Sunday, December 02, 2007

எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் வேணுகோபால் டிஸ்மிஸ்: அன்புமணி அதிரடி

டெல்லி, அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக (எய்ம்ஸ்)இயக்குநர் பதவியிலிருந்து டாக்டர் வேணுகோபாலை அதிரடியாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார் மத்திய நலத்துறை அமைச்சர் அன்புமணி.

எய்ம்ஸ் தொடர்பான சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதில் ஜனாதிபதி கையெழுத்திட்ட சில மணி நேரங்களில் இந்த டிஸ்மிஸ் உத்தரவைப் பிறப்பித்தார் அன்புமணி.

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது அதை மறைமுகமாக ஆதரித்தவர் வேணுகோபால் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவருக்கு அன்புமணிக்கும் மோதல் மூண்டது.

இந் நிலையில், எய்ம்ஸ் மற்றும் பிற மருத்துவ உயர் கல்வி நிறுவனங்களுக்கான ஆய்வு சட்டத் திருத்த மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஒப்புதல் அளித்ததால் இது சட்டமானது.

இதையடுத்து முதல் வேலையாக டாக்டர் வேணுகோபாலின் பதவியைப் பறித்துள்ளார் டாக்டர் அன்புமணி. நேற்று மாலை டாக்டர் வேணுகோபாலின் பதவி பறிக்கப்பட்டது தொடர்பான கடிதத்தை அவருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தார் அன்புமணி.

எய்ம்ஸின் தற்காலிக இயக்குநராக டாக்டர் தீரத் தாஸ் டோக்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சீனியாரிட்டி அடிப்படையில் டாக்டர் வேணுகோபாலுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர். எய்ம்ஸ் டீனாக இருந்துள்ள டோக்ரா, இன்று பதவியேற்றுக் கொள்கிறார்.

கடந்த 2003ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி எய்ம்ஸ் இயக்குநராக நியமிக்கப்பட்டார் வேணுகோபால். இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். அதன்படி அடுத்த ஆண்டு ஜூலை 3ம் தேதிதான் வேணுகோபாலின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.

ஆனால் இதைத் தடுக்கும் வகையிலேயே தற்போது புதிதாக எய்ம்ஸ் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, தற்போது 65 வயதுக்கு மேல் இந்தப் பதவியில் நீடிக்க முடியாது. இதன்படி வேணுகோபாலின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அந்த மனு மீதான விசாரணை முடியும் முன்பே அவரது பதவியைப் பறித்து விட்டார் அன்புமணி என்பது குறிப்பிடத்தக்கது.

வேணுகோபால் பதவி நீக்கம் தொடர்பான சுகாதாரத் துறை அமைச்சரின் முடிவுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக எய்ம்ஸ் நிர்வாகக் குழுக் கூட்டம் வருகிற 7ம் தேதி கூட்டப்பட்டுள்ளது.

Thursday, November 22, 2007

பிற்பட்டோர் இட ஒதுக்கீடு-டெல்லியில் ராமதாஸ் நாளை ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை முழு அளவில் அமலாக்கக் கோரி பாமக சார்பில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நாளை டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.




இது குறித்து பாமக எம்பிக்களான மூர்த்தி, ராமதாஸ், பொன்னுசாமி, செந்தில், தன்ராஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு என்பது 5.3 சதவீதம் அளவே உள்ளது. மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்கு பிறகும் கூட மத்திய அரசுப் பணிகளில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான பல இடங்கள் காலியாகவே உள்ளன.

இந்த இடங்களை சில சமூக நீதிக்கு எதிரான சக்திகள் நிரப்ப மறுத்து காலியாக வைத்துள்ளன.

இப்பிரச்னையில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி நாளை (வியாழக்கிழமை) ஜந்தர் மந்தர் பகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.

இதில் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், பீகார் மற்றும் உபி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் நல அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர் என்றனர்.

Sunday, April 29, 2007

நான் RSS எதிர்ப்பாளன் - I

சர்வார்கார் தேசபக்தரா ? இது அவரை துகிலுரியும் பதிவு

அந்தமான் சிறையில் சர்வார்கார் வாடியதாகவும் நாட்டின் சதந்திரத்திற்காக அவர் போராடியதாகவும் பாரதிய ஜனதா கட்சியினர் கூறுகிறார்கள். அவர்கள் தான் தேசபக்தர்கள் போலவும் அவர்களின் நிறுவனர் சர்வார்கார் தான் பெரிய தேசபக்தர் என்றும் கூறிக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் நடந்தது அவர்கள் கூறுவதற்கு எதிர்மறையானது. எதையாவது அழுத்தமாக கூறிக் கொண்டே இருந்தால் உண்மையாகிவிடும் என்ற நினைப்பு அவர்களுக்கு உண்டு.

1910ம் ஆண்டு சர்வார்கார் ஒரு கொலைக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அந்தமான் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். 1911ம் ஆண்டும், 1913ம் ஆண்டு என இரு முறை தன்னை விடுவிக்க பிரிட்டிஷ் அரசிடம் கருணை வேண்டி மனு கொடுத்தார்.

1913ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் நாள் தேதியிட்ட அந்த கருணை மனுவில் பின்வருமாறு கூறுகிறார்

"என்னை நீங்கள் விடுவித்தால் பிரிட்டிஷ் அரசுக்கு அடிபணிந்து இந்த அரசுக்கு விசுவாசமாய் இருப்பேன். என்னை நீங்கள் விடுவிப்பதால் என்னை பின்பற்றுகிறவர்களும் உங்கள் பின் அணிவகுப்போம். இந்தியாவில் இருக்கும் வழிதவறிய இளைஞர்களையும் (சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருப்பவர்களைத் தான்இப்படி சொல்கிறார்) நாங்கள் மாற்றி விடுவோம்."

என்னுடைய மொழிபெயர்ப்பு கொஞ்சம் மோசமாக இருக்கும். ஆனால் உண்மையான வாசகங்கள் இதைவிட கேவலமாக இருக்கும். அதை அப்படியே தருகிறேன்

"The Mighty alone can afford to be merciful and therefore where else can theprodigal son return but to the parental doors of the government?"

prodigal son = வீணாப்போன மகன் என்று சொல்லலாமா ?

சர்வார்கர் தன்னைத் தானே "வீணாப்போன மகன்" என்று கூறிக் கொள்கிறார். இந்த வீணாப்போனவனுக்கு கருணை காட்டுங்கள் என்று கெஞ்சுகிறார். அந்த வீணாப்போனவரைத்தான் இன்று ஒரு வீணாப்போன கூட்டம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

அந்தமான் சிறையில் இருந்த பெங்காலிய புரட்சியாளர் திரிலோக்கிய நாத் சக்ரவர்த்தி என்பார் சர்வார்காருடன் அந்தமான் சிறையில் இருந்தவர். அவர் தனது நூலில் அந்தமான் சிறையில் இருந்த நிலைமைகள் குறித்து கூறுகிறார். அந்தமான் சிறையில் நிலைமை மிக மோசமாக இருந்ததாம். அங்கு இருந்தவர்களில் மூத்த வயதினராக இருந்த சர்வார்கார் அங்கிருப்பவர்களை சிறையில் இருக்கும் நிலைமைகளை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கும் படி சொல்கிறார். அவர் சொல்வதைக் கேட்டு அனைவரும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஆனால் மற்றவர்களை உண்ணாவிரதம் இருக்க தூண்டிய சர்வார்கார் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வில்லை. இதனால் எரிச்சலடைந்த சக்ரவர்த்தி "எங்களை தூண்டி விட்டு நீங்கள் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறீர்களே" என்று கடிந்து கொண்டாராம்.

இது தான் சர்வார்கார் தியாகத்தின் லட்சணம்

இறுதியாக சிறையில் இருந்து வெளியேறும் முன்பாக அவர் எழுதிக் கொடுத்த உத்திரவாதக் கடிதம் கீழே தரப்பட்டுள்ளது

"I hereby acknowledge that I had a fair trial and just sentence. I heartilyabhor methods of violence resorted to in days gone by and I feel myselfduty bound to uphold law and constitution (British, added) to the best of mypowers and am willing to make the 'reform' a success in so far as I may beallowed to do so in future"

இங்கு அவர் கூறும் 'reform' - Montague Chelmsford proposals of 1919.

இதனை காந்தியார் மற்றும் வேறு எந்த தேசபகதர்களும் ஏற்றுக் கொள்ள வில்லை.

இவ்வாறு இந்திய நலனுக்கு பாடுபட்ட சர்வார்கார் ஹிட்லருக்கு பின் வருமாறு ஆதரவுதெரிவித்தார்.

"Germany has every right to resort to Nazism and Italy to Fascism and eventshave justified that those isms and forms of governments were imperative andbeneficial to them under the conditions that obtained there...."

தன்னுடைய பதிவில் டோண்டு இந்தியாவின் நலனுக்காகத் தான் ஹிட்லரை தாங்கள் ஆதரித்ததாக கூறுகிறார். ஆனால் இந்த அறைகூவல் விடுப்பதற்கு பல வருடங்கள் முன்பாகவே இந்தியாவின் நலனை பிரிட்டிஷாரிடம் அடகு வைத்து விட்டார்கள்.

சர்வார்காரின் அறைகூவலையும், நேதாஜியின் ஆதரவையும் ஒன்றாக்கி பார்க்க டோண்டு முயலுகிறார். நேதாஜியின் கால் தூசிக்கு கூட சர்வார்காரை சம்பந்தப்படுத்த முடியாது என்பதற்கு மேலே கூறியுள்ள ஆதாரங்களே போதுமானாது.

தங்களுக்கு சலுகையும், அடிபணிந்து ஏவல் செய்ய ஒரு வேலையும் இருந்து விட்டால் யாருக்கு வேண்டுமானாலும் கூஜா தூக்குவார்கள். அப்படித் தான் சர்வார்கார் கூஜா தூக்கினார்.

ஒரு முறை அல்ல பல முறை.

1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தியார் ஆரம்பித்தார். அரசு ஊழியர்களை அரசுப் பணியில் இருந்து விலகுமாறு கூறினார்.

அப்பொழுது சர்வார்கார் "இந்துக்கள் யாரும் தங்கள் அரசாங்க உத்தியோகங்களை விட்டு விலகக் கூடாது. அரசு ஊழியர்கள் அரசாங்கத்திற்கான தங்கள் கடமைகளை (பிரிட்டிஷ் அரசுக்கு) தொடர்ந்து செய்து வர வேண்டும்" என்று கூறினார்.

பதவி சுகம் அதிகாரம் என இதற்காகத் தான் இவர் பலரை பல நேரங்களில் ஆதரித்தார் என்பது எல்லோருக்கும் புரியும். டோண்டுவுக்கும் புரியும். புரியாதது போல நடிப்பார்.

இங்கு நான் டோண்டு என்று கூறுவது டோண்டுவை மட்டும் அல்ல, மொத்த கூட்டத்தையும் தான். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தானே பதம். அதற்கு தான் டோண்டுவை அடையாளம் காட்டுகிறேன்

புது ப்ளாக்கரை சோதனை செய்வதற்கான மீள்பதிவு. சோதனை செய்ய இது தான் பொருத்தமான பதிவாக தோன்றியது ;-)