Monday, April 04, 2005

நான் RSS எதிர்ப்பாளன் - 4

காந்தியார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பொழுது மறுபடியும் ஒரு மன்னிப்பு கடிதத்தை சர்வார்கார் எழுதினார்.

அவருக்கும் மன்னிப்பு கடிதத்திற்கு அப்படி ஒரு நெருங்கிய தொடர்பு. கூசாமல் தன் கொள்கை, போராட்டங்கள், இயக்கம் போன்றவற்றை ஒதுக்கி வைத்து விட்டு தான் மட்டும் தப்பித்தால் போதும் என்று ஒரு மன்னிப்பு கடிதம் கொடுத்து விடுவார்.

இவ்வாறு 1911, 1913, 1925, 1948, 1950 என பல தடவை மன்னிப்பு கடிதங்களை கொடுத்துள்ளார்.

1948, பிப்ரவரி 22ம் தேதியிட்ட மன்னிப்பு கடிதத்தை சுதந்திர இந்தியாவின் பாம்பே காவல்துறை கமிஷனருக்கு தன்னை காந்தியார் கொலை வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக கொடுக்கிறார்

"Consequently, in order to disarm all suspicion and to back up the above heart representation, I wish to express my willingness to give an undertaking to the government that I shall refrain from taking part in any communal or political public activity for any period the government may require in case I am released on that condition."

இந்த மனு நிராகரிக்கப்பட்டு விட்டது

இதன் பிறகு ஜூலை 13, 1950ம் ஆண்டு மற்றொரு மன்னிப்பு கடிதம். சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டுமானால் எந்தவிதமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்று நீதிபதி கேட்க, அவ்வாறே இருப்பதாக சர்வார்கார் உத்திரவாதம் கொடுக்க அவரும் விடுவிக்கப்பட்டார்.

போதும்டா சாமி..இது போல ஒரு கேவலத்தை இது வரைக்கும் பார்த்ததில்லை.

இறுதியாக இந்த பதிவுகளை முடிக்கும் முன்பு அத்வானியின் ஒரு நகைச்சுவையை பாருங்கள். சர்வார்கார் பகத்சிங்கிற்கு ஒப்பான தியாகியாம்.

பகத்சிங்கின் கால் தூசிக்கு கூட சர்வார்கார் ஈடாக மாட்டார்.

பகத் சிங்கின் தியாகம் அளவிட முடியாதது. பகத் சிங் தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் இப்படி கூறுகிறார்

"என்னுடைய உயிரை நான் துச்சமென மதிக்கிறேன். கொள்கைக்கு முன்பு என் உயிர் ஒரு பொருட்டல்ல. என்ன விலை கொடுத்தாலும் நான் எடுத்த நிலையில் இருந்து பின்வாங்க மாட்டேன்"

தன்னுடைய மரணத்திற்கு முன்பாக பகத்சிங் இப்படி கூறினார்.

"எங்களை உங்களுடைய தீர்ப்பில் போர்க் கைதியாகத் தான் கூறியிருக்கிறீர்கள். போர்க் கைதிக்கு தரும் தண்டனை தூக்கிலிடுவதில்லை. துப்பாக்கியால் சுடுவதே. எங்களை துப்பாக்கியால் சுடுங்கள். அவ்வாறு சாவதையே நான் விரும்புகிறேன்".

பகத் சிங்கின் தியாகம் எங்கே ? தனக்கு உயிர் பிச்சை கேட்டு பிரிட்டிஷாரிடம் பின்பு இந்திய அரசிடமும் மண்டியிட்ட சர்வார்கார் எங்கே ?

எனக்கு இவ்வாறு ஒப்புமை படுத்தி எழுதுவதற்கே கேவலமாக இருக்கிறது. அளவிட முடியாத தியாகத்தை மித மிஞ்சிய கேவலத்தையும் எங்ஙனம் ஒப்பிடுவது

காலம் அப்படி மாற்றி விட்டது. சரித்திரத்தை மாற்ற நினைக்கிறார்கள்.

பகத்சிங்கின் வழி வந்த வீரத்தையும் தேசப்பற்றையும் மெச்சுகிற நான், தேசவிரோதியான சர்வார்கரை எப்படி ஆதரிக்க முடியும் ? அவர் சித்தாந்தத்தை பின் பற்றுகிற RSS இயக்கத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

எனவே தான் நான் RSS எதிர்ப்பாளனாக இருக்கிறேன்

- நிறைவுற்றது -

2 comments:

வீரவன்னியன் said...

This book will be a good start for this topic

"Savarkar & Hindutva - The Godse Connection by A.G. Nooran"

There are lot more books and each has its own revelations

Kamal Hassan's "Hey Ram" was a good try towards this topic but he did not cover many factuals.

What i have given here is just an overview. There are lot more substance to prove that sarvarkar is not a role model

Anonymous said...

Savarkar is not a role model, I agree, by the same token Dr. Ramdoss is also not a role model. One preached hatred in the name of religion and the other is preaching hatred in the name of Caste.