Friday, October 27, 2006

தேன்கூடு, திண்ணை நடுநிலை இதழ்களா ?

ரவி ஸ்ரீநிவாஸ் குறித்த கேள்வியை நான் எழுப்பிய பொழுதே அவரின் இரட்டை வேடத்தை துகிலூரித்து பதிவு எழுத வேண்டும் என்று நினைத்து, தனிப்பட்ட தாக்குதலாக இருக்கும் என்று எண்ணி விட்டு விட்டேன். இப்பொழுது நீங்கள் :-) (மற்றொரு தயிர்சாதம் பதிவு எழுதியிருக்கிறது, பூங்காவின் சார்பு குறித்து).

பூங்காவின் சார்பு, தமிழ்மணத்தின் சார்பு போன்றவை குறித்து கேள்வி எழுப்புபவர்கள் தேன்கூடு, திண்ணை, தமிழோவியம் போன்ற இதழ்களின் சார்பு குறித்து ஏன் கேள்வி எழுப்புவதில்லை ? தமிழ்மணத்தில் சில பதிவுகள் நீக்கப்பட்டதற்கு எழுந்த பெரிய கூக்குரல், ஈழப் பதிவர்களை தேன்கூட்டில் அனுமதிக்காதது குறித்து ஏன் எழவில்லை ? திண்ணையில் தயிர்சாதங்களின் கட்டுரைகளே வெளிவந்து கொண்டிருக்கும் பொழுது, அங்கு அதன் சார்பு குறித்து கேள்வி எழுப்பாத ரவி ஸ்ரீநிவாஸ் மற்றும் பிற தயிர்சாத கோஷ்டிகள் தமிழ்மணம்/பூங்காவில் மட்டும் சார்பு வாதத்தை தூக்கிக் கொண்டு ஓடி வருவது எதனால் ?

இவையெல்லாம் என் கேள்விகள் மட்டும் அல்ல, என்னைப் போன்ற பல வலைப்பதிவாளர்களின் கேள்விகள். பல தரப்பட்ட பதிவுகளின் குரல்கள் ஒலிப்பதை விரும்பாத சில மேல்சாதி கொழுந்துகள் இவ்வாறு தங்கள் எரிச்சலை கேள்விகள் மூலம் தணித்து கொள்கிறார்கள் என்பதாகவே நான் புரிந்து கொள்கிறேன்

- இது பூங்கா குறித்து எழுதப்பட்ட இந்தப் பதிவில் நான் பின்னூட்டமாக எழுதியது. பின்னூட்டம் எழுதி பல மணி நேராங்களுக்குப் பிறகும் அந்தப் பின்னூட்டம் வெளிவரவில்லை. ஆனால் பல அனானிமஸ் பின்னூட்டங்கள் வெளிவந்து விட்டன. இதில் இருந்து அந்தப் பதிவு எழுதியவரின் உள்நோக்கமும், புத்தியும் புரிகிறது.

என்னுடைய பின்னூட்டத்தை அனுமதிக்காததால் தான் தனிப்பதிவாக எழுத நேரிட்டது.

அது சரி.. தேன்கூட்டை நடத்திக் கொண்டிருப்பவர்கள் யார் ? அவர்களின் சார்பு என்ன ?

யதார்த்த சினிமா - தங்கர்பச்சான்

தமிழகத்தில் எத்தனையோ சினிமாக்காரர்கள் தோன்றியிருக்கிறார்கள், ஸ்டைல் என்ற பெயரில் ஊரை கெடுத்து குட்டிச் சுவராக்கியிருக்கிறார்கள், லிப் கிஸ் கொடுத்து இளைஞர்களை கவர்ச்சி புயலால் நாசமாக்கியிருக்கிறார்கள், "அவள் அம்மா என் காதலி, என் அப்பா அவள் காதலன்" போன்ற அற்புதமான தத்துவ படங்களை கொடுத்திருக்கிறார்கள், நாளை நாம் தான் தமிழக முதல்வர் என்ற கனவில் கையை சுற்றி சுற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இயக்குனர் இமயங்களின் நாறிப் போன கதைகளுக்கு மத்தியில் தங்கர்பச்சானின் படங்கள் தான் சனங்களின் யதார்த்த வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் பலக் காலக்கட்டங்களில் பலர் உருவாகியிருக்கிறார்கள். ஆனால் கிராமத்தில் இருந்து வரும் கலைஞர்களால் தான் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்த முடிந்திருக்கிறது. சினிமாவின் தரம் என்பது வெறும் கிராபிக்கல் அம்சங்களாக, டெக்னிக்கல் சமாச்சாரங்களாக இருப்பதில்லை. கதையம்சம் தான் படத்தின் தரமாக இருக்க முடியும்.

தமிழ் சினிமாவின் ஸ்டீரியோடைப் படங்களுக்கு மத்தியில் கிராமத்தின் ராஜா - பாரதி ராஜா, தமிழ் சினிமாவின் பாதையை மாற்றி அமைத்தார். சமஞ்சது எப்படி என்ற ரீதியில் பாடல்கள் எழுதிய தாடி மற்றும் குடுமிகளுக்கு மத்தியில் அற்புதமான வைர வரிகளை எழுதிய வைரமுத்து, அறிவுமதி அனைவரும் கிராமத்தான்கள் தான். என்னுடைய தமிழ் ஆசிரியர் கிராமத்தான்களால் தான் சினிமாவில் ஜொலிக்க முடியும் என்றார். அது உண்மை தான் என்பதை இவர்களைப் போன்றவர்கள் தான் நிருமித்துக் கொண்டிருக்கிறார்கள்

தமிழ் சினிமாவில் பலர் தோன்றியிருந்தாலும், யதார்த்தம், நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பு போன்றவற்றுக்கு இங்கு பஞ்சம் அதிகம். அதனை களைந்தவர் தங்கர்பச்சான் தான் என்று உறுதியாக சொல்லலாம். தன்னுடைய அழகி மூலம் நிஜ வாழ்க்கையின் பல யதார்த்தங்களை திரையில் கொண்டு வந்தார். இந்த படத்தின் மற்றொரு சிறப்பம்சம் இது வரை திரையில் தோன்றாத வன்னிய பூமியை கொண்டு வந்தது. பலாப்பழத்தின் வாசனையை தமிழ் சினிமாவில் காணக் கூடிய முதல் வாய்ப்பு அப்பொழுது தான் கிடைத்தது.

அவருடைய "சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி" என்ற படத்தை பார்க்கும் பொழுது நான் என் வாழ்க்கையில் கண்ட பல நிகழ்ச்சிகள் நெஞ்சில் உருண்டோடியது.

என்னுடைய அத்தை ஒருவர் இருக்கிறார். அப்பாவின் தங்கை. ஜெயங்கொண்டத்தில் அரசு வேலையில் இருக்கும் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள். குடிப் பழக்கம் உடையவர். தினமும் ஒயின் ஷாப்பிலும், சாராயக் கடையிலும் தான் வாசம் செய்வார். வீட்டிற்கு வரும் பொழுது தள்ளாடிக் கொண்டே தான் வருவார். கொஞ்சம் கூட பொறுப்பு இருக்காது. அரசு வேலைக்கு ஒழுங்காக செல்ல மாட்டார். கிடைக்கிற எல்லா லோனும் எடுத்து விடுவார். லோன் போக வரும் சம்பளம், சம்பள தேதியில் பிராந்திக் கடையில் கரைந்து போய் விடும். பிறகு வீட்டில் அடி தடி தான். அத்தை கஷ்டப்பட்டு சில வேலைகளுக்கு சென்று சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றுவார். அரசு வேலையில் இருந்தாலும், வருகிற சம்பளத்தை வைத்துக் கொண்டு சுகமாக வாழலாமே என்று பலர் புத்தி மதி சொல்வார்கள். ஒன்றும் காதில் ஏறாது. சம்பள நாள் வந்தால், நேராக அத்தை அவர் ஆபிசுக்கு சென்று விடுவார். அப்பொழுதெல்லாம் வங்கிகளில் பணம் நேரடியாக செல்லாமல் கவரில் சம்பளம் வரும். அவரிடம் இருந்து சம்பள கவர் பிடுங்க ஒரு பெரிய யுத்தமே நடக்கும். பெரிய கச்சேரியே அலுவலக வாசலில் நடக்கும். இந்த கூத்துக்கு பிறகு வேலைக்கு செல்வதையும் மாமா குறைக்க ஆரம்பித்து விட்டார். எதற்கு வம்பு அரசு வேலையாயிற்றே, வேலை போய் விடுமே, என்றாவது ஒரு நாள் திருந்துவார் என்ற எண்ணத்தில் அப்படியே விட்டு விட்டார்கள். அத்தை பல கஷ்டங்களை அனுபவித்தார். இப்படி தொடர்ந்த அவர் வாழ்வில் என் அத்தைப் பெண்ணின் மஞ்சள் நீராட்டு விழா ஒரு திருப்புமுனையாக அமைந்து இவரா இப்படி என்று வியந்து போனோம் ? வாழ்க்கையில் ஏற்படும் ஒரு கணம் சிந்தனை, பல மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது. பலர் கூறிய புத்திமதி அவரை மாற்றவில்லை. ஆனால் சில கணம் தன் மகளை பெரிய மனுஷியாக பார்த்த பொழுது அவருக்குள் ஒரு தீப்பொறி எழுந்து அவரது வாழ்க்கையை மாற்றி விட்டது.

வாழ்க்கை ஒரு படிப்பினை. வாழ்க்கையில் நடக்கும் பல மாற்றங்களை திரைப்படத்தில் கொண்டு வருவது முடியாத காரியம். அந்த முடியாத காரியத்தை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை தங்கர்பச்சான் ஏற்படுத்தி இருக்கிறார். "சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி" படத்தை பார்த்த பொழுது எனக்கு என் மாமாவின் முகம் தான் ஞாபகத்திற்கு வந்தது. தங்கர்பச்சான் முகத்திற்கும் அவர் முகத்திற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. கதையில் நடக்கும் பல, நிஜ வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. என் வாழ்க்கையில் நான் அனுபவிக்க வில்லை என்றாலும் கண் கூடாக பார்த்து இருக்கிறேன்.

அவருடைய சொல்ல மறந்த கதையிலும் சரி, அழகியிலும் சரி வாழ்க்கையின் யதார்த்தம் பிரதிபலிக்கிறது. சொல்ல மறந்த கதையில் சேரன் அனுபவிக்கும் மன உளைச்சலை அவ்வளவு சரியாக இது வரை தமிழ் சினிமாவில் யாரும் பிரதிபலித்தது இல்லை என்றே நினைக்கிறேன். அழகி பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

இந்த திரைப்படங்களை போலவே அவரின் ஒரு சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது. அது ஒரு பெரிய மரத்தைப் பற்றிய கதை. ஒரு மரத்தை சுற்றி நிகழும் நினைவுகள், பொருட் செலவுக்காக அந்த மரம் வெட்டப்படும் பொழுது ஏற்படும் உளைச்சல். அதனை சுற்றி பின்னப்பட்ட உணர்வு அலை. எனக்கும் அது போன்ற நினைவுகள் உண்டு.

உண்மையான சனங்களின் கலைஞனாக தங்கர்பச்சானை தான் நினைக்க முடிகிறது.தமிழ் சினிமாவிற்கு தங்கத் தாமரை பெற்று தரும் தகுதி தங்கர்பச்சானுக்கு மட்டுமே உண்டு.

இது ஒரு மீள்பதிவு

Thursday, October 26, 2006

விருத்தாச்சலத்தில் மண்ணைக் கவ்விய விஜயகாந்த்

உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்த்தின் தேமுதிகவுக்கு அவரது சொந்த தொகுதியான விருத்தாச்சலத்தில் பெரும் அடி கிடைத்துள்ளது.

விருத்தாச்சலம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில், 2 வார்டுகளில் மட்டுமே தேமுதிக வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல விருத்தாச்சலம் ஒன்றியத்துக்கான 19 கவுன்சிலர்களில் தேமுதிகவிலிருந்து ஒருவர் கூட ஜெயிக்கவில்லை. அந்தத் தொகுதியில் உள்ள கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ள 24 வார்டுகளில் 5ல் மட்டுமே தேமுதிகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

கங்கைகொண்டான் பேரூராட்சியில் 2 வார்டிலும், மங்கலம்பேட்டை பேரூராட்சியில் 1 வார்டிலும் மட்டுமே தேமுதிக வெற்றி பெற்றுள்ளது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலிலும் தேமுதிகவுக்கு தோல்வியே கிடைத்தது.

பிறந்த ஊரான மதுரையில் 9 வார்டுகளைக் கைப்பற்றி திமுக, அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த விஜயகாந்த் விருத்தாச்சலத்தில் மண்ணைக் கவ்வியுள்ளார்.


நன்றி :

Friday, October 20, 2006

சிவகாசி பிஞ்சுகள்

தீபாவளி பட்டாசு சத்தங்களை கேட்கும் பொழுதெல்லாம் எங்கோ தூரத்தில், சிவகாசியில் ஒரு மழலையின் அபயக் குரலாகத் தான் எனக்கு தோன்றும். என்னுடைய குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவாது தீபாவளியின் பொழுது பட்டாசுகள் கொளுத்தலாம் என்ற என் எண்ணத்தை கூட சிவகாசி பிஞ்சுகளின் சோகக் கதைகளை கேட்ட பிறகு அடியோடு மாற்றிக் கொண்டேன்.

இந்தப் பதிவு ஏதோ வலைப்பதிவுகளில் சில பின்னுட்டங்களை பெறுவதற்காகவோ அல்லது அதிக ஓட்டுகளைப் பெற்று தமிழ்மணத்தின் சம்மாசனத்தை அலங்கரிக்க வேண்டும் என்பதற்காகவோ எழுதவில்லை என்பதை நான் உண்மையான உள்ளத்துடன் இங்கு பறைசாற்றி விட நினைக்கிறேன்.

ஒவ்வொரு தீபாவளியின் பொழுதும் என் உள்ளத்தில் எழும் உணர்வுகளுக்கு என்னுடைய இந்த வலைப்பதிவு இந்த வருடம் ஒரு வடிகாலாக அமைந்து விட்டது.

ஒவ்வொரு தீபாவளியின் பொழுதும் எல்லா ஊடகங்களிலும் அலசப்படும் இந்த விடயம், பிறகு ஏதேனும் ஒரு பரபரப்பு செய்திகளில் காணாமல் போய் விடும். அடுத்த தீபாவளிக்கு தான் அனைவரும் இதனை மறுபடியும் நினைத்துப் பார்ப்போம்.

இந்த இடைவேளையில் சிவாகாசியில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கை, மழலைப் பருவ விளையாட்டுகள் எல்லாம் பறிபோய் விடும். காலையில் படிப்பு பின் மாலை முழுவதும் விளையாட்டு என்று பாரதி நகரத்தில் இருக்கும் வசதியான வீட்டுப் பிள்ளைகளுக்கு தான் பாடினான் போலும். சிவகாசியிலும், பிற ஏழ்மை கிராமத்திலும் இருக்கும் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் வேலை தான்.

சிவகாசியில் சிறிதும் பெரிதுமாக சுமார் 500 பட்டாசு தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த 500 தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் மட்டும் சுமார் 20,000 முதல் 40,000 வரை இருக்ககூடும் என்று NGO நிறுவனங்களின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அரசு தரும் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 10,000.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் 90 விழுக்காடு சிவகாசியில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த 90 விழுக்காட்டில் பெரும்பகுதி ஒரே நாளில் - தீபாவளியன்று, கொளுத்தப்பட்டு கரியாகி விடுகிறது.

இந்த ஒரு நாள் கூத்துக்காக சிவகாசி வருடம் முழுக்க உழைக்கிறது. பல மழலைகள் தங்கள் மழலைப் பருவத்தை இழந்து தவிக்கின்றனர். பலக் குழந்தைகள் பட்டாசு தயாரிக்கும் பொழுது நேரும் விபத்துக்களாலும், பல வித நோய்களாலும் மரணமடைகின்றனர்.

குழந்தை தொழிலாளர்களில் 90% பெண் குழந்தைகள் தான். அதுவும் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் தான் அதிகம். குழந்தை தொழிலாளர்களை அதிக அளவில் புகுத்த காரணம், இவர்களுக்கு குறைவான சம்பளம் கொடுக்கலாம். ஆனால் நிறைய வேலை வாங்கலாம். ஒரு நாள் முழுக்க ஒரு குழந்தை பட்டாசு செய்தால் அதிகபட்ச சம்பளாமாக 30-50 ரூபாய் கிடைக்கும். 50 என்பதே கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட தொகை தான்.

பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சென்று தான் வேலைப்பார்க்க வேண்டும் என்பது கிடையாது. வீட்டிலேயே இருந்து பட்டாசு செய்யலாம். அதன் மூலம் தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை என்பதாக வெளிஉலகுக்கு பட்டாசு முதலைகள் காண்பிப்பார்கள்.

பட்டாசு செய்யும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் கூட இருக்காது. வீட்டின் அடுப்பறை நெருப்பு பட்டாசு மேல் பட்டு பல நேரங்களில் பல மழலைகள் இறந்து போகின்றனர். இங்கு நடக்கும் பல விபத்துக்கள் மூடிமறைக்கப்படுகிறன. ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் சில விபத்துக்களாவது சிவகாசியில் நடக்கும். ஆனால் வெளியூலகுக்கு தெரியாமல் மூடி மறைக்கப்படும்.

1989ம் ஆண்டு மினம்பட்டி என்ற கிராமத்தில் நடந்த ஒரு வெடிவிபத்தில் 30பேர் இறந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியா டூடே பத்திரிக்கை பின்பு நடந்திய விசாரணைகளில் சுமார் 300 பேர் இறந்ததாகவும், அதில் 200 பேர் குழந்தைகள் என்றும் தெரியவந்தது. அரசு அதிகாரிகள் உதவியுடன், பட்டாசு முதலைகள் இவ்வாறான பல செய்திகளை இருட்டடிப்பு செய்து விடுகின்றனர்.

பட்டாசு சுற்றும் பொழுது மருந்துப் பெருட்களுடன் வாழ்வதால் குழந்தைகள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். பெண் குழந்தைகளின் கற்பப்பை வளர்ச்சி குறைந்து போவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒவ்வொரு நாளும் இந்த குழந்தைகளின் வாழ்நாள் கேள்விக்குறியுடன் தான் தொடங்குகிறது.

இப்படி பல குழந்தைகளின் பரிதாப வாழ்க்கையின் வெளிப்பாடு தான் நம்முடைய தீபாவளி மத்தாப்புகளும், புஸ்வானங்களும், காதைப் பிளக்கும் அணுகுண்டுகளும்.

ஒவ்வொரு மத்தாப்பின் ஒளியிலும் தெரிவது அழகான வண்ணங்களாக இருந்தாலும் அதற்கு பின் இருப்பது என்னவோ சிகப்பு நிறம் தான்... ஆம் அது சிவகாசி பிஞ்சுகளின் ரத்தம்..

தீபாவளி என்னும் முட்டாள்தனம்

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம்

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

  • ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்
  • தேவர்களின் முறையீட்டின் மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்
  • விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது
  • ஆசைக்கு இணங்கிப் பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது
  • அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது
  • அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்
  • தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்
  • விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை விஷ்ணு வின் மனைவி நரகாசூரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்றாள்
  • இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்
  • இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!

இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும் படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா?


இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் நிலநூல்கூடத் தெரியவில்லை என்றுதானே கருத வேண்டியிருக்கிறது? பூமி தட்டையா? உருண்டையா?

தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலைமீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது?

கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்?

விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா?

மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?

பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?

இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம் இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத்ஜோதிஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது.

இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, கங்காஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் 'ஆமாம்” என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள் எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போய்விட்டோம். அறிவியல் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் மோசம் போகலாமா?

தந்தை பெரியார் தீபாவளி என்ற பண்டிகை பற்றி கூறியதன் சிறு தொகுப்பு



நன்றி


Sunday, September 17, 2006

சமுதாயச் சீர்திருத்தம்

சாதி வித்தியாசமோ, உயர்வு தாழ்வே கற்பிக்கின்ற புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று சொல்லிவிட வேண்டும்: மீறிப் படிக்க ஆரம்பித்தால் அவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும்.

நாம் அரசியல் துறையில் முன்னேறி மாற்றம் பெற்றிருக்கிறோமே தவிர, சமுதாயத் துறையில் இன்னமும் பிற்போக்கான நிலையில்தான் இருக்கின்றோம். இந்த நிலை மாறவேண்டும்.

ஒரு சமூகமென்றிருந்தால் அச் சமூகத்தில் ஏழைகளில்லாமலும், மனச்சாட்சியை விற்றுப் பிழைப்பவர்கள் இல்லாமலும் செய்வதுதான் சரியான சமூகச் சீர்திருத்த வேலையாகும்.
சீர்திருத்தம் என்பது தேவையற்றதை நீக்கிவிட்டுத் தேவையுள்ளதை மட்டும் வைத்துக்கொள்ளுதலே யாகும்.

சமுதாயத்தில் பார்ப்பனர் என்றும் பஞ்சமர் என்றும் பிரிவுகள் இருக்க வேண்டியது அவசியம்தானா? அதற்குக் கடவுள் பொறுப்பாளி என்று கூறப்படுமானால் அக்கடவுளைப் பஞ்சமனும் சூத்திரனும் தொழலாமா?

- தந்தை பெரியார்

Image Hosted by ImageShack.us

ஒருவர்தான் பெரியார் - அவர் போல் பிறர் யார் ?

பெரியார் குறித்த கவிஞர் காசி ஆனந்தன் கவிதை

பெரியார் ஒருவர்தான் பெரியார்
அவர் போல் பிறர் யார் அவர் பெருமைக்கு உரியார் - தந்தை பெரியார்


பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி
தமிழர் புகழ்நாட்டி வாழந்த வழிகாட்டி - தந்தை பெரியார்

மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான்
மனிதனைத் தீண்ட மறுத்தானே!


நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன்
நரிகளின் வாலை அறுத்தானே!


கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில்
கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான்!


காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரை
கிழவன்; துடைத்து வைத்தான் - தந்தை பெரியார்

மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!


வானம் உள்ள வரை வையம் உள்ள வரை
யார் இங்கு மறப்பார் பெரியாரை - தந்தை பெரியார்

Image Hosted by ImageShack.us

தமிழ்மொழி

ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றே யாகும். மொழிப்பற்று இராதவரிடத்து தேசப்பற்று இராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது. ஆதலால் தமிழர்களுக்குத் தாய் மொழிப்பற்றுப் பெருக வேண்டும் என்பது எனது பிரார்த்தனை.

தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு மொழிப்பற்று அவசியம்! அவசியம்! என்று சொல்லுகிறேன். வங்காளிக்கு வங்கமொழியில் பற்றுண்டு; மராட்டியனுக்கு மராட்டிய மொழியில் பற்றுண்டு; ஆந்திரனுக்கு ஆந்திர மொழியில் பற்றுண்டு; ஆனால், தமிழனுக்குத் தமிழில் பற்றில்லை. தாய்மொழியில் பற்றுச் செலுத்தாதவரையில் தமிழர்கள் முன்னேற்றமடையமாட்டார்கள்.

நான் தமிழினிடத்தில் அன்பு வைத்திருக்கிறேன் என்றால் அதன் மூலம் நான் எதிர்பார்க்கும் நன்மையையும் அது மறை நேர்ந்தால் அதனால் இழப்பு ஏற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழினிடத்து அன்பு செலுத்துகிறேன்.

மற்றொரு மொழி நமது நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து அதனால், நமக்கு ஏற்படும் இழப்பை அறிந்து சகிக்கமுடியாமல்தான் எதிர்க்கிறேனே யொழியப் புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை.

மக்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படக்கூடியதும் அறிவையும் திறமையையும் தைரியத்தையும் உண்டாக்கக் கூடியதும் ஆகிய சிறந்த கலைகளையெல்லாம் தமிழில் எழுதிப் பரவச் செய்வதன் மூலம், மக்களுடைய அறிவையும், தமிழ் மொழியையும் செம்மை செய்வதே தமிழ் உணர்ச்சியாகும்

- தந்தை பெரியார்

Image Hosted by ImageShack.us

சுயமரியாதை - தந்தை பெரியார்

Image Hosted by ImageShack.us
மனித தர்மத்தை அடிப்படையாக வைத்து, மனித சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது, பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும் சிந்திக்கச் செய்வதுமே யாகும்.

மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடத் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு உணர்ச்சியைப் போக்கித் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் பெற வேண்டும்.
சீர்திருத்தமும், சுயமரியாதையும், சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம்

மனிதன் உலகில் தன் சுயமரியாதையை - தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ளவேண்டும்.
மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.

நான் மனிதனே - தந்தை பெரியார்

Free Image Hosting at www.ImageShack.us"நான் மனிதனே! நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள். "நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்" என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. "

தந்தை பெரியார்

Thursday, May 11, 2006

இடஒதுக்கீடு போராட்டம்

ஐஐடி, ஐஐஎம் ஆகிய கல்வி நிலையங்களில் பிற்பட்டோர் அனைவருக்கும் இடஒதுக்கீடு கோரி பாமக சார்பில் இன்று சென்னையில் போராட்டம் நடைபெற்றது. அனைத்து பிற்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மருத்துவர் ஐயா, திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி ஆகியோர் பங்கேற்றனர். அடுத்த கட்ட போராட்டம் புதுதில்லியில் நடைபெறும் என ஆசிரியர் வீரமணி தெரிவித்தார்



STRIDENT PROTEST: PMK founder S. Ramadoss and Dravidar Kazhagam president K.Veeramani staging a demonstration near the State Guest House in Chennai on Wednesday. — Photo: V. Ganesan

CHENNAI: The Dravida Munnetra Kazhagam president M. Karunanidhi should intervene on the issue of opposition to the implementation of reservation for other backward classes in Central institutions, Indian Institutes of Technology and Indian Institutes of Management and take a "favourable decision," the Pattali Makkal Katchi founder S. Ramadoss said on Wednesday.

Participating in a demonstration organised by students' wing of the PMK to press the Central Government on the implementation of the quota system, Dr. Ramadoss said that as all 40 Members of Parliament from the State [and Pondicherry] were part of the United Progressive Alliance, the issue should be resolved in favour of the OBCs.

He wondered why there should be no reservation in the institutions of higher education when a constitutional amendment had been made to provide reservation even in self-financing colleges. This point had been raised in Parliament by the PMK MP M. Ramadass.

Dr. Ramadoss criticised the argument made in certain quarters that merit would suffer if the quota system were to be implemented. Candidates belonging to OBCs finished toppers in many competitive examinations. Certain "forces" inimical to the reservation system would not change their position and their designs would be defeated, the PMK leader said.

Stir in New Delhi



Participating in the rally, K. Veeramani, Dravida Kazhagam leader, said his party and the PMK would stage a demonstration in New Delhi soon on the issue.

The present move to provide reservation for OBCs was only a follow-up to what was initiated by V.P. Singh as Prime Minister in 1990. At that time, in spite of a strong opposition, the quota system came into force. Since then, the concept of reservation has gained greater acceptance. So, anti-reservation agitations would not succeed, he said.

Slogans were raised by the participants to press the point that quotas were neither concessions nor gifts; rather a matter of birthright of the OBCs. G.K. Mani, president of the PMK, and Dalit Poongundran, general secretary of the DK, were among those who addressed the participants.

Tuesday, May 09, 2006

ஐஐடி : ஐஐஎம் : இடஒதுக்கீடு போராட்டம்

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்விக் கூடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களைக் கண்டித்து நாளை போராட்டம் நடத்தப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஐஐடி, ஐஐஎம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஆகிய உயர் கல்வி நிலையங்களில் இந்த ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அமலாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இது மத்திய அரசின் முடிவல்ல. நாடாளுமன்றம் எடுத்த முடிவு. ஆனால், இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து டெல்லி போன்ற நகரங்களில் மாணவர்கள் என்ற போர்வையில் ஆதிக்க சக்திகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.

இவர்களால் தான் 25 ஆண்டுகளாக மண்டல் கமிஷன் பரிந்துரைகள் தூசிபடித்து கிடந்தன. அதை அமலாக்க விடாமல் தடை ஏற்படுத்தினர். வி.பி.சிங் பிரதமராக வந்த பின்னர் தான் பெரும் தடைகளையும் மீறி அதை அமலாக்கினார். அப்போது எந்தெந்த ஆதிக்க சக்திகள் வி.பி.சிங்குக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனவோ, அவையே இப்போதும் தலை தூக்கியுள்ளன.

மண்டல் கமிஷன் கிளர்ச்சியை வைத்து விபி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தது போல இப்போது பிற்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டைத் தர முயலும் மன்மோகன் சிங் அரசையும் கவிழ்த்துவிட திட்டம் போடுகிறார்கள்.

அந்தத் திட்டத்தை முறியடித்து, இப்போது மீண்டும் தலை தூக்கியுள்ள இந்த ஆதிக்க சக்திகளை ஒடுக்கி, அவர்கள் போடும் தடையை உடைத்து எறிய வேண்டிய பொறுப்பும் கடமையும் சமூக நீதியில் அக்கறையுள்ள அனைவருக்கும் உண்டு.

பிற்பட்டவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பை மறுக்கும் ஆதிக்க சக்திகளைக் கண்டித்து நாளை (10ம் தேதி) பாட்டாளி மக்கள் சங்கம் சார்பில் சென்னையில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடத்தப்படும்.

இதன்மூலம் டெல்லி போன்ற நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறவர்களும் அதைத் தூண்டிவிடுகிறவர்களும் அந்தப் போராட்டங்களை முக்கியப்படுத்தி வருபவர்களும் திருந்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

விஜய்காந்தை விரட்டியடித்த வன்னியர் கிராமம்

விருத்தாசலத்தில் வன்னியர் கிராமத்துக்குள் நுழைந்த விஜய்காந்தை பாமகவினரும் பொது மக்களும் சேர்ந்து விரட்டியடித்தனர்.

அடி விழும் சூழல் உருவானதால் அந்த ஊருக்குள் நுழையாமல் விஜய்காந்த் திரும்பிவிட்டார்.

விஜய்காந்த் தான் போட்டியிடும் விருத்தாசலத்தக்குச் சென்றார். அங்கு முதனை என்ற கிராமத்தில் வாக்குப் பதிவு நடப்பதை பார்வையிட அவர் சென்றார்.

ஆனால், அவரது காரை அந்த கிராமத்தினரும் பாமகவினரும் தடுத்து நிறுத்தினர். திரும்பிச் சென்றுவிடுமாறு கோஷம் எழுப்பினர். சிலர் அவரைத் தாக்கவும் முயன்றனர். நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்த விஜய்காந்த் உடனே அங்கிருந்து திரும்பிவிட்டார்.

விஜய்காந்துடன் வந்த கார்களுடன் அவசரமாகத் திரும்பிச் சென்றுவிட்டன.

Vijayakant at the receiving end on polling day

VRIDDHACHALAM: Stones and footwear were flung at the car of actor and Desiya Murpokku Dravida Kazhagam founder, Vijayakant, at Mudanai in the Vriddhachalam constituency on Monday.

The crowd also manhandled a reporter and a photographer of a Tamil daily and allegedly damaged the camera.

Mr. Vijayakant, who is contesting from Vriddhachalam, encountered problems wherever he went on polling day.

Entry opposed


First, he went to the booth at Gandhi Nagar, where he was told about some problem at Mudanai. When he reached Mudanai, a handful of persons objected to his entry. Soon a large number of people gathered.

Sensing that the situation was turning volatile and at the request of security personnel, Mr. Vijayakant came out of the booth. After he boarded the car, stones and footwear came flying. Some people were caught in between. Later, Mr. Vijayakant went to Mugasaparur to persuade people to vote. (They were suffering from diarrhoea for the past two days and not in a mood to vote alleging no party had come to offer help. They later relented.)

When he stood on a stool to address the people, the rival camp alleged that he was trying to woo the electorate and objected to his presence, forcing him to leave.

Mr. Vijayakant went to the polling station at Patti. When he began speaking on his cell phone, the AIADMK cadres objected, arguing that the Election Commission had banned cell phones inside booths. Mr. Vijayakant had to beat a hasty retreat.

Monday, May 08, 2006

தமிழகம் காப்பாற்றப்படும் : மருத்துவர் ஐயா

பாமக நிறுவனர் மருத்துவர் ஐயா அவார்களும், அவரது மகன் மத்திய அமைச்சர் அன்புமணியும் திண்டிவனத்தில் வாக்களித்தனர்.




பின்னர் மருத்துவர் ஐயா நிருபர்களிடம் பேசுகையில், தமிழக மக்கள் எதிர்பார்க்கும் தீர்ப்பை அளிக்கப் போகிறார்கள். தமிழகம் காப்பாற்றப்படும் என்றார்.

வெற்றி மாங்கனிகள்

பாமக 31 தொகுதிகளிலும் வெற்றி முகத்துடன் இருக்கிறது. அந்த வெற்றி மாங்கனிகளில் சில முக்கியமான மாங்கனிகள்


மேட்டூர் தொகுதியில் பாமகவின் தலைவர் ஜி.கே.மணி வெற்றி முகத்துடன் இருக்கிறார்




எங்களூர் ஜெயங்கொண்டம் தொகுதியில் வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி குரு முன்னிலையில் இருக்கிறார்



விருத்தாசலம் தொகுதியில் பாமக மாநில தலைவர்களில் ஒருவரான மருத்துவர் கோவிந்தசாமி வெற்றிக் கனியை பறிக்கிறார்





பண்ருட்டி தொகுதியில் இளைஞர் அணி தலைவர்களில் முக்கியமானவரான வேல்முருகன் முந்துகிறார்



சைதாப்பேட்டை தொகுதியில் பாமக பிரச்சார பீரங்கி சி.ஆர்.பாஸ்கரன் வெற்றி மாங்கனியை பெற காத்திருக்கிறார்


உண்மையை பிரதிபலித்த விகடனுக்கு நன்றி

Wednesday, March 15, 2006

தினகரன் வாங்குவீர்

தினகரன் நாளிதழ் புதுப்பொலிவுடன் வந்து கொண்டிருக்கிறது. நேர்மையான செய்திகளுடன், வண்ணமிகு பக்கங்களுடன், சிறப்பான பேப்பர் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு ரூபாய்க்கு தரமாக இருக்கிறது.



தினமலர் போன்ற பார்ப்பன ஆதரவு நாளிதழ்களை புறக்கணித்து தினகரன் நாளிதழை வாங்க வேண்டுமாய் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தின் நம்பர் 1 நாளிதழாக தினகரன் உருவாகி கொண்டிருக்கிறது

அதற்கு எனது வாழ்த்துக்களை அனைத்து வலைப்பதிவர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்

Sunday, March 12, 2006

வீரப்பன் தேடுதல் வேட்டை

நம் சமூகத்தில் அரசானது தனது குடிகளுக்கு பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு கேடுகளை ஏற்படுத்தி உள்ளது. அரசு அதன் அதிகாரம் முழுவதையும், நிராயுதபாணிகளான மக்கள் மீது ஏவுவதும், சட்டத்தைப் புறக்கணித்து அத்துமீறல் புரிவதும் அச்சுறுத்துவதும், துன்புறுத்துவதும், என பயங்கரவாத செயல்களைச் செய்கிறது. சமூகத்தில் பயங்கரவாதம் என்ற சொல் எவ்விதமான புரிதலுக்கு உள்ளாகி இருக்கிறது என்பதனை நாம் விளக்கத் தேவை இல்லை. ஆனால் அதைவிட அரசினால் ஏவப்படும் பயங்கரவாதம் மோசமானது என்பதனை நாம் மறந்து விடக்கூடாது.

1993 கால கட்டத்தில் தமிழக - கர்நாடக எல்லையோர மலைப்பகுதி மற்றும் கிராமங்களில் சந்தன வீரப்பனைத் தேடுகிறோம் என்ற பெயரில் நிகழ்ந்தேறிய அரச வன்முறையின் கோர முகம் இன்றைக்கும் நம் சமூகத்தின் முன்னால் முழுமையாக காட்டப்படவில்லை. சிலர் அறிந்த அந்த கோரம் மிகவும் கொடூரமானது. அக்கால கட்டத்தில் நிகழ்ந்தேறிய மனித உரிமை மீறல்கள், நம் சம காலத்தில் நம் பகுதியில் நடந்த கோரத்தின் உச்சம். நாம் நினைத்து பார்க்க முடியாத வக்கிரமும், கொடுமையும், உணர முடியாத வலியும் கொண்டது அந்த பயங்கரவாதம்.

காட்டில் மறைந்து வாழும் வீரப்பனைப் பிடிக்க என்று தமிழக - கர்நாடக அரசுகள் இணைந்து அதிரடிப்படையினை உருவாக்கின. சித்திரவதை புரியும் வதை கூடாரங்கள், அதற்காக உருவாக்கப்பட்ட மின்சாரம் பாய்ச்சும் மின் கருவிகள் உள்ளிட்ட வதை கருவிகள், இதனை இயக்கும் ஆயுத படைகள், காவல் அதிகாரிகள், அனைத்தும் இணைந்து அரசின் ஒப்புதலுடன் கொடுமைகள் நடத்தப்பட்டன.

மலைப்பகுதியில் மறைந்து வாழும் வீரப்பனைப் பற்றி தகவல் சேகரிக்க என்றும், விசாரணை என்ற பெயரிலும் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் சித்திரவதைப் படுத்தப்பட்டனர். கொடூரமாகத் தாக்கப்பட்டனர். அனைத்து தண்டனைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். அதிரடிப் படையினரின் நோக்கம் மக்கள் சித்திரவதையால் அச்சுறுத்தப்பட வேண்டும், அல்லது “மோதல் சாவுகள்” என்ற பெயரில் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்பதாக இருந்தது.

அதிரடிப் படையில் பணிபுரிந்த அதிகாரிகள் தங்களுக்கு உலகின் அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டதாக உணர்ந்தனர். அரசும் அதற்கு மௌனமாக தலையசைத்தது. இவ்வதிகாரிகள் தங்கள் கீழ்பணி புரியும் கீழ்நிலை அதிகாரிகளுக்கு கொஞ்சம் அதிகாரத்தை வழங்கினர். விளைவு எங்கு பார்த்தாலும் மலை மக்கள் சித்திரவதைக்கு உள்ளாகினர். சந்தேகிக்கப்படும் நபர்களின் உடலில் துவாரம் உள்ள மெல்லிய பகுதிகளில் மின்சாரம் பாய்ச்சப்பட்டது. சமூகத்தின் உறவுகளை இழிவு செய்து, வன்முறையும், வக்கிரமும், தலைவிரித்து ஆடியது. சுமார் ஏழு ஆண்டுகளில் பல வதை முகாம்களில் இந்தக் கொடுமை நிகழ்ந்தேறியது.

அதிரடிப்படை காவல் துறையினர் கடவுள்களாக மாறினர். தன் பிடியில் உள்ள மனிதன் உயிரோடு வாழ்வதா.? இல்லை சாவதா.? என பல சமயம் அவர்கள் முடிவு செய்தனர். பலர் கொல்லப்பட்டனர். பலர் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். “மோதல் சாவுகள்” “வீரப்பனின் கூட்டாளிகள் சண்டையில் கொல்லப்பட்டனர்” என்று ஊடகங்களின் செய்திகள் வழியே சிலரின் மரணங்கள் வெளியே அறிவிக்கப்பட்டன. வனத்தில் பல இடங்களில் ரகசிய புதைகுழிகள் உருவாக்கப்பட்டன. வதை முகாம்களில் பெண்கள், ஆண்கள் நிர்வாணப்படுத்தப் பட்டு வைக்க்பட்டிருந்தார்கள். பல இரவுகளில் பாலியல் வல்லுறவில் வதைப்படுத்தப்பட்ட பெண்களும் உண்டு. சட்டம், நீதி, சனநாயகம் எல்லாம் கானல் நீராகிப் போனதன் வெளிப்பாடாகவே வதை முகாம்கள் இருந்தன.

அந்த சமயத்தில் காவலர்கள் விசாரிக்க அழைத்துச் சென்றது எல்லாம் வீரப்பன் ஆட்கள், கொல்லப்பட்டது அனைத்தும் மோதல் சாவுகள் என்ற கருத்தாக்கங்கள் சமூகத்தில் பரப்பி விடப்பட்டன. இதன் உள் வாங்கல் நமது சமூகத்தில் உள்ள அனைத்து தூண்களிலும் காணப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தனர். ஆனால் அவர்களுக்காக எந்த அரசியல் கட்சியும் பேச முன் வரவில்லை. பல சமயம் ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் தன் காலத்தில் தான் சுட்டுக்கொல்லப்பட்டவர் அதிகம் என பெருமைப்பட்டுக் கொண்ட கொடுமையும் நடந்தது. அரசியல் கட்சிகள் பொறுப்புணர்வுடன் அதிரடிப்படையின் நடவடிக்கைகளை கேள்வி கேட்டிருக்குமேயானால் பல மனித உயிர்களை நாம் பார்த்திருக்கலாம்.

ஆனால் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், மக்கள் குடியுரிமைக் கழகம், மக்கள் கண்காணிப்பகம், சோக்கோ அறக்கட்டளை, சிக்ரம் (பெங்களூர்) போன்ற சிறு சிறு இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள், சனநாயக சக்திகள் போன்றவை மட்டுமே தொடர்ச்சியாகப் போராடின. அதன் விளைவாக தேசிய மனித உரிமை ஆணையம் இதில் கவனம் செலுத்தியது. அதன் பின் ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி எஸ்.ஜே. சதாசிவம், தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய புலனாய்வுத் தலைவர் சி.வி.நரசிம்மன் ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழு ஒன்றை தேசிய மனித உரிமை ஆணையம் நியமித்தது. இவ்விசாரணைக் குழுவின் நோக்கம் வீரப்பனின் தேடுதல் வேட்டையில் இரு மாநில சிறப்பு அதிரடிப்படை காவலர்கள், மனித உரிமை மீறலில் ஈடுபட்டது குறித்து ஆராய்வதாகவும், அதற்கு உரிய இழப்பீடு குறித்து தெரிவிப்பதாகவும் இருந்தது.

30.01.2000 நாளன்று இதன் முதல் விசாரணை தமிழகத்தின் கோபிச்செட்டிப் பாளையத்தில் துவங்கியது. பாதிப்புக்குள்ளான ஏராளமான பழங்குடி மக்கள், கிராம மக்கள் மற்றும் பல தரப்பினர் தேசிய மனித உரிமை ஆணையத்தின் பல அமர்வுகளில் தங்கள் பாதிப்புகளைப் பதிவு செய்தனர். பெண்கள் மீதான பாலியல் வன்முறை, சித்திரவதை, கொலை என அந்த மக்கள் வெளிப்படுத்திய அவலங்கள் நம் நாகரீக சமூகத்தின் வாழ்நிலையை கேள்விக்கு உள்ளாக்கியவை. இதன் மூலம் அதிரடிப்படையின் முகம் வெளிச்சத்திற்கு வந்தது. ஆனாலும் அதிரடிப்படையினர் விசாரணைக் குழுவின் விசாரணையை தடை செய்ய பல்வேறு முயற்சி செய்து இறுதியில் தோல்வியடைந்தனர். அதிரடிப்படையினர் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் குற்றச் சாட்டுக்கு உள்ளான 38 காவல் துறை அதிகாரிகளை விசாரித்து தன் இறுதி அறிக்கையை தேசிய மனித உரிமை ஆணையம் முன்பு கடந்த 02.12.2003 அன்று சமர்ப்பித்தது. ஆனால் வெளியிடப்படவில்லை. ஆனாலும் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பல்வேறு மனித உரிமை இயக்ககங்களின் தொடர் முயற்சி மூலமும், டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையம் எடுத்த முன் முயற்சிகள் காரணமாகவும் பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றம் தேசிய மனித உரிமை ஆணையத்தை நேரடியாகச் சந்தித்து வலியுறுத்திய பின்பு இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள், இங்கு வெளியிடப்பட்டுள்ளன.

விசாரணைக் குழு வீரப்பன் தேடுதல் வேட்டையில் தமிழக - கர்நாடக சிறப்பு கூட்டு அதிரடிப்படை காவலர்கள் சட்ட விரோதமாக தங்களின் வரம்பை மீறி மலையோர கிராம மக்கள் மற்றும் பழங்குடியினரிடம் மனித உரிமை மீறல்களைப் புரிந்துள்ளனர் என தெளிவு படுத்தியுள்ளது.

- அதிரடிப்படையின் முகாம்களில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதை நிரூபிக்கும் வகையில் இவ்விசாரணையில் சாட்சியம் அளித்த லட்சுமியின் சாட்சியத்தை விசாரணைக் குழு ஏற்றுக் கொள்கிறது.

- அதிரடிப்படை காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையின் பொழுது வீரப்பன் கூட்டாளிகளுடன் நடந்த சண்டையில் பலர் கொல்லப்பட்டனர். அரசு கொடுத்த ஆவணங்கள் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி மட்டும் தமிழகத்தில் எட்டு பேரும், கர்நாடகப் பகுதியில் 30 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களின் மரணம் குறித்த ஆவணங்களைப் பார்வையிட்ட விசாரணைக் குழு ஒரு உண்மையான சண்டையில் இந்த மரணங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என திட்டவட்டமாக முடிவு செய்துள்ளது.

ஏனெனில் சுடப்பட்ட பலர் வெகு அருகில் இருந்து சுடப்பட்டுள்ளனர். கர்நாடக காவலர்கள் கொன்ற புட்டன் என்பவரின் வாயில் துப்பாக்கி வைத்து வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது. சுவரின் மண்டை ஓட்டை பிளந்து வெளியேறிய குண்டு அதற்கு சாட்சியம். பாப்பாத்தி மணி என்ற சௌதாமணி ஆகிய பெண்களின் உடலில் துப்பாக்கி முனை வைத்து சுடப்பட்டுள்ளனர். துப்பாக்கி குழாயிலிருந்து குண்டுடன் வெளிப்படும் கரித்துகள்கள் சுடப்பட்டுள்ளவர்களின் உடலில் படிந்துள்ளது இதற்கு சான்று.

மோதல் சண்டையில் கொல்லப்பட்டதாக பலரை அதிரடிப்படை அறிவித்தது. ஆனால் இறந்தவர்கள் அனைவரின் உடலிலும் தலை மற்றும் அதனை ஒட்டிய பகுதி, மார்பு, முகுகு ஆகிய பாகங்களையே குண்டு தாக்கியுள்ளது. உண்மையான மோதல் சண்டையில் இவை சாத்தியம் இல்லை. எதிரே உள்ள நபர் சாக வேண்டும் என்ற நோக்கிலேயே சுடப்பட்டு மேற்கண்ட தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் உண்மையான சண்டையில் உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டிருக்கும். குண்டு காயங்கள் உடம்பில் ஏற்பட்டிருக்கும். இவை மேற்கண்ட சம்பவங்களில் இல்லை. அது போலவே தமிழகப் பகுதியில் நடந்துள்ள மரணங்களில் நடுத்தர தொலைவிலிருந்து பக்க வாட்டுப் பகுதியில் சுடப்பட்ட காயங்கள் உள்ளன. மேலும் மரணங்கள் குறித்து விசாரித்த கோட்டாட்சியர் விசாரணை வெறும் கண் துடைப்பு ஆகும். இவ் விசாரணையில் இறந்தவர்களின் குடும்பத்தார், விசாரிக்கப்படவேயில்லை என்பதும், உண்மையை மறைக்க வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டதாகும்.

கர்நாடகத்தில் இறந்தவர்கள் பலர் மீது குற்றவாளிகளாக முதல் தகவல் அறிக்கை உள்ளதால் கண் துடைப்பு விசாரணை கூட பல சாவுகளுக்கு செய்யவில்லை.

இவ்வித மோதல் சாவுகள் குறித்து சந்தேகம் எழும் போது சுதந்திரமான, நீதித்துறை சார்ந்த நீதிபதி விசாரணை மேற்கொள்ள தேசிய போலீஸ் கமிசன் ஏற்கனவே வழி காட்டியுள்ளது. ஆனால் எதுவும் இங்கு பின்பற்றப்படவில்லை.

மோதல் சாவுகள் மற்றம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்கள் போன்ற அனைத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தார்க்கும் உரிய இழப்பீடு வழங்க இவ்விசாரணைக் குழு பரிந்துரைக்கிறது. அமலில் இருந்த தடா சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற்ற பொழுது, “தடா சட்டத்தின் கீழ் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களைத் தொடர்ந்து சிறையிலேயே வைத்துக் கொள்ளத் தேவை இல்லை. கைது செய்யப்பட்டவர்களின் குற்றத்தின் தன்மையைக் கொண்டு தடா மறு ஆய்வுக்குழு அமைத்து அவர்களை பிணையிலோ அல்லது வழக்குகளைத் திரும்பப் பெற்று விடுதலையையோ வழங்க அரசு முயல வேண்டும் என்பதாக உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் மற்றும் மத்திய உள்துறை செயலகத்தின் சுற்றறிக்கை உள்ளது.

தமிழ்நாடு அரசு வீரப்பன் வழக்கில் கைது செய்யப்பட்ட எழுபத்தி ஐந்து நபர்கள் உட்பட மொத்த தடா வழக்குகளை 1997 ஆம் ஆண்டு திரும்ப பெற்றது. இவ்வழக்குகளில் கைதானோர் மீது தடா பிரிவு விலக்கிக் கொள்ளப்பட்டது. மற்ற சட்டப் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். ஆனால் கர்நாடக அரசு 1993 ஆம் ஆண்டிலிருந்து இவ்வழக்குகளில் நான்கு வெவ்வேறு நிகழ்வுகளை ஒட்டி கைது செய்த 121 நபர்களில் 51 நபர்களை 2001 செப்டம்பர் வரை எட்டாண்டுகள் விசாரணைக் கைதிகளாகவே தொடர்ந்து சிறையில் வைத்திருந்தது. விசாரணைப் பிடியில் இருந்த ஒருவர் உட்பட 14 சிறைவாசிகள் மட்டுமே வெவ்வேறு சிறு மற்றும் இதர பிரிவுகளில் தண்டிக்கப்பட்டனர். ஏனையோர் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வாறு ஏழு ஆண்டு காலம் தங்களின் வாழ்வை 37 நபர்கள் சிறையிலேயே கழித்துள்ளனர்.

கர்நாடக அரசு உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் வழி காட்டுதல்களை வேண்டுமென்றே புறக்கணித்துள்ளது. எனவே எட்டாண்டுகள் சிறையில் வாடி விடுதலை செய்யப்பட்ட 37 பேரும் இழப்பீடு பெற தகுதியுடையவர்கள் என்று விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

- அதிரடிப்படை என்பது ஒரு ஆயுதப்படை. இதற்கு சட்டரீதியாக தனித்து இயங்கும் அதிகாரம் இல்லை. இந்த அதிரடிப்படை ஒருவரை கைது செய்யவோ, சோதனை செய்யவோ சட்டம் அனுமதிக்கவில்லை. அதிரடிப்படை என்பது வெறுமனே காவல் நிலையத்திற்கு உதவி செய்யும் ஒரு ஆயுதப்படை மட்டுமே. ஆனால் வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படை பலரை கைது செய்தும் பல நாள் சட்ட விரோத காவலில் வைத்தும், சித்திரவதை நிகழவும், காரணமாக இருந்துள்ளது. மின் உற்பத்தி சாதனங்களைக் கொண்டு மின் அதிர்வு மூலம் சித்திரவதை புரிந்துள்ளது என்று விசாரணைக் குழு கூறியுள்ளது.

- விசாரணைக் குழுவானது தனது அறிக்கையில் வீரப்பனின் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படை மனித உரிமை மீறல் குற்றங்களைப் புரிந்துள்ளது. சித்திரவதை, பாலியல் வன்முறை, கொலை என்று புகார்கள் எழுந்துள்ளன. இவைகள் முற்றிலும் புறக்கணிக்க முடியாதவை. எனவே குற்றம் புரிந்த காவலர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் நீதித்துறை சார்ந்த நீதிபதி தலைமையில் காவல் துறை உயர் அதிகாரிகள், மற்றம் காவலர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இது கட்டாயமானதாகும். தவறு செய்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விட அனுமதிக்கப்படக் கூடாது என்று கூறியுள்ளது.

மேலும் விசாரணைக் குழுவானது தனது அறிக்கையில் அதிரடிப்படையினை வழி நடத்திய தலைமை உரிய கண்காணிப்பு மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படவில்லை என்று கூறியுள்ளது. தமிழகத்தில் இப்படைக்கு தேவாரமும், கர்நாடகாவிற்கு சங்கர் பிதாரியும் தலைமை ஏற்றிருந்தனர்ன. பொது மக்கள் மத்தியில் பணியாற்றும் ஒரு ஆயுதப் படைக்குத் தரப் பட்டிருக்க வேண்டிய எச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல்கள் எதுவும் இப்பிரச்னையில் கடை பிடிக்கப்படவில்லை. மேலும் காவலர்களின் செயல்பாடு எவ்வித கண்காணிப்பிற்கும் உட்பட்டதாகவும் தெரியவில்லை என்று கூறியுள்ளது.

- விசாரணைக் குழு தனது அறிக்கையில் இழப்பீடு அளிப்பது பற்றியும் கூறியுள்ளது.

1. சித்திரவதைக்கு உள்ளானவர்கள்

2. தடா கைதிகளாக மைசூர் சிறையில் எட்டாண்டுகளாக வாடிய 38 பேர்

3. ‘மோதல் சாவுகள்’ என்ற பெயரில் அதிரடிப்படை காவலர்களால் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர்.

4. சாட்சியளித்தவர்களில் 193 பேரில் 89 பேர் சாட்சியம் ஏற்று இழப்பீடு.

இந்த வகைமுறையில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விசாரணைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

மேலும் படிக்க

நன்றி -- கீற்று