Monday, February 28, 2005

லல்லுவும், அத்வானியும்

நமக்கு சில விஷயங்கள் சரியா புரியலைங்க

இந்த பாரதிய ஜனதா கட்சி இருக்கே, அது எப்ப பார்த்தாலும் குற்றச்சாட்டு உள்ள மந்திரிங்கள பாரளுமன்றத்துல புறக்கணிப்போம்னு சொல்றாங்க.நல்ல கொள்கைங்க. நமக்கும் அதுல உடன்பாடு உண்டுங்க.

இந்தப் பத்திரிக்கைங்க. லாலுவை கிழி கிழின்னு கிழிக்கறாங்க. பத்திரிக்கைங்க மட்டும் இல்லைங்க. இந்த வட நாட்டுல இருக்கிற நிறைய தொலைக்காட்சிங்க, அவரை கோமாளி மாதிரி சித்தரிக்கிறாங்க. பார்க்க சிரிப்பா இருக்கும்ங்க. சரியா தாங்க சொல்றாங்க. நமக்கும் அதுல உடன்பாடு உண்டுங்க.

குற்றம் செஞ்சவங்க, குற்றப்பத்திரிக்கையில இருக்கறவங்க, முக்கிய பதவிக்கு வரக்கூடாதுன்னு எல்லோரும் சொல்றாங்க. நல்ல கருத்துங்க. இதுல மாற்று கருத்து இருக்க முடியாதுங்க.


ஆனா பாருங்க, நம்ம அத்வானி, அவரு பெரிய தலைவருங்க.

ரத யாத்திரை போனாருங்க. கூடவே நிறைய கூட்டம் சேர்த்துக் கிட்டு போனாருங்க. எல்லோரும் கத்தி, கம்பு, கட்ப்பாரை எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு போனாங்க. போய் அயோத்தியில கூடி மசூதிய இடிச்சாங்க.
அவரு மேல கேசு போட்டாங்க. நம்ம சி.பி.ஐ, குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் பண்ணாங்க. அவரு மட்டும் இல்லைங்க. நம்ம ஜோஷி, அப்புறம் இப்ப சமீபத்துல அத்வானி கூட பப்ளிக்கா சண்டை போட்டாங்களே, ஒரு சாமியாரு, பெரு கூட என்னவோ பெப்சி உமா, அய்யய்யோ, இல்லைங்க, உமாபாரதி, அவங்க தாங்க. எல்லாரும் குற்றப்பத்திரிக்கையில இடம் பிடிச்ச புண்ணியவான்கள்.

குற்றப்பத்திரிக்கையில பெயர் இருந்தாலும் மூன்று பேரும் அமைச்சராகிட்டாங்க. அப்புறம் நம்ம வாஜ்பாயை மிரட்டி, பாவம் அவரு என்ன பண்ணுவாரு அவரு வெறும் முகமுடி தானுங்களே, அத்வானி துணை பிரதமராயிட்டாரு. அப்பவும் அவரு மேல குற்றப்பத்திரிக்கை இருக்குங்க.

அப்புறமா, லக்னோவுல இதப் பற்றி விசாரிக்க ஒரு ஸ்பெஷல் கோர்ட் வச்சாங்க. நம்ம மாயாவதி அம்மா கூட கூட்டணி சேர்ந்து அவங்கள ஒரு மேடையில புகழ்ந்து தள்ளினாரு. ஸ்பேஷல் கோர்ட் அம்பேல் ஆச்சு.
திடீர்னு ஒரு நாளு அத்வானி மேல இருக்கற கேஸ் காணாம போயிடுச்சி. அத்வானி தூய்மை அடைஞ்சிட்டாரு.

நம்ம லல்லு மேல இருக்கறது ஒரு ஊழல் வழக்குங்க.ஆனா நம்ம அத்வானி மேல இருந்தது கிரிமினல் வழக்குங்க. லல்லுவ கிழி கிழின்னு கிழிக்கற பத்திரிக்கைங்க, நம்ம அத்வானிய ஏங்க என்னைக்குமே அதிகமா கண்டுக்கிறதில்லை.

ஏன்னே நமக்கு புரியலைங்க

அப்புறங்க, ஜார்ஜ் பெர்னாண்டஸ் அப்படின்னு ஒருத்தர் இருக்காருங்க. அவரு கட்சிக்காரங்க கட்டு கட்டா பணம் வாங்கியதை படம் புடிச்சி போட்டாங்க. அவரு சில மாதம் அமைச்சரவையில இருந்து வெளிய இருந்துட்டு திரும்ப உள்ள வந்துட்டாரு.

அப்ப எங்கங்க போச்சு இந்தியாவோட தூய்மை.

ஏன்னே நமக்கு புரியலைங்க

3 comments:

Anonymous said...

naan enna solla

Anonymous said...

I too wonder about this things and I realised that "thappai thappu illama panninal thappu thappey illai".

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

நீதிமன்றம் விடுவித்த ஒருவரை குறைகூறுதல் நன்றாக படவில்லை. நான் பா.ஜ.க அனுதாபி அல்ல.