கே.எல்.கபூர் தலைமையில் இந்த கொலை வழக்கு பின்னனி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணண கமிஷன் தான் காந்தியார் கொலை வழக்கில் சர்வார்கருக்கு இருந்த தொடர்புகளை அம்பலப்படுத்தியது. ஆனால் இந்த விசாரணை கமிஷனின் அறிக்கைகள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படவில்லை.

சர்வார்காரின் உதவியாளர்களாக இருந்த ராமச்சந்திர கேசர், விஷ்ணு தம்லே போன்றோர் இந்த விசாரணை கமிஷன் முன்பு சாட்சியம் அளித்துள்ளார்கள். இந்த கமிஷன் இறுதியாக சமர்பித்த தன் அறிக்கையில் சர்வார்கார் மற்றும் அவரது குழுவினர் தான் காந்தியாரை கொல்ல சதி திட்டம் தீட்டி கொலையும் செய்தார்கள் என்று தெரிவிக்கிறது. இது நீதி மன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருந்தால் சர்வார்கார் குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டிருப்பார்.

தில்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு மறுபடியும் 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி கோட்சே, ஆப்தே இருவரும் சர்வார்கரை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்கள் என்று சர்வார்கரின் உதவியாளரான விஷ்ணு தம்லே வாக்குமூலம் அளித்தார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததாகவும் கோட்சே சர்வார்கரின் வீட்டிற்கு எப்பொழுது வேண்டுமானாலும் வந்து செல்லக் கூடிய செல்வாக்கு பெற்றிருந்ததாகவும் தன் வாக்குமூலத்தில் இவர் கூறியிருக்கிறார்.

அப்பொழுது உள்துறை அமைச்சராக இருந்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல்.
அத்வானியை இன்னெரு சர்தார் வல்பாய் பட்டேல் என்று தான் பாரதீய ஜனதா கட்சியினர் கூறுகிறார்கள். அத்தகைய சர்தார் வல்லபாய் பட்டேல் காந்தியாரின் கொலையில் சர்வார்கார் உள்ளிட்ட இந்து மகா சபையைச் சேர்ந்தவர்கள் தான் திட்டமிட்டு செய்ததாக முழுமையாக நம்பினார்

"It was a financial wing of the Hindu Mahasabha directly under Savarkar that (hatched) the conspiracy and saw it through"
என்று சர்தார் வல்லபாய் பட்டேல் கூறியிருக்கிறார்.

இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சர்வார்கார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோர்ட் விசாரணையின் பொழுது தனக்கும் கோட்சே மற்றும் ஆப்தே ஆகியோருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சர்வார்கார் உண்மையை மறைத்து பொய் சொன்னார். அவர்கள் ஏதோ கட்சி தொண்டர்கள் என்ற வகையில் தான் தனக்கு தெரியும் என்று சர்வார்கார் சொன்னார்.

ஆனால் சர்வார்காரின் மறைவுக்கு பிறகு 1967ம் ஆண்டு கோட்சேவின் சகோதரர் கோபால் எழுதிய "காந்தியின் படுகொலையும் நானும்" என்ற புத்தகத்தில் கோட்சேவுக்கும் சர்வார்காருக்கும் இருந்த தொடர்பை அம்பலப்படுத்தியிருக்கிறார். பல இடங்களுக்கு ஒன்றாக செல்லும் அளவுக்கு அவர்கள் இருவருக்கும் நெருங்கிய நட்பு இருந்ததாக கோபால் தெரிவிக்கிறார்.

இவ்வாறு காந்தியாரின் படுகொலைக்கு காரணமான சர்வார்காரின் புகைப்படம் தான் இன்று பாரளுமன்றத்தில் காந்தி, சர்தார் பட்டேல் ஆகியோர் இருக்கும் இடத்திற்கு நேர் எதிராக அலங்கரித்து கொண்டிருக்கிறது.

அந்தமான் விமான நிலையத்திற்கு சர்வார்கார் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இவரைத் தான் பாரதீய ஜனதா தனது வழிகாட்டியாக கொண்டுள்ளது. காந்தியார் சுதந்திரம் வாங்கித் தந்த நாட்டின் பாராளுமன்றத்தில் அவரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய சதிகாரர் சர்வார்கரின் புகைப்படமும் அலங்கரிப்பது இந்தியர்கள் அனைவருக்கும் கேவலம்

அந்தமான் சிறையில் வாடிய பல தியாகிகள் ஊர் பெயர் தெரியாமல் காணாமல் போய் விட்டார்கள். ஆனால் பிரிட்டிஷாருக்கு கூஜா தூக்கியவரின் பெயரில் அந்தமான் விமான நிலையம்

இந்தியாவில் உண்மையான தியாகத்திற்கு என்றுமே மதிப்பு கிடையாது

பதிவுகள் தொடரும்

ஆதாரம் :- Savarkar & Hindutva - The Godse Connection by A.G. Noorani

நான் RSS எதிர்ப்பாளன் - 2

டோண்டு தன் பதிவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எப்படி நாசிக்களை ஆதரித்தாரோ அது போலத் தான் தாங்களும் நாசிக்களை ஆதரித்ததாக கூறி நோதாஜியுடன் தங்களை இணைத்து கொள்ள முனைகிறார்.

ஆனால் நேதாஜி தன் ஆதரவை நாசிக்களுக்கு தெரிவிக்கும் பொழுது பின் வருமாறு கூறினார்

"It is dreadful, but it must be done. It is our only way out. India must gain her independence, cost what it may. Have you any idea, Mr. and Mrs. Kurti, of the despair, the misery, the humiliation of India? Can you imagine her suffering and indignation? British imperialism there can be just as intolerable as your Nazism here."

From the book K. Kurti, Subhas Chandra Bose as I knew him

இவ்வாறு நாசிக்களின் கொள்கைகளுக்கு எதிராக இருந்தாலும், நாசிக்களின் கொள்கை மோசமானது என்று அறிந்திருந்தாலும் இந்திய விடுதலைக்காகவே நேதாஜி அவர்களை ஆதரிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

ஆனால் சர்வார்காரோ இந்திய விடுதலைக்கும் பாடுபடவில்லை. பிரிட்டிஷாருக்கும் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தார். அப்புறம் என்ன இந்திய நலனுக்காக ஆதரித்தார் என்று பேச்சு என்பது தான் விளங்கவில்லை.
சர்வார்கார் பெரும்பான்மையாக உள்ள மக்கள் சர்வாதிகாரிகளாக இருக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர். அந்த வகையில் நாசிக்கள் யூதர்களை ஜெர்மனியை விட்டு துரத்தியதையும் ஆதரித்தவர். அவர் வழி வந்த கூட்டம் தான் இப்பொழுது இஸ்ரேலை ஆதரிப்பதாக கூறிக் கொள்கிறது.

ஜெர்மனியில் நாசிக்கள் யூதர்களை விரட்டியடித்தது போல முஸ்லீம்களை இந்தியாவை விட்டு வெளியேற்றி இந்து ராஷ்டிரம் அமைத்து விட வேண்டும் என்பது தான் சர்வார்காரின் எண்ணம்.

"A nation is formed by a majority living therein. What did the Jews do in Germany? They being in minority were driven out from Germany."

"The Indian Muslims are on the whole more inclined to identify themselves and their interests with Muslims outside India than Hindus who live next door, like Jews in Germany."

ஆக நாசிக்கள் உயர்வாக இருக்கும் பொழுது நாசிக்களுக்கு ஆதரவு, இஸ்ரேல் இன்று அதிகார பீடமாக இருப்பதால் இஸ்ரேலுக்கு ஆதரவு. இன்று சிங்கள இனவெறி ஆட்சி பீடத்தில் இருப்பதால் அவர்களுக்கும் ஆதரவு

சர்வார்கார் காந்தியாரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய குழுவில் முக்கியமானவர். இந்த கொலை வழக்கின் பின்னனியை விசாரித்த கபூர் கமிஷன் சர்வார்காருக்கும் கோட்சேவுக்கும் உள்ள தொடர்பை அமபலப்படுத்தினாலும் இதனுடைய விபரங்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படவில்லை.

அது போலவே காந்தியாரை கொன்ற குற்றத்தை ஒப்புக் கொண்டு வேறு யாரும் இந்த படுகொலையில் சம்பந்தப்படவில்லை என்று கோட்சே அளித்த வாக்குமூலமும் சர்வார்காரை தப்பிக்க வைத்தது.

கோட்சேவின் குரு சர்வார்கார் தான் என்பதும் இந்த படுகொலைக்கு முன்பாக 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 14 மற்றும் 17 தேதிகளில் கோட்சேவும் சர்வார்கரும் சந்தித்தார்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்த உண்மை

துகிலுரிக்கும் பதிவுகள் தொடரும்

Saturday, April 02, 2005

நான் RSS எதிர்ப்பாளன் - I

சர்வார்கார் தேசபக்தரா ? இது அவரை துகிலுரியும் பதிவு

அந்தமான் சிறையில் சர்வார்கார் வாடியதாகவும் நாட்டின் சதந்திரத்திற்காக அவர் போராடியதாகவும் பாரதிய ஜனதா கட்சியினர் கூறுகிறார்கள். அவர்கள் தான் தேசபக்தர்கள் போலவும் அவர்களின் நிறுவனர் சர்வார்கார் தான் பெரிய தேசபக்தர் என்றும் கூறிக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் நடந்தது அவர்கள் கூறுவதற்கு எதிர்மறையானது. எதையாவது அழுத்தமாக கூறிக் கொண்டே இருந்தால் உண்மையாகிவிடும் என்ற நினைப்பு அவர்களுக்கு உண்டு.

1910ம் ஆண்டு சர்வார்கார் ஒரு கொலைக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அந்தமான் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். 1911ம் ஆண்டும், 1913ம் ஆண்டு என இரு முறை தன்னை விடுவிக்க பிரிட்டிஷ் அரசிடம் கருணை வேண்டி மனு கொடுத்தார்.

1913ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் நாள் தேதியிட்ட அந்த கருணை மனுவில் பின்வருமாறு கூறுகிறார்

"என்னை நீங்கள் விடுவித்தால் பிரிட்டிஷ் அரசுக்கு அடிபணிந்து இந்த அரசுக்கு விசுவாசமாய் இருப்பேன். என்னை நீங்கள் விடுவிப்பதால் என்னை பின்பற்றுகிறவர்களும் உங்கள் பின் அணிவகுப்போம். இந்தியாவில் இருக்கும் வழிதவறிய இளைஞர்களையும் (சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருப்பவர்களைத் தான்இப்படி சொல்கிறார்) நாங்கள் மாற்றி விடுவோம்."

என்னுடைய மொழிபெயர்ப்பு கொஞ்சம் மோசமாக இருக்கும். ஆனால் உண்மையான வாசகங்கள் இதைவிட கேவலமாக இருக்கும். அதை அப்படியே தருகிறேன்

"The Mighty alone can afford to be merciful and therefore where else can theprodigal son return but to the parental doors of the government?"

prodigal son = வீணாப்போன மகன் என்று சொல்லலாமா ?

சர்வார்கர் தன்னைத் தானே "வீணாப்போன மகன்" என்று கூறிக் கொள்கிறார். இந்த வீணாப்போனவனுக்கு கருணை காட்டுங்கள் என்று கெஞ்சுகிறார். அந்த வீணாப்போனவரைத்தான் இன்று ஒரு வீணாப்போன கூட்டம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

அந்தமான் சிறையில் இருந்த பெங்காலிய புரட்சியாளர் திரிலோக்கிய நாத் சக்ரவர்த்தி என்பார் சர்வார்காருடன் அந்தமான் சிறையில் இருந்தவர். அவர் தனது நூலில் அந்தமான் சிறையில் இருந்த நிலைமைகள் குறித்து கூறுகிறார். அந்தமான் சிறையில் நிலைமை மிக மோசமாக இருந்ததாம். அங்கு இருந்தவர்களில் மூத்த வயதினராக இருந்த சர்வார்கார் அங்கிருப்பவர்களை சிறையில் இருக்கும் நிலைமைகளை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கும் படி சொல்கிறார். அவர் சொல்வதைக் கேட்டு அனைவரும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஆனால் மற்றவர்களை உண்ணாவிரதம் இருக்க தூண்டிய சர்வார்கார் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வில்லை. இதனால் எரிச்சலடைந்த சக்ரவர்த்தி "எங்களை தூண்டி விட்டு நீங்கள் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறீர்களே" என்று கடிந்து கொண்டாராம்.

இது தான் சர்வார்கார் தியாகத்தின் லட்சணம்

இறுதியாக சிறையில் இருந்து வெளியேறும் முன்பாக அவர் எழுதிக் கொடுத்த உத்திரவாதக் கடிதம் கீழே தரப்பட்டுள்ளது

"I hereby acknowledge that I had a fair trial and just sentence. I heartilyabhor methods of violence resorted to in days gone by and I feel myselfduty bound to uphold law and constitution (British, added) to the best of mypowers and am willing to make the 'reform' a success in so far as I may beallowed to do so in future"

இங்கு அவர் கூறும் 'reform' - Montague Chelmsford proposals of 1919.

இதனை காந்தியார் மற்றும் வேறு எந்த தேசபகதர்களும் ஏற்றுக் கொள்ள வில்லை.

இவ்வாறு இந்திய நலனுக்கு பாடுபட்ட சர்வார்கார் ஹிட்லருக்கு பின் வருமாறு ஆதரவுதெரிவித்தார்.

"Germany has every right to resort to Nazism and Italy to Fascism and eventshave justified that those isms and forms of governments were imperative andbeneficial to them under the conditions that obtained there...."

தன்னுடைய பதிவில் டோண்டு இந்தியாவின் நலனுக்காகத் தான் ஹிட்லரை தாங்கள் ஆதரித்ததாக கூறுகிறார். ஆனால் இந்த அறைகூவல் விடுப்பதற்கு பல வருடங்கள் முன்பாகவே இந்தியாவின் நலனை பிரிட்டிஷாரிடம் அடகு வைத்து விட்டார்கள்.

சர்வார்காரின் அறைகூவலையும், நேதாஜியின் ஆதரவையும் ஒன்றாக்கி பார்க்க டோண்டு முயலுகிறார். நேதாஜியின் கால் தூசிக்கு கூட சர்வார்காரை சம்பந்தப்படுத்த முடியாது என்பதற்கு மேலே கூறியுள்ள ஆதாரங்களே போதுமானாது.

தங்களுக்கு சலுகையும், அடிபணிந்து ஏவல் செய்ய ஒரு வேலையும் இருந்து விட்டால் யாருக்கு வேண்டுமானாலும் கூஜா தூக்குவார்கள். அப்படித் தான் சர்வார்கார் கூஜா தூக்கினார்.

ஒரு முறை அல்ல பல முறை.

1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தியார் ஆரம்பித்தார். அரசு ஊழியர்களை அரசுப் பணியில் இருந்து விலகுமாறு கூறினார்.

அப்பொழுது சர்வார்கார் "இந்துக்கள் யாரும் தங்கள் அரசாங்க உத்தியோகங்களை விட்டு விலகக் கூடாது. அரசு ஊழியர்கள் அரசாங்கத்திற்கான தங்கள் கடமைகளை (பிரிட்டிஷ் அரசுக்கு) தொடர்ந்து செய்து வர வேண்டும்" என்று கூறினார்.

பதவி சுகம் அதிகாரம் என இதற்காகத் தான் இவர் பலரை பல நேரங்களில் ஆதரித்தார் என்பது எல்லோருக்கும் புரியும். டோண்டுவுக்கும் புரியும். புரியாதது போல நடிப்பார்.

இங்கு நான் டோண்டு என்று கூறுவது டோண்டுவை மட்டும் அல்ல, மொத்த கூட்டத்தையும் தான். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தானே பதம். அதற்கு தான் டோண்டுவை அடையாளம் காட்டுகிறேன்

அடுத்த பதிவில் காந்தியாரை கொலை செய்த சதியில் சர்வார்கரின் பங்களிப்பை பற்றி எழுதலாம் என்று எண்ணம்