Tuesday, November 01, 2005

நம் தேச குழந்தைகள்

விடுதலைப் புலிகள் சிறுவர், சிறுமிகளை படைகளில் சேர்ப்பதாக அவ்வப்பொழுது நம்முடைய இந்துவும், தினமலரும் முதலைக் கண்ணீர் வடிப்பதுண்டு.

சிறுவர்களை படைகளில் சேர்ப்பதை வன்மையாக கண்டிக்கிற அதே வேளையில், இந்தியாவில் இருக்கும் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய ஒரு புள்ளி விபரம்

உலகிலேயே மிக அதிகமான குழந்தை தொழிலாளர்கள் இருக்கும் நாடு நமது அண்ணை பாரத பூமி தான்.

அரசு வெட்கமில்லாமல் கொடுத்துள்ள புள்ளி விபர கணக்குப்படி இந்தியாவெங்கும் 2கோடி குழந்தை தொழிலாளர்கள் இருக்கின்றனர். ஆனால் உண்மை நிலவரம் இதனை விட அதிகம் இருக்கும்.

பல ஆண்டுகளாக பல அமைப்புகள் தொண்டை வற்ற கூக்குரலிட்டு பார்த்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்துவின் நடுப்பக்கத்தில் பூலோகத்தின் அண்ட சராசரங்களில் இருக்கும் அறிவுஞீவிகளை அழைத்து புலிகள் சிறுவர்களை படையில் சேர்ப்பதாக எழுதிக் கிழிக்கும் இந்து தன் கேண்டீனிலும், தன் அலுவலகத்திற்கு எதிரே இருக்க்கும் டீ கடைகளிலும் வேலை செய்யும் சிறுவர்களைப் பற்றி என்றாவது எழுதியதுண்டா ?

தன்னை ஒரு வல்லரசாக நினைத்து கொண்டு நாட்டாமை செய்ய நினைக்கும் நம் புண்ணிய தேசம், இரணுவத்திற்கு ஒரு வருடத்திற்கு கொட்டித் தீர்க்கும் பணத்தில் ஒரு கடுகு அளவு பணத்தை தான் கல்வி, ஏழ்மை ஓழிப்பு போன்றவற்றுக்கு செலவழிக்கிறது.

குழந்தைத் தொழிலாளர்கள் பெரும்பாலும் தலித் மற்றும் ஓடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களாகத் தான் இருக்கின்றனர். அவர்களுடைய குடும்ப ஏழ்மை, படிப்பறிவின்மை போன்றவை தான் இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணம்.

நம் அண்டை தேச பிரச்சனைகளில் மூக்கை நுழைக்கும் முன்பு நம் லட்சணத்தையும் கொஞ்சம் கவனிப்பதே சிறந்ததாக இருக்கும்.

நம் தேசத்தில் உள்ள பல குழந்தைகளுக்கு அவர்களின் மழலைப் பருவத்தை மகிழ்ச்சியாக்கி கொடுப்போம். பல NGO நிறுவனங்களின் சேவைக்கு உங்களால் முடிந்ததை கொடுங்கள்

தீபாவாளி பட்டாசு சந்தோஷத்தை விட அது அதிக மகிழ்ச்சியை கொடுக்கும், அந்த மகிழ்ச்சிக்கு எனது உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள்

6 comments:

Anonymous said...

இரண்டுக்கும் வேற்றுமைகள் நிரம்ப உண்டு
அதை நினைத்து இதை உளராதீங்கோ
கதைக்க வேறுகதைகள் இருக்கு அப்பன் தண்ணியடிச்சிட்டு உருண்டு கிடப்பான் குழந்தை வேலைக்குப் போகிறது பாரப்பன
ன் வீட்டுக்குழந்தை அப்படி வேலைக்குப் போகாது அவனும் குடிக்க மாட்டான் இப்படி

Sri Rangan said...

மேலே பதிலெழுதிய அநாமதேயம் என்ன வித்தியாசம் கொடுக்கப் போறார்?என்ன விடுதலைப் போராளிகள் எண்டால் "சிறார்களைக் கொல்லப் "போராளிகளாக்கலாமோ?சிங்கள இராணுவம், அவர்களின்(சிறாரின்) பெற்றோரை கொல்லுவதால் சிறார்கள் தம்மை-தமது பெற்றோரைக் காக்கப் போராடுகினம்.அதைத் தானே அவிட்டுவிடப் போகிறீர்?சும்மா ரீல் விடாதே நண்பா.நீ சொகுசா வெளிநாடுகளில் கல்வி பயில்வதற்கு வந்தால் வந்த வேலையைப்பார்த்துக்க வேண்டியதுதான்.சும்மா தியாகம்,விடுதலை ,மண் மீட்பு என்று சிறாரின் உயிர்களோடு சிங்களவன் விளையாடியமாதிரி நீங்களும் விளையாட வேண்டாம்.வீரவன்னியனின் கருத்துச் சரியானது.அதை எந்தக் கொம்முளைத்த விடுதலைக் கோசத்தாலும் நிராகரிக்க முடியாது.சிறாரைக் காயடித்துக் கொல்லும் அரசியலையும் அதைத் தியாகமென பரப்புரை செய்யும் மன நோயாளிகளையும் வரலாறு மன்னிக்காது.நீங்கள் விடும் ரீலை நாம் பல நாட்கள் பார்த்துக்கொண்டிருக்க செவிடர்களோ அல்லக் குருடர்களோயில்லை.போதும் உங்கட போரும்,விடுதலையும்.மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள்.இந்தப் புலுடாக்களை அப்பப்ப அவிழ்த்துவிட்டு பெரும் நாடகம் வேண்டாம்.சிறார்களைப் படையில் சேர்ப்பது மனித விரோதம்.அது என்ன வெங்காயக் கோசத்துக்கானாலும் சரி.

வீரவன்னியன் said...

இந்தியக் குழந்தைகளுக்கு பொருளாதார தேடல், வறுமை என்ற அரக்கனின் பிடியில் இருந்து விடுபட வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம்

ஈழத்து குழந்தைகளுக்கு விடுதலை வேள்வி மற்றும் இனவாத அரசின் பிடியில் இருந்து அதனை எதிர்த்து போராட வேண்டிய நிர்பந்தம்

ஈழத்து குழந்தைகளின் நிலை பரிதாபம் என்றால், இந்தியக் குழந்தைகளின் நிலை வேறு வகையில் பரிதாபம்

ஒரு மிகப் பெரிய வல்லரசாக தன்னை காட்டிக்கொள்ளும் ஒரு நாட்டின் பிரஜையாக இருந்தும், அவலமான வாழ்க்கை வாழ வேண்டிய பரிதாப நிலை

Anonymous said...

THAANGAL KOORIYULLATHUP PONTRU IRANDU NAATTU KUZANTHAIKALUM PARITHAABATTHUKKUM, ANUTHAABATTHUKKUM URIYAVARKAL ENBATHIL MAATRUK KARUTTHU ILLAI....ANAAL EAZATTHIN KUZANTHAIKALAI PORAALIPPADAYIL SAERUVATHARKKU KATTAAYAP PADUTHAP PADUVATHAI AATHARIKKA MUDIYAATHU..."HINDU" M,DINAMALAMUM VADIPPATHU MUTHLAIK KANNEERTHAAN ENBATHU,SIVAKASIYIL...KANTHAGATHODU KARAIYUM KUZANTHAIKAL KURITTHU KAVALAIPPADAAMAL "PATTASU" VILAMBARANGALAI PAKAM PAKKAMAYP POTTU "KASU" SAMBAATHIKKUM KUMBAL EAZAK KUZANTHAIKAL PATRI ELUTHA YOKKIYATHAI KIDAYAATHU!

ரவி ஸ்ரீநிவாஸ் said...

do a search in hindu site to find how many articles Hindu, has published on child labour.
The Govt is not denying the existence of child labor and is trying something however inadequate it is to solve it.
Child labour cannot be equated with recuirting children for war however noble the cause may seem to be. Forget Hindu or Indian govt.
there are other organisations including international organisations and UNICEF which have
decried using children as soldiers
and recuriting children for
war. A bigot like you cannot accept facts.

வீரவன்னியன் said...

Ravi srinivas,

Don't try to distort facts

I have clearly mentioned that child soldiers or recruiting children for war is unacceptable. It must be condemned


சிறுவர்களை படைகளில் சேர்ப்பதை வன்மையாக கண்டிக்கிற அதே வேளையில்


Do you think working in Sivakasi factory is not equivalent to being child Soldier? From the prevalent facts and medical research it is as worst as being a child soldier.

The Child is expecting death at any moment. Your own Hindu says in one of the article that it is equivalent of being a Human Bomb facing death at any moment

The so called National News Papers cries loud about Tamil Eelam as if your backyard is so clean. Hindu devotes center pages most of the times for these kind of false propaganda? How many times it has written these burning Sivakasi issues in its center pages?

I can get hundreds of articles written in tiny columns in these papers, but does it makes any sense ?

It clearly portrays the importance given to the issue and Hindu’s stand point

Is Hindu not a bigot? Everyone knows why Hindu opposes Eelam ? It’s simply because the group is a chauvinist

FYI – UNICEF is also out rightly condemning child labour and especially thousands of them working in Sivakasi